Video wird geladen...

Video konnte nicht geladen werden

Zur Startseite

தோசையா? இட்லியா?

59,755 Aufrufe • vor 3 Monaten •via X (Twitter)

0 Kommentare

Keine Kommentare verfügbar

Kommentare vom Original-Post werden hier angezeigt

Ähnliche Videos

முன்னாள் இந்திய குழந்தைகள் நலச் சங்க (IAP) தலைவர் என்கிறார்களே, அது எந்த வருடம்? இவருடைய புகைப்படம் மற்றும் அவர் வழங்கிய தகவல்களைச் சரிபார்த்தால், அந்தப் பெயரில் அப்படி ஒரு நபர் இருந்ததே இல்லை! இவர் எந்தக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார் என்பதும் குறிப்பிடப்படவில்லை. அவரது கண்ணாடியைப் பார்த்தாலே தெரிகிறது, யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே படிக்கிறார் என்று! ஒரு தவறை மறைக்க எத்தனை பொய்கள்? இவர் உண்மையிலேயே ஒரு குழந்தைகள் நல மருத்துவர்தானா என்ற கேள்வியே இப்போது எழுகிறது. ரீல்ஸ் போடுங்கள், ஆனால் வெறும் வீடியோக்களை மட்டுமே போட்டு ஆட்சியை நடத்திவிடலாம், குற்றங்களை மறைத்துவிடலாம் என்று நினைத்துவிட வேண்டாம்! இந்தத் துறையில் உள்ள உண்மையான மருத்துவர்களின் பட்டியலில் இவரது பெயர் எங்குமே இல்லை. Source:

ThE PrOfFesSOr🖤

28,392 Aufrufe • vor 22 Stunden

இந்த ஏழை விவசாய பெண்மணியின் புரிதல் கூட நமக்கு இல்லையோ என்று தோன்றுகிறது.. மிகச் சரியாக பதிவு செய்திருக்கிறார் மக்களின் மனநிலையை.. .. தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதியில் 2500 பணத்துக்காகவோ, தங்க மோதிரத்துக்காகவோ, சிலிண்டருக்காகவோ, இலவச பேருந்து தருவார் என்றோ மக்கள் வாக்களிக்கவில்லை என்பதையும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ளவும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே தங்களுக்கு வாக்களித்து இருப்பதாக ஏழை விவசாயி பெண் ஒருவர் பேசியிருப்பது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது TVK Vijay Vijay

தங்க.காளிப்பாண்டி

19,363 Aufrufe • vor 1 Monat

அழகாக தமிழ் பேசும் ஜார்கண்ட் பழங்குடியின குழந்தைகள்! சில செய்தி சேகரிப்பு தருணங்கள் வாழ்வில் மறக்க முடியாததாக இருக்கும். அப்படி ஒன்று தான் இது ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் பயணம் செய்து நக்சல் பாதிப்பு அதிகம் இருக்கும் கிராமங்களில் ஒன்றான பிர்பாங்கி என்ற கிராமத்திற்கு சென்றோம். இந்த கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினர் பிழைப்பிற்காக தென் மாநிலம் குறிப்பாக தமிழ்நாடு கேரளா மாநிலங்களுக்கு செல்கிறார்கள் சிலர் தங்கள் குடும்பத்துடனே வந்து சென்று விடுகின்றனர் குழந்தைகளை தமிழ் பள்ளிக்கூடங்களில் சேர்த்து படிக்கவும் வைக்கின்றனர். அப்படி தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார் புர்மெனி முண்டா என்னும் இந்த சிறுமி. இங்கிட்டு அங்குட்டு என இந்தச் சிறுமி பேசிய தமிழ் ஆச்சரிய பட வைத்தது. வெளி மாநிலத்திலிருந்து வந்திருக்கீங்க உங்களுக்கு தமிழ் மொழி தெரியாது எப்படி கத்துக்கிட்டீங்க என கேட்டபோது எல்லாருமே சொல்லிக் கொடுத்தாங்க அங்க எல்லாருமே என் கூட பிரெண்ட்ஸ் ஆயிட்டாங்க என அந்த சிறுமி சொல்ல சொல்ல எனக்கு நெஞ்செல்லாம் பூரித்து போனது. ஏதோ ஒரு தெரியாத ஊர் தெரியாத மொழி பேசும் ஏதோ ஒரு இனத்தின் குழந்தையை நம் மக்கள் தன் இன குழந்தையாகவே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் நம்ம ஊர் குழந்தைகளுக்கு எவ்வளவு பக்குவமான மனம் இருந்தால் இந்த சிறுமிக்கு எந்த ஒரு கசப்பான காயத்தையும் கொடுக்காமல் இருந்திருக்கிறார்கள். நம் மண் ஒரு குடும்பத்திற்கு கல்வி என்னும் பேரொளியை பாய்ச்சி உள்ளது. விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ள சிறுமி மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறார் காலையில் சென்றால் மதியம் உணவுக்கு வந்துவிட்டு பிறகு மீண்டும் மாடு மேய்க்க சென்று மாலை 4 மணிக்கு வீடு திரும்பி விடுகிறார். ஆனால் அவர் நினைப்பு எல்லாம் பள்ளிக்கூடத்தில் தான் இருக்கிறது எப்போது மீண்டும் அங்கு போவோம் என்று இருக்கிறது என்பதை தான் மீண்டும் மீண்டும் சொல்கிறார். படிடா கண்ணு நல்லா படிச்சு முன்னேறி வாடா கண்ணு என சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். நம் மண் வந்தாரை எல்லாம் வாரி அணைத்து வாழ்விக்கும் மண், அதனால் தான் அது வாழ்கிறது,வாழும், வாழ்வாங்கு வாழும்!!! ஒரு தமிழனாக மிகப்பெருமையாக உணர்ந்த தருணம்!!!

Niranjan kumar

63,327 Aufrufe • vor 1 Jahr