Загрузка видео...

Не удалось загрузить видео

На главную

தோட்டத்துல பொழி எல்லாம் ஒரு 20-25 நாத்து நடனும் 🚶‍♀️🚶‍♀️

26,967 просмотров • 19 дней назад •via X (Twitter)

Комментарии: 0

Нет доступных комментариев

Здесь появятся комментарии из оригинального поста

Похожие видео

ஒரு சந்தேகம்? இந்த எக்ஸ்போ நடத்துறவங்க கிட்டத்தட்ட 100-200 கடை போடறாங்க .. avg 150 கடைக்கு 10000 வச்சாலும் 15 லட்ச ரூபாய் குறைந்தபட்சம் ஸ்டால் மூலமா வரும் .. அதுல கல்யாண மண்டபம் ரெண்டு நாளைக்கு 6 லட்சம் .. fabrication ஒரு 3 லட்சம். ப்ரமோ ஒரு 1 லட்சம் போட்டாலும் 2 நாளைக்கு கிட்டத்தட்ட 5 லட்சம் லாபம் வரும்ல .. இதுக்கு அவங்க நிச்சயமா எந்த ஒரு பில்லும் தர போறது இல்ல ?.. அதுக்கு வரி கட்ட போறதும் இல்ல ? .. மாசத்துக்கு 4-5 எக்ஸ்போ பண்றாங்க .. எப்படி பார்த்தாலும் ஒரு பத்து லட்சம் ரூபாய் குறைந்தபட்சம் வரி இல்லா வருமானம் வரும் .. அடுத்து இவ்வளவும் வெறும் எக்ஸ்போ ஆர்கனைசருக்கு மட்டும் .. இப்ப அங்க கடை போடறவங்க மூதலீடு எப்படி பார்த்தாலும் ஒரு 25 லட்ச ரூபாய்க்கு இருக்கும் .. இதுக்கு எல்லாம் சேல்ஸ் டாக்ஸ் கட்ன மாதிரி தெரியலை .. ஏன்னா கையில் எழுதுன பில் தான் தருவாங்க ?.. ஒரு மாசத்துக்கு கோடிகள்ல வியாபாரம் வரி கட்டாம நடக்குது .. இப்ப இன்ஸ்டாவுல ஏன் எல்லாரும் எக்ஸ்போ நடத்துறேனு கிளம்பிட்டாங்கனா இந்த உடனடி வரி இல்லா வருமானம் தான் .. அப்புறம் ஸ்டால் போடறவங்களுக்கு வியாபாரம் நடக்கலனாலும் கேட்க முடியாது ... இதெல்லாம் அரசு துறைகள் கவனிக்கறாங்களா ....

🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️

44,928 просмотров • 20 дней назад

MRP 20 ரூவா உள்ள சிப்ஸ் பாக்கெட் 23 ரூபாய்க்கும்..20 ரூபாய் தண்ணீர் பாட்டில் 25 ரூபாய்க்கும் விற்கிறார்கள் . அந்த 5 ரூபாய் எந்த அமைச்சருக்கு போகிறது?. போக்குவரத்து துறை அமைச்சருக்கு போகிறதா அல்லது முதல்வருக்கு அதில் பங்கு போகிறதா? ஒரு நாளைக்கு தமிழ்நாடு முழுவதும் எத்தனை லட்சம் பாட்டில்கள் இப்படி விற்கப்படுகின்றன. Busstand-ல் கடை போட்டால் MRP-ஐ விட கூடுதலாக விற்கவேண்டும் என கடைக்காரர்களை கட்டாயபடுத்துவது யார்? தண்ணீர் பாட்டில் கொள்முதல் விலை 6-8 ரூபாய் தான். விற்கும்விலை 25 ரூபாய். போக்குவரத்து துறை அமைச்சர் இதில் பங்கு வாங்கவில்லை என்றால் இதன்மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை இல்லை எனில் பங்கு போகிறது என்று தான் பொருள் ஆகும்.

Wild South Raiders

24,380 просмотров • 1 месяц назад

இன்று தமிழ் நாட்டில் நாம் காணும் அரசியல் மாற்றம், ஏதோ தானாக விளைந்ததல்ல.அது ஒரு 'Narrative War. இது 2018-ல் திரிபுராவில் மாணிக் சர்க்கார் என்ற 25 ஆண்டுகால கோட்டையை வீழ்த்த பா.ஜ.க பயன்படுத்திய அதே 'Information Warfare' உத்தியின் அச்சு அசலான மறுபதிப்பு!. அன்று திரிபுராவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்த பா.ஜ.க கையில் எடுத்த ஆயுதம் மிகைப்படுத்தல். எங்கோ ஒரு மூலையில் நடக்கும் குற்றத்தை, மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது போன்ற ஒரு Perception.சமூக வலைதளங்கள் மூலம் கட்டமைத்தனர். "சலோ பல்டாய்" என்ற ஒற்றை வாசகத்தை மக்களின் ஆழ்மனதில் விதைத்தனர். அதே Formula தான் இங்கும்! இதையே தான் தமிழ் நாட்டிலும் கட்டமைத்தனர். ஒட்டுமொத்த இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பில் முன்னணியில் இருக்கும் தமிழ் நாட்டை, ஏதோ ஒரு சில சம்பவங்களை வைத்து 'பாதுகாப்பற்ற மாநிலம்' என்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் மூலம் இளைஞர் மனதில் பதிய வைத்தனர். ஒரு நீண்ட கால சமூகப் பிரச்சனையை, இப்போதைய நிர்வாகச் சீர்கேடு என்பது போல 24 மணிநேரமும் ஒரு 'Narrative' செட் செய்யப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளில் நாம் அடைந்த கல்வி, மருத்துவம் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியைப் பற்றித் தெரியாத ஒரு தலைமுறையை (Gen-Z) குறிவைத்து, "எதுவுமே நடக்கவில்லை, எல்லாம் மோசம்" என்ற குருட்டுத்தனமான நம்பிக்கையை விதைத்தனர். இதற்கு இவர்கள் பயன்படுத்திய பிரதான தளம் இன்ஸ்டாகிராம். சினிமா இன்ஃப்ளூயன்சர்கள், லைஃப்ஸ்டைல் வீடியோ போடுபவர்கள் என ஒரு பெரும் கூட்டத்தையே இதற்காகத் தயார் செய்து, செய்திகளை விட 'வைரல் வீடியோக்கள்' மூலம் பரப்புரை செய்தனர். வரலாற்றுப் புரிதல் இல்லாத ஒரு தலைமுறையை, மிக எளிதாக ஒரு 'Digital Trap'-இல் விழ வைத்துவிட்டனர். இவர்களுக்கு ஆதாரப்பூர்வமான விவாதங்களை விட, 15 வினாடி 'BGM' போட்ட ரீல்ஸ்கள் தான் தேர்தல் அறிக்கையாகத் தெரிந்தது. வளர்ச்சியை அனுபவித்துக்கொண்டே, வளர்ச்சி அடையவில்லை என்று நம்பும் ஒரு முரண்பாடான தலைமுறையை இந்த 'நாடக கும்பல்' உருவாக்கியிருக்கிறது. நிஜத்திற்கும் நிழலுக்குமான வித்தியாசம் தெரியாமல், இன்ஸ்டாகிராம் அல்காரிதத்தில் சிக்கி வாக்களித்திருக்கிறார்கள். பிம்பங்கள் ஆட்சியைக் கைப்பற்றலாம், ஆனால் அவை ஒருபோதும் வளர்ச்சியைத் தராது. திரிபுராவில் அன்று விதைக்கப்பட்ட 'மாற்றம்' இன்று எங்கே இருக்கிறது என்பதை உணர்ந்தால், நாளை தமிழ் நாட்டின் நிலை புரியும்! #DigitalPolitics #TNPolitics #PerceptionWar DMK M.K.Stalin Udhay Dr. T R B Rajaa DMK IT WING

Digital Kadai

66,075 просмотров • 3 месяцев назад

வணக்கம் தென்காசி, விருதுநகர்! 👋 நம்ம ஊரின் ரயில் தேவைகளைப் பற்றி கொஞ்சம் பேசலாமா? இரண்டு நாட்களுக்கு முன் ஹூப்ளி சென்று வந்தோம். அங்கே இருந்தது மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே. ஆனால் அதற்காக தென்காசியிலிருந்து கிட்டத்தட்ட 20 மணி நேரப் பயணம் - இரவுத் தூக்கமே இல்லை! எல்லாம் ஒரே ஒரு நோக்கத்திற்காக: பெங்களூரு–தென்காசி நேரடி ரயில் சேவைக்காக. இது மட்டும் அல்ல… நம்ம தென்காசி மாவட்டத்திற்கும் சுற்றுப்புற மக்களுக்கும் இன்னும் என்னென்ன ரயில் சேவைகள் தேவை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 💬 உங்கள் கருத்துகளையும் கோரிக்கைகளையும் கமெண்டில் பதிவிடுங்கள். ஒவ்வொன்றையும் தொகுத்து ரயில்வே நிர்வாகத்திடம் கொண்டு செல்ல முயற்சிப்போம். #tenkasi #virudunagar #bangalore #train

Ananthan Ayyasamy

12,099 просмотров • 18 дней назад

அண்ணாமலை வந்த புதிதில் கோவையில் 25 கோடி இறக்கி வார் ரூம் போட்டு 3000ம் பேருக்கு மாச சம்பளம் கொடுத்து..டிவிட்டுக்கு ரெண்டு ரூபாய்ன்னு ரேட் வச்சு.. திமுக மேல் ரா பகலா பொய் அவதூறு எல்லாம் பரப்பி பார்த்தான் ஒரு கூந்தலும் புடுங்க முடியல. தமிழ் நாட்டை தலைகீழா புரட்டுவோம்னு வந்த அண்ணாமலைய ஆட்டை தோல் உரிச்ச மாதிரி உரிச்சி அனுப்பியது #இணைய_உடன்பிறப்புகள் படை.. 💪💪 இப்ப இந்த தற்குறி அனில் அவன் குஞ்சுகளை வச்சி கூச்சல் போட வச்சிருக்கான்.. அதுங்களும் புது படம் பார்த்த ஜோரில் ரொம்ப துள்ளுதுங்க... விரைவில் இந்த அணிலுக்கு சுண்ணாம்பு தடவி சூ*** குத்தி மரத்தை விட்டு கீழே தள்ளப்படும் 😂😂😂 #தற்குறி_விஜய்_கழகம்

Black Panther

41,298 просмотров • 9 месяцев назад

அடிப்படைப் பொருளாதாரம் புரியாமல் எப்படியெல்லாம் நம்மை மூளைச்சலவை செய்கிறார்கள் பாருங்கள் (watch the video below). ஒரு பொருள் உற்பத்தியாகும் போது அதை வேறு எங்கேயோ இருக்கும் நுகர்வோருக்கு எடுத்துச் செல்வதே ஒரு விவசாயியின் நோக்கமாக இருக்க முடியும். பாட்டி மூன்று ரூபாய்க்கு விற்கும் சோளம் பெருநகரங்களில் 20 ரூபாய். அந்த 17 ரூபாய் லாபம் என்பது திருட்டு தானே என தங்கள் மூளையைப் பிழிந்து அதில் எஞ்சி நிற்கும் ஒரு அறிவான கருத்தை நமக்கு நீட்டுகிறார்கள் இந்த கம்யூனிஸ்ட் சினிமாக்காரர்கள். சரி, இவர்களிடம் பொருளாதாரம் கற்ற ஒரு விவசாயி அந்த 3 ரூபாய் சோளத்தை நானே விற்கிறேன் என அவர் அறுவடை செய்த கிராமத்தில் அவரே ஒரு கடையைப் போட்டு வியாபாரம் செய்தால் எத்தனை லட்சத்தை அள்ளிவிட முடியும்? இவர் விற்கும் 3 ரூபாய் சோளத்தை வாங்க பக்கத்து ஊரிலிருந்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு யார் வருவார்? காருக்கு 300 ரூபாய் டீசல் போட்டு எந்த பக்கத்து நகரத்திலிருந்து யார் வருவார்? அந்தக் குக்கிராமத்தில் அவரின் 50 மூட்டைச் சோளத்தில் 5 மூட்டை வேண்டுமானால் அதிகபட்சம் அவரால் விற்க முடியும். மொத்தமும் நஷ்டமாகி விவசாயமே அழிந்துபோகும். நம்ம விவசாயி அந்த 3 ரூபாய் சோளத்தை 5 ரூபாய் என விலை வைத்து பக்கத்து ஊர் மொத்தக் கொள்முதல் வியாபாரிக்கு விற்கிறார் என்றால், 3 ரூபாயிலிருந்து 5 ரூபாய் உயர்வு என்பது 66.6% லாபம். இவரிடமிருந்து மொத்தமாக மூட்டைகளை வாங்கிய ஒருவர் லாரி மூலம் சென்னைக்கு அதை ஏற்றுமதி செய்கிறார். குடவுன் வாடகை, தொழிலாளிகள் சம்பளம், ஓட்டுநர் சம்பளம், எரிபொருள் என இப்போது அந்த 5 ரூபாய் சோளத்தில் இவை எல்லாம் சேர்ந்து 10 ரூபாயாக மாறி நிற்கும். அதை offload செய்வதற்கான கூலி, அவர்களுக்கான லாபம் எல்லாம் சேர்த்து நம்ம சோளம் இப்போது 15 ரூபாய். பெருநகரங்களின் பல்வேறு hub மூலம் மூலை முடுக்கெல்லாம் அந்த சோளம் போகும். கடைசியில் சென்னைத் தள்ளுவண்டிக்காரர் அவருக்கு ஒரு லாபம் வைத்து, பணக்காரர்களுக்கு என கொஞ்சம் அதிகம் விலை வைத்து (ஒரு பொருள் எங்கு இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு அதன் விலை மாறும்; மார்க்ஸ் பேசிய Labour Theory of Value என்பதை நான் தவறு என நம் காணொளிகளில் காட்டியிருப்பேன்), நமக்கு 20 ரூபாய் என விற்பார். ஒரு மக்காச்சோளம் சாப்பிட நான் ஈரோட்டுக்கோ திண்டுக்கல்லுக்கோ செல்ல வேண்டியதில்லை. சென்னையில் என் வீட்டு வாசலில் வாங்கிக்கொள்ளலாம். இப்போது சோளம் நன்கு விற்பனையானால் இந்த cycle அப்படியே reverse-ல் நடக்கும். சோளத்திற்கான தேவை அதிகமானதால் அந்த தள்ளுவண்டிக்காரர் சென்னை hub-ல் அதிகம் வாங்குவார், அந்த முதன்மை hub-காரர்களுக்கு அதிக மூட்டைகள் தேவைப்படும், அவர்கள் அந்த மொத்தக் கொள்முதல் அண்ணாச்சியிடம் அதிக மூட்டைகளைக் கேட்பார்கள், அவர் அந்த விவசாயியிடம் அதிக சோளத்தைக் கேட்பார், அந்த விவசாயி அடுத்த ஆண்டு அதிகமாக சோளத்தை விவசாயம் செய்து அதிக மகசூலைப் பெறுவார். அதன் மூலம் தன்னந்தனியாக விற்றுக்கொண்டிருந்ததை விட 66.6% அதிக லாபத்தில் நிறைய மூட்டைகளை விற்க முடியும். இந்த cycle பெரியது. இதில் பயனடைவோர் லட்சக்கணக்கானோர். கம்யூனிஸ்ட்காரன் பேசும் சினிமா வசனங்களைக் கேட்டுக்கொண்டிருந்தால் கோவணம் கூட மிஞ்சாது.

victoria smith

53,504 просмотров • 1 год назад