Video yükleniyor...

Video Yüklenemedi

Ana Sayfaya Dön

தூத்துக்குடி மக்கள் கவனிச்சிக்கோங்க.

30,252 görüntüleme • 11 ay önce •via X (Twitter)

0 Yorum

Yorum bulunmuyor

Orijinal gönderinin yorumları burada görünecek

Benzer Videolar

*தூத்துக்குடியை ஆளும் ஒற்றை குடும்ப வாரிசு தவெகவை கண்டு அஞ்சுகிறதா?* தூத்துக்குடி நகராட்சியாக‌ இருந்த போதிலும் மாநகராட்சியாக தரம் உயர்ந்த போதிலும்‌ எந்தவிதமான வளர்ச்சியையும் இதுவரையில் பெறவில்லை, குடும்ப அரசியல் இதுவரையில் பெறவும் விடவில்லை. மிதமான மழையானாலும் கண மழையானாலும் தூத்துக்குடி மாநகரின் "முக்கிய பிரதான சாலைகள் மழை நீரில் மூழ்கும் அபாயம் இன்றும் தொடரத்தான் செய்கிறது," இதில் மாற்றம் ஏதுமில்லை. இதன்படி கடந்த (16.10.2025) வியாழன் அன்று பெய்த மழையிலும் இதே நிலைதான் தூத்துக்குடி மாநகருக்குள் ஏற்பட்டுள்ளது. இந்நிலை நம் மாநகரில் தீராத பிரச்சனையாகவும் இவர்களால் தான் தொடர்கிறது. இதெற்கெல்லாம் ஒரே காரணம்...? ஆளும் ஒற்றைக் குடும்ப ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையற்ற, முறைகேடான செயல்பாடே காரணம் என்பதை தூத்துக்குடி மக்கள் அறிவார்கள்... ஸ்மார்ட் சிட்டி மூலம் ஒதுக்கப்பட்ட நிதியெல்லாம் கடந்த ஆண்டுகளில் ஆளும் ஆட்சியாளர்களால் முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்பதும் பெய்த கண மழையின் மூலமாக நிதர்சனம் ஆகிறது. மேலும் குடும்ப அரசியலின் வளர்ச்சி தூத்துக்குடியில் அசூர வளர்ச்சி பெற்றுள்ளது, ஆனால் இவர்களால் தூத்துக்குடி தொகுதியின் வளர்ச்சியும், மாநகரின் வளர்ச்சியும் எம் மன்னில் முகவரி இன்றி புதைந்து கிடக்கிறது. அமைச்சர் மற்றும் மேயர் உள்ப்பட தமிழக அரசின் செயல்திட்டங்களை மக்கள் மத்தியில் விவரிப்பதை நிறுத்திவிட்டு, இந்த தொகுதிக்கு நீங்கள் கொடுத்த‌ வாக்குறுதி என்னாச்சு? என்பதை விளக்க முன்வாருங்கள். தவெக தொடங்கிய பின் விடியல் ஆட்சியின் விளம்பரம் கூடுதலாகி வின்னை தொட்டு முட்டிவிட்டது. அந்தளவுக்கு எங்கள் மீது அமைச்சருக்கு பயம் வந்துவிட்டது. கடந்த காலங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் அமைச்சர் எப்படி நடந்து கொண்டார் என்பதை எம் தூத்துக்குடி மக்கள் அறிவார்கள். ஆனால் நேற்றைய தினம் என்ன நடந்தது..? சட்டமன்ற கூட்டத் தொடருக்கு சென்ற அமைச்சர் மழையை காரணம் காட்டி தூத்துக்குடிக்கு ஓடோடி வந்து இருக்கிறார். இதுவும் இவரா வந்தாரா? உள்ளாட்சித்துறை அமைச்சரால் விரட்டியடிக்கப்பட்டாரா? என்றும் தெரியவில்லை. எது எப்படி ஆனாலும் தூத்துக்குடியில் குடும்ப அரசியலுக்கு தவெக தான் எதிர்கட்சி என்பதை உணர்ந்தமையால், கடந்த சுமார் 6 மாத காலமாக அமைச்சரின் மக்கள் பணி தூத்துக்குடி களத்தில் சூடு பிடிக்கிறது. மீண்டும் மீண்டும் எம் மக்களை ஏமாற்ற முடியாது, தூத்துக்குடியில் நிலவும் குடும்ப அரசியலுக்கு தவெக 2026ல் முடிவுரை எழுதும், எழுத வைப்போம்... எனவே நாங்க 90 சதவிகிதம் வேலையை முடிச்சிட்டோம், எப்படி பட்ட கண மழை வந்தாலும் இனி மாநகரில் மழை நீர் தேங்காது என்று வெற்று அறிக்கை... வெற்று விளம்பரம்... செய்வதை விடுத்து மக்கள் நலனில், அக்கறை கொண்டு, மழைநீர் தேங்காத வண்ணம் முறையான நடவடிக்கை எடுக்க, ஆளும் விளம்பர மாடல் ஆட்சியாளர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்... என்றும் மக்கள் பணியில், A. அஜிதா ஆக்னல் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் தமிழக வெற்றிக் கழகம்... N Anand Aadhav Arjuna Venkat M.Com, MBA, M.L., CTR.Nirmalkumar Rajmohan Loyola Mani TVK Party HQ TVK Vijay

Ajitha Agnel

26,644 görüntüleme • 10 ay önce