Video yükleniyor...

Video Yüklenemedi

Ana Sayfaya Dön

"பழனி பாபாவிடம் மாட்டிக்கொண்ட பெரியார் தொண்டர்! 😅"

13,948 görüntüleme • 2 ay önce •via X (Twitter)

0 Yorum

Yorum bulunmuyor

Orijinal gönderinin yorumları burada görünecek

Benzer Videolar

பழனி பாபா அடிக்கடி சொல்லும் கருத்து: "இந்து சமூகத்தில் இருந்த மூடநம்பிக்கைகளையும், ஜாதி கொடுமைகளையும் ஒழிக்கப் பெரியார் எப்படிப் போராடினாரோ, அதேபோல முஸ்லிம் சமுதாயத்தில் ஊடுருவியிருக்கும் மூடநம்பிக்கைகளை (தர்கா வழிபாடு, சந்தனக்கூடு போன்றவை) ஒழிக்க ஒரு பெரியார் தேவை. தந்தை பெரியார் இந்த மண்ணில் பகுத்தறிவு விதையை விதைக்கவில்லை என்றால், இன்று முஸ்லிம்களாகிய நீங்கள் இன்னும் மோசமான அடிமைகளாக இருந்திருப்பீர்கள். சமூக நீதியைப் பற்றிப் பேச உங்களுக்குப் பெரியார் தான் கற்றுக்கொடுத்தார். (பழனி பாபா தாஜா செய்து பேச மாட்டார். மாறாக, அவர்களை அவமானப்படுத்துவது போலப் பேசி, அவர்களின் 'ரோஷத்தைத்' தூண்டுவார்) "உங்களுக்கு ரோஷம் இல்லையா?", "நீங்கள் செத்த பிணங்களா? மற்ற அரசியல்வாதிகளை விமர்சிப்பதற்கு முன்பு, உன் சொந்தச் சமூகத்திற்குள் இருக்கும் அழுக்குகளைத் துடைக்க வேண்டும். "வீட்டைச் சுத்தப்படுத்தாமல் வீதிக்கு வராதே" என்பதுதான் எனது வாதம். வெள்ளை வேட்டி கட்டிய அரசியல் தலைவர்களை விட, மார்க்கத்தை விற்கும் போலி ஆலிம்கள் ஆபத்தானவர்கள்" என்பது அவரது அவர் விமர்சனம். உங்கள் முன்னோர்கள் வாள் ஏந்திப் போராடினார்கள் என்று மேடையில் வீரவசனம் பேசுகிறீர்கள். ஆனால், இன்று உங்கள் வீட்டில் இருக்கும் கத்தி கூட துருப்பிடித்துக் கிடக்கிறது. வரலாற்றைப் பேசிப் பெருமைப்படாதீர்கள்; வரலாற்றைப் படைக்கப் பழகுங்கள். பெண் வீட்டில் காசு வாங்கித் திருமணம் செய்யும் நீங்கள் எல்லாம் மீசை வைத்துக் கொள்ளத் தகுதியற்றவர்களா? அந்தப் பெண்ணின் தந்தை கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தில் நீங்கள் வாழ்வது, சமூக ரீதியாகச் செய்யப்படும் விபச்சாரம். விமர்சனங்கள் எப்போதும் "அறுவை சிகிச்சை" போல தான் இருக்கும், வலித்தாலும் அது சமூகத்தின் நோயைக் குணப்படுத்தும் நோக்கம் கொண்டது -பழனி பாபா

𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩

23,486 görüntüleme • 7 ay önce