Video yükleniyor...

Video Yüklenemedi

Ana Sayfaya Dön

மு.க.அழகிரி மகள் அடாவடி..

18,966 görüntüleme • 18 gün önce •via X (Twitter)

0 Yorum

Yorum bulunmuyor

Orijinal gönderinin yorumları burada görünecek

Benzer Videolar

சில தருணங்கள் விவரிக்கவே முடியாத உணர்ச்சி பிழம்பாக நிரம்பி இருக்கும் அப்படி ஒரு தருணம் தான் இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்தது இதற்கு முன்பு பதக்கம் வாங்கி வந்த வீரர்கள் வெளிநாட்டு தலைவர்கள் மாநில முதல்வர்கள் ஆகியோர் விமான நிலையம் வரும்போதெல்லாம் செய்தி சேகரித்து இருக்கிறேன். ஆனால் வினேஷ் போகத்தின் நாடு திரும்புதல் என்பது அப்படியான ஒன்று கிடையாது. ஒன்றுமில்லாமல் வெறும் கையுடன் திரும்பும் தனக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று அவர் நிச்சயம் எதிர்பார்த்து இருக்க மாட்டார் வந்திருந்தவர்கள் அத்தனை பேரும் அவரது ரசிகர்கள் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள், சாமானிய பொது மக்கள். யார் வருகிறார் எனக் கேட்டவுடன் இவர்தான் என சொன்னவுடன் அருகில் இருந்தவர்களிடம் பூக்களை வாங்கி மனதார தூவி வாழ்த்தி விட்டுப் போன சிலரை பார்க்க முடிந்தது விவசாயிகளின் கொடியான பச்சை துண்டு போட்டவுடன் அதை கைகூப்பி வாங்கிக் கொண்டார் அவர் வார்த்தை வராமல் திக்கு முக்காடி போனதை நேரில் பார்க்க முடிந்தது. நுழைவு வாயிலை விட்டு வெளியே வரும்போது அவரது வாடிப்போன முகத்தை பார்க்கும் போது மனம் கனத்து போனது. அவர் உதடுகள் புன்னகை சிந்தவே இல்லை அவர் கண்களில் இருந்து கண்ணீர் உதிர்வது நிற்கவேயில்லை. கடந்த சில ஆண்டுகளாக அவர் அனுபவித்த வேதனைகளுக்கும் கடந்த சில வாரங்களாக அவர் அனுபவித்த வலிகளுக்கும் கொஞ்சம் போல் மருந்து தடவி இருக்கிறது மக்களின் இந்த பேராதரவு பாகுபலி திரைப்படத்தில் வரும் "ஆளாவிட்டாலும் பாகுபலி தான் மன்னன்" என, அப்படி "பதக்கம் தான் வாங்க வில்லையே தவிர வினேஷ் தங்க மகள் தான்!!! #VineshPhogat #Zindabad

Niranjan kumar

40,067 görüntüleme • 2 yıl önce

விஜய்க்கு ஒரு குணம் உண்டு... எதை சொல்லி மற்றவர்கள் விமர்சிக்கிறார்களோ... "ஆமாண்டா.. நான் அப்படித் தான் பண்ணுவேன்.. உன்னால் என்ன பண்ண முடியும்" என்ற முரட்டுத்தனம்... முன்பு ஒரு முறை எச் ராஜா அவர்கள் இவரது பெயர் ஜோசப் விஜய் என்று சொன்னதும்... கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தன்னுடைய பெயர், லெட்டர்பேட் எல்லாவற்றிலும் "விஜய்" என்று மட்டும் குறிப்பிட்டு வந்தவர்... அடுத்த நாளே "ஜோசப் விஜய்" என்று புதிய லெட்டர்பேடில் அறிக்கை வெளியிட்டார்.,.. அதே போல் இப்போது இவர் மனைவியை துன்பறுத்தி, தனிமையில் விட்டு விட்டு திரிஷா வுடன் திருமணம் மீறிய உறவில் இருப்பதாகவும்.. இந்த புகைப்படங்கள் வெளியாகி தனக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் திருமதி சங்கீதா அவர்கள் விவாகரத்து கோரிய செய்திகள் பொது வெளியில் பேசப்படுவதால்.... இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரிஷாவுடன் சேர்ந்து வந்து கலந்து கொண்டு... "ஆமாம்டா.. நான் இந்த நடிகை உடன் தான் இருக்கிறேன்.. உங்களால் என்னடா செய்ய முடியும்" என்ற மெசேஜை சொல்லி இருக்கிறார்... தேர்தல் அரசியலில் இறங்கி விட்டு... பல்வேறு வயதினரின், அனைத்து பாலினத்தவரின் ஓட்டுகளையும் பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் விஜய்.. இப்படி கள்ள உறவை கெத்தாக வெளியே சொல்லி சவால் விடும் துணிச்சல் எதனால் வந்தது... சமூக வலை தளங்களில்... "அவருக்கு தங்கச்சியா இருப்போம் அக்காவா இருப்போம் பொண்டாட்டியா கூட இருப்போம்" என்றும்... "குப்பை அள்ளுறவனே 4 பொண்டாட்டி வைக்கும் போது காசு வைத்திருக்கும் அவர் 10 பொண்டாட்டி வச்சிருந்தாலும் தப்பில்ல" என்றும்... இடுப்பில் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு "என் குழந்தையை விட எனக்கு அவரைதான் பிடிக்கும்" என்றும், "என் புருசனை விட அவரைதான் ரொம்ப பிடிக்கும்.. ஹாஹாஹா " என்றும்... விஜய் என்ன செய்தாலும் அதை ஆதரிக்கும் வெறி பிடித்த அழிவு சக்தி கூட்டம் தன்னிடம் இருக்கும் துணிச்சலில் தான் அவர் இதை எல்லாம் செய்கிறார்... அவர் ஆரம்பத்தில் இருந்தே.. தன்னுடைய ஒவ்வொரு அசைவிலும் பேச்சிலும் தனது ரசிகர்களை மட்டும் engage செய்யும் விதமாக செயல்பாடுகிறார்... ரசிகர்களை தாண்டி பொதுமக்கள் என்று ஒரு சமுதாயம் இருக்கிறது... அவர்களின் நன் மதிப்பையும் ஆதரவையும் பெற்றால் தான் அரசியலில் அங்கீகாரம் பெற முடியும் என்ற உண்மையை அவர் ஏற்கவில்லை... தமிழ்நாட்டில் உள்ள எல்லா பெண்களும் தன்னுடைய ரசிகர்கள் என்று ஆழமாக நம்புகிறார்... ஒவ்வொரு வீட்டிலும் உள்ள இளைஞர்கள் எல்லாரும் தன்னுடைய ரசிகர்கள் என்று உறுதியாக நம்புகிறார்... அதனால்... தான் என்ன செய்தாலும் அதை அவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பி.. திருமதி சங்கீதா மற்றும் அவர்களது மகன், மகள் ஆகியோரின் மன வலியை வேதனையை மேலும் மேலும் அதிகரிக்கும் விதமாகவும், பொது வெளியில் தன்னை விமர்சிப்பவர்களிடம் சவால் விடும் வகையிலும் இப்படி தன்னுடைய ஆணவத்தை வெளிப்படுத்துகிறார்... தன்னுடைய மனுவில் நடிகையின் பெயரை கூட குறிப்பிடாமல் கண்ணியம் காத்துள்ளார் திருமதி சங்கீதா.. இது போல இவர் வேண்டுமென்றே அவரது வயிற்றிரிச்சலை கொட்டினால்... நாளைக்கே சங்கீதா மீடியா முன்பு வந்து நின்று தன்னுடைய மனக்குமுறலை கொட்டி அழுதால் விஜய் என்ன செய்வார்.. தேர்தல் அரசியலில் இதெல்லாம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்... ரசிகரல்லாத மற்றவர்களின் வெறுப்புக்கும் அருவருப்புக்கும் ஆளாவார்... இது நடிகர் வடிவேலுக்கு நேர்ந்ததை போல.. தேர்தலில் தோற்ற பிறகு மீண்டும் நடிக்க வந்தால்... அப்போதும் இந்த அருவருப்பால் ஒதுக்கிய மக்களின் ஆதரவை பெற முடியாமல் சினிமாவில் இரண்டாவது இன்னிங்சும் தோல்வி அடைய வாய்ப்புள்ளது... அகத்தால் அழிந்தான் ராவணேஸ்வரன்.. எண்ணத்தால் கெட்டான் துரியோதனன்.. ஆணவம் அறிவுக்கு சத்ரு என்பதை விஜய் இப்போது புரிந்து கொள்ள மாட்டார். ✍️தஞ்சை ராஜேஷ்

Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)

14,232 görüntüleme • 5 ay önce