Video yükleniyor...

Video Yüklenemedi

Ana Sayfaya Dön

மோ(ச)டி ராஜாவின் உயிர் EVM இல் உள்ளது.

27,374 görüntüleme • 1 yıl önce •via X (Twitter)

1 Yorum

vravicoumar profil fotoğrafı
vravicoumar1 yıl önce

பப்பு பப்புதான் சூப்பர் ராகுல் காந்தி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Benzer Videolar

'தமிழ்நாடு' - சொல் அல்ல; தமிழரின் உயிர்! பரந்து விரிந்த நமது இந்தியத் துணைக்கண்டத்துக்கு அழகு சேர்ப்பது, இங்குள்ள பன்முகத்தன்மையே! 1956 நவம்பர் 1 அன்று மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிரிந்து சென்று புதிய மாநிலங்கள் தோன்றின. ஆனால், நம் தாய் நிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் பெற இன்னும் பதினொரு ஆண்டுகள் காக்க வேண்டியதாயிற்று! 1967-இல் இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சியான தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. தமிழ்நிலத்தின் பெருமகன் - தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானார்; 1967 ஜூலை 18-இல் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டினோம்! மறைமலை அடிகள், தந்தை பெரியார், சோமசுந்தர பாரதியார், சங்கரலிங்கனார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி என இந்தப் போராட்டத்தின் வேர் மிக ஆழமானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த #தமிழ்நாடு_நாள்-இல், தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிடப் பாடுபட உறுதியேற்போம்! தனித்துவமிக்க தமிழ்நாட்டின் ஒளி இந்தியா முழுதும் பரவட்டும்! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!

M.K.Stalin

149,995 görüntüleme • 3 yıl önce

அறப்போர் இயக்கம் மற்றும் Dr சுரேஷ் மீது சட்டவிரோத கல்குவாரி நடத்திய தாக்குதல் குறித்த விசாரணையை உயர்நீதிமன்றம் CBCIDக்கு மாற்றம் அறப்போர் இயக்கம் மற்றும் Dr சுரேஷ் மீது கடந்த ஆண்டு நவம்பர் 2025 இல் திருநெல்வேலியில் சட்டவிரோத கல் குவாரி கும்பல் நடத்திய தாக்குதலின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை CBCID க்கி மாற்றி இன்று உத்தரவு பிறப்பைத்து உள்ளது. அறப்போர் தாக்கல் செய்த இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிசிஐடி 3 மாதத்தில் விசாரணை முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்து உள்ளது. திருநெல்வேலி காவல்துறை விசாரணையை நியாயமாக மேற்கொள்ளாததை உயர்நீதிமன்றம் ஆணையில் தெளிவாக தெரிவித்து உள்ளது. பலமுறை நினைவூட்டியும் திருநெல்வேலி காவல்துறை விசாரணைக்கு கூட புகார்தாரரான என்னை அழைக்கவில்லை. சட்டவிரோத மாபியாக்களுடன் திருநெல்வேலி காவல்துறையும் கைகோர்த்து இந்த விசாரணையை நியாயமின்றி ஒரு தரப்பாக நடத்தியது. நம் தொடர் அறப்போராட்டங்களுக்கு கிடைத்த மேலும் ஒரு முக்கிய தீர்ப்பாக இதை பார்க்கிறோம். அறப்போர் தொடரும் !

Jayaram Venkatesan

29,227 görüntüleme • 2 ay önce

1979-இல் முரசொலி மாறன்: ஆங்கிலம் ஒரு சக்திவாய்ந்த மொழி என்றும், அதன் இடத்தை நிரப்பும் தகுதி இந்திக்கு இல்லை என்றும் வாதிட்டார். 2024-இல் ராகுல் காந்தி: ஆங்கிலம் வெறும் மொழி மட்டுமல்ல, அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைக்கும் கருவியும், மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் பாலமுமாக விளங்குவதாகக் குறிப்பிட்டார். காஞ்சா இலையா: இந்தியக் கல்வி முறையில் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் இடையே பெரிய வகுப்புவாத இடைவெளி இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். The Debate Channel - விவாதக் கருத்தரங்கத்தில் அண்ணன் பீட்டர் அல்ஃபோன்ஸ் அவர்களின் உரை தெளிவாக உள்ளது. எந்த இயக்கமும் தன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்தித் திணிப்பைத் தடுத்ததால் மட்டும் தமிழ்நாடு நலவாழ்வு மாநிலமாகவில்லை; ஆங்கில மொழிக் கற்றலைப் பரவலாக்கினோம், இன்னும் பரவலாக்க வேண்டும், ஆங்கில வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். 1/n

Vignesh Anand

12,290 görüntüleme • 8 ay önce

#களம்2026: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி vs NDA அல்ல; தமிழ்நாடு vs NDA! மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்பட்ட கூட்டணியை, உடைந்து போனதை எல்லாம் ஒட்ட வைத்துக் கொண்டு வந்திருக்கிறது NDA. எந்த get-up-இல் வந்தாலும் அவர்களுக்கு Get Out-தான்! அடுத்து, வாராவாரம் பிரமாண்ட மாநாடுகளைத் தமிழ்நாட்டின் அனைத்து மண்டலங்களிலும் நடத்த இருக்கிறோம். பிப்ரவரி 28 வரை தொகுதிகள்தோறும் #தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டோம் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன். #InternationalWomensDay வரை திமுக மகளிர் அணி பரப்புரை உள்ளது. #வெல்லும்_தமிழ்ப்பெண்கள்-ஏ புறப்படுங்கள்! #DravidianModel ஆட்சி தொடர உழைத்திடுங்கள்! #வெல்வோம்_ஒன்றாக!

M.K.Stalin

42,749 görüntüleme • 7 ay önce

முதல்வரின் கவனத்திற்கு .! இன்னொரு உயிர் போவதற்கு முன் மிகவும் மோசமாக உள்ள மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் செம்மொழி சாலையை சீரமைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.! ஒரு நபரின் கவனக்குறைவால் நடந்தால் தான் அது விபத்து. ஆனால் பல நபர்களின் அலட்சியத்தால் நடப்பது கொலை. பல பள்ளிகள், ஐடி அலுவலகங்கள் உள்ள இந்த ரோடில் லட்சக்கணக்கான மக்கள் தினமும் பயணிக்கிறார்கள். Metro வேலைகள் நடைபெற்று வருவதால் ஏற்கனவே இருந்த சாலை அகலம் குறைந்து ஒரு கன ரக வாகனம் செல்லும் அளவிற்கு மட்டுமே இடம் உள்ளது. அதிலும் ஏகப்பட்ட குழிகள், பள்ளம் மற்றும் மேடுகள். கண்டிப்பாக விபத்து நடைபெற நிறைய வாய்ப்பு உள்ளது. தயவுகூர்ந்து நேற்று நடந்த விபத்தை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு பல உயிர்களை காப்பாற்ற உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன். CMOTamilNadu Greater Chennai Corporation Udhay E V Velu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Chennai Metro Rail Chennai Updates OMR Updates தமிழச்சி

Shiva Flix

19,383 görüntüleme • 1 yıl önce

ஏரி விழுங்கிய திரு. எ வ வேலு மீது FIR ஏன் இன்னும் பதியப்படவில்லை ? அது மட்டும் இன்றி வட்டாட்சியர் மோகன்ராமன் முதல் முறைகேடு நடந்த பொழுது இருந்த அதே அதிகாரிகள் இன்றுவரை தொடர்கின்றனர். லோக்கல் அரசு அதிகாரிகள் மூடி மறைப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருவதாக செய்திகள் வருகிறது. முதலில் லஞ்சஒழிப்பு துறை FIR பதிவு செய்ய வேண்டும். மண் திருட்டு நடந்த பொழுது இருந்த அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். பிறகு ட்ரோன் சர்வே மூலம் 2 வெவ்வேறு தன்னிச்சையான டீம் மண் எடுத்த அளவை அளந்து அது கிராஸ் மேட்ச் செய்யப்பட வேண்டும். அடுத்தது திருடப்பட்ட மண் கொட்டப்பட்ட கலைஞர் திடலில் சென்று OGL (original ground level) இல் இருந்து எத்தனை அடி உயரம், அகலம், நீளத்திற்கு மண் கொட்டப்பட்டு உள்ளது என்பதையும் அளவு எடுக்க வேண்டும்! இவை அனைத்தும் மழை வருவதற்கு முன்பாக செய்ய வேண்டும்! CMOTamilNadu CTR.Nirmalkumar Aadhav Arjuna

Arappor Iyakkam

118,332 görüntüleme • 18 gün önce

ஒரு கிறிஸ்துவர் (ஓய்வு. அலெக்சாண்டர் டி. ஜி. பி.) ஐபிஸ் அதிகாரி. சொல்கிறார். திருவனந்தபுரம் ஶ்ரீ பத்மநாபசுவாமி கோவிலை பற்றி. 1000 த்துக்கு மேற்பட்ட வருடம் முன்னால் கட்ட ப்பட்ட அந்த கோவில் கட்டிய வருக்கும், கட்ட சொன்னவருக்கும், அதை வடிவமைத்தவருக்கும் மட்டும் தெரிந்த ஒரு விஷயம். ஒரு வருடத்திற்கு 365 1/4 நாட்களென்று. அதன் படி 365 முழு தூண், ஒரு 1/4 தூணில் அந்த கோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது. அல்லாமல், இயற்கையின் நுட்பமான, இரு பாதங்கள், "உத்தராயணம்" "தக்ஷிநாயணம்" இந்த இரு தின மாற்றங்களின் தேதிகள் கரெக்டாக சூரியனின் கிரணங்கள் பத்மநாபசாமியின்பாத( கட்டைவிரல்) த்தில் காலை நேரம் விழும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. 7நிலை கோபுரம். ஒவ்வொரு நிலையிலும் 7×7 க்கு துவாரம் ( திறந்த வண்ணம் (கதவுகள்/ மூடிகள் இல்லாதது)அமைப்பு. இந்த 365 1/4 நாட்களில் ஒவ்வொரு நாளிலும் சூரிய ஒளியானது ஒவ்வொரு தூணாக விழும் வண்ணம் வடிவமைப்பு. அந்த 1/4 நாள் லீப் வருடம் மட்டும் அந்த 1/4தூணின் நிழல் முழுதாக தெரியுமாம் அன்று இன்ஜினியரிங் படிப்பு இல்லை; அது 1554 இல் தான் இன்றைய கண்டுபிடிப்பு என்று சொல்லக்கூடிய, 1 வருடத்திற்கு 365 1/4 நாட்கள் என்று ஐரோப்பிய விஞ்ஞானி கண்டுபிடித்து (invention) சொன்னார். அப்போ, நினைத்து பாருங்கள், அதற்கெப்பவோ கட்டிய அனந்தபத்மநாப சுவாமி கோயில் கோபுரம். விஷு நாள்: சூரிய ஒளி சுவாமியின் பாதத்தின் நேர் விழும். டிசம்பர் 22இல் சுவாமியின் இடதுபக்கம்; ஜூன் 21 இல் வலதுபக்கம் பாதத்தில் சூரியஒளி விழும். ஆனால் மழை பெய்தால் தண்ணீர் உள்பக்கம் விழாது. என்னென்ஜினீரிங் மூளை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த விஷயங்கள் எல்லாம் பாருங்கள், அந்நிய மதத்தவருக்கு தெரிந்திருக்கு. இந்துக்கள் எத்தனை பேருக்கு இந்தசெய்தி தெரியும்!!! 😗

Srinivasa Subramanian G 🇮🇳

25,045 görüntüleme • 7 ay önce