Video yükleniyor...

Video Yüklenemedi

Ana Sayfaya Dön

மோ(ச)டி ராஜாவின் உயிர் EVM இல் உள்ளது.

26,953 görüntüleme • 11 ay önce •via X (Twitter)

0 Yorum

Yorum bulunmuyor

Orijinal gönderinin yorumları burada görünecek

Benzer Videolar

'தமிழ்நாடு' - சொல் அல்ல; தமிழரின் உயிர்! பரந்து விரிந்த நமது இந்தியத் துணைக்கண்டத்துக்கு அழகு சேர்ப்பது, இங்குள்ள பன்முகத்தன்மையே! 1956 நவம்பர் 1 அன்று மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிரிந்து சென்று புதிய மாநிலங்கள் தோன்றின. ஆனால், நம் தாய் நிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் பெற இன்னும் பதினொரு ஆண்டுகள் காக்க வேண்டியதாயிற்று! 1967-இல் இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சியான தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. தமிழ்நிலத்தின் பெருமகன் - தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானார்; 1967 ஜூலை 18-இல் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டினோம்! மறைமலை அடிகள், தந்தை பெரியார், சோமசுந்தர பாரதியார், சங்கரலிங்கனார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி என இந்தப் போராட்டத்தின் வேர் மிக ஆழமானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த #தமிழ்நாடு_நாள்-இல், தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிடப் பாடுபட உறுதியேற்போம்! தனித்துவமிக்க தமிழ்நாட்டின் ஒளி இந்தியா முழுதும் பரவட்டும்! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!

M.K.Stalin

149,980 görüntüleme • 3 yıl önce

அறப்போர் இயக்கம் மற்றும் Dr சுரேஷ் மீது சட்டவிரோத கல்குவாரி நடத்திய தாக்குதல் குறித்த விசாரணையை உயர்நீதிமன்றம் CBCIDக்கு மாற்றம் அறப்போர் இயக்கம் மற்றும் Dr சுரேஷ் மீது கடந்த ஆண்டு நவம்பர் 2025 இல் திருநெல்வேலியில் சட்டவிரோத கல் குவாரி கும்பல் நடத்திய தாக்குதலின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை CBCID க்கி மாற்றி இன்று உத்தரவு பிறப்பைத்து உள்ளது. அறப்போர் தாக்கல் செய்த இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிசிஐடி 3 மாதத்தில் விசாரணை முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்து உள்ளது. திருநெல்வேலி காவல்துறை விசாரணையை நியாயமாக மேற்கொள்ளாததை உயர்நீதிமன்றம் ஆணையில் தெளிவாக தெரிவித்து உள்ளது. பலமுறை நினைவூட்டியும் திருநெல்வேலி காவல்துறை விசாரணைக்கு கூட புகார்தாரரான என்னை அழைக்கவில்லை. சட்டவிரோத மாபியாக்களுடன் திருநெல்வேலி காவல்துறையும் கைகோர்த்து இந்த விசாரணையை நியாயமின்றி ஒரு தரப்பாக நடத்தியது. நம் தொடர் அறப்போராட்டங்களுக்கு கிடைத்த மேலும் ஒரு முக்கிய தீர்ப்பாக இதை பார்க்கிறோம். அறப்போர் தொடரும் !

Jayaram Venkatesan

29,155 görüntüleme • 29 gün önce

1979-இல் முரசொலி மாறன்: ஆங்கிலம் ஒரு சக்திவாய்ந்த மொழி என்றும், அதன் இடத்தை நிரப்பும் தகுதி இந்திக்கு இல்லை என்றும் வாதிட்டார். 2024-இல் ராகுல் காந்தி: ஆங்கிலம் வெறும் மொழி மட்டுமல்ல, அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைக்கும் கருவியும், மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் பாலமுமாக விளங்குவதாகக் குறிப்பிட்டார். காஞ்சா இலையா: இந்தியக் கல்வி முறையில் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் இடையே பெரிய வகுப்புவாத இடைவெளி இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். The Debate Channel - விவாதக் கருத்தரங்கத்தில் அண்ணன் பீட்டர் அல்ஃபோன்ஸ் அவர்களின் உரை தெளிவாக உள்ளது. எந்த இயக்கமும் தன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்தித் திணிப்பைத் தடுத்ததால் மட்டும் தமிழ்நாடு நலவாழ்வு மாநிலமாகவில்லை; ஆங்கில மொழிக் கற்றலைப் பரவலாக்கினோம், இன்னும் பரவலாக்க வேண்டும், ஆங்கில வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். 1/n

Vignesh Anand

12,290 görüntüleme • 6 ay önce

#களம்2026: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி vs NDA அல்ல; தமிழ்நாடு vs NDA! மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்பட்ட கூட்டணியை, உடைந்து போனதை எல்லாம் ஒட்ட வைத்துக் கொண்டு வந்திருக்கிறது NDA. எந்த get-up-இல் வந்தாலும் அவர்களுக்கு Get Out-தான்! அடுத்து, வாராவாரம் பிரமாண்ட மாநாடுகளைத் தமிழ்நாட்டின் அனைத்து மண்டலங்களிலும் நடத்த இருக்கிறோம். பிப்ரவரி 28 வரை தொகுதிகள்தோறும் #தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டோம் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன். #InternationalWomensDay வரை திமுக மகளிர் அணி பரப்புரை உள்ளது. #வெல்லும்_தமிழ்ப்பெண்கள்-ஏ புறப்படுங்கள்! #DravidianModel ஆட்சி தொடர உழைத்திடுங்கள்! #வெல்வோம்_ஒன்றாக!

M.K.Stalin

42,669 görüntüleme • 5 ay önce

முதல்வரின் கவனத்திற்கு .! இன்னொரு உயிர் போவதற்கு முன் மிகவும் மோசமாக உள்ள மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் செம்மொழி சாலையை சீரமைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.! ஒரு நபரின் கவனக்குறைவால் நடந்தால் தான் அது விபத்து. ஆனால் பல நபர்களின் அலட்சியத்தால் நடப்பது கொலை. பல பள்ளிகள், ஐடி அலுவலகங்கள் உள்ள இந்த ரோடில் லட்சக்கணக்கான மக்கள் தினமும் பயணிக்கிறார்கள். Metro வேலைகள் நடைபெற்று வருவதால் ஏற்கனவே இருந்த சாலை அகலம் குறைந்து ஒரு கன ரக வாகனம் செல்லும் அளவிற்கு மட்டுமே இடம் உள்ளது. அதிலும் ஏகப்பட்ட குழிகள், பள்ளம் மற்றும் மேடுகள். கண்டிப்பாக விபத்து நடைபெற நிறைய வாய்ப்பு உள்ளது. தயவுகூர்ந்து நேற்று நடந்த விபத்தை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு பல உயிர்களை காப்பாற்ற உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன். CMOTamilNadu Greater Chennai Corporation Udhay E V Velu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Chennai Metro Rail Chennai Updates OMR Updates தமிழச்சி

Shiva Flix

19,353 görüntüleme • 1 yıl önce

கண்டிப்பாக படியுங்கள்! அன்வர் ராஜாவின் அரசியல் திருப்பம்: திமுகவை நோக்கிய எதிர்பாராத பயணம்! தீவிரமான அதிமுக கட்சிக்காரராகவும், திமுகவை மிகக் கடுமையாக எதிர்த்தவராகவும் அறியப்பட்ட அன்வர் ராஜா, இப்போது திமுகவைத் தேர்ந்தெடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். இந்த எதிர்பாராத முடிவு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது ஒரு சாதாரண கட்சி மாற்றம் மட்டுமல்ல; தமிழ்நாட்டு அரசியலின் சிக்கலான இயங்கியலையும், அதில் ஆழமாக வேரூன்றியுள்ள இரு கட்சி ஆதிக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. ஏனென்றால் திமுகவின் கடுமையான எதிர்ப்பாளராக இருந்த அன்வர் ராஜாவுக்கு, பாஜகவை எதிர்ப்பதாகக் கூறி தனது புதிய கட்சியை நடத்தி வரும் விஜய் ஒரு மாற்றாக இருந்திருக்கலாம். விஜய்யின் கட்சியில் இணைந்திருந்தால், வளரும் புதிய அரசியல் அமைப்பு என்பதால் முக்கிய பதவி பெறுவதற்கு நிச்சயமாக வாய்ப்பு இருந்திருக்கும். நல்ல மரியாதையும் கிடைத்திருக்கலாம். ஆனால், அன்வர் ராஜா விஜய்யை நம்பாமல், தான் கடுமையாக எதிர்த்த திமுகவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். விஜய்யின் அரசியல் முயற்சிகள், பாஜக எதிர்ப்பு என்று கூறப்பட்டாலும், அவரது அறிக்கைகளையும் நடவடிக்கைகளையும் கவனிக்கும்போது, தவெக பாஜகவின் பின்னணி ஆதரவுடன் இயங்குகிறது என்றும், அது பாஜகவின் மறைமுக அணியாகவே செயல்படுகிறது என்றும் எழும் சந்தேகங்கள் எவராலும் தவிர்க்க முடியாதவை. இந்த சந்தேகங்களே அன்வர் ராஜாவுக்கு தவெகவைத் தேர்ந்தெடுப்பதில் தயக்கத்தையும், உறுத்தலையும், அச்சத்தையும் ஏற்படுத்தி, அவரை திமுகவை நோக்கித் தள்ளியிருக்கின்றன. ஏனென்றால் திமுகவில் ஏற்கனவே முக்கிய பதவிகளில் பல சீனியர்கள் இருப்பதால் , அன்வர் ராஜாவுக்கு உயரிய பதவி கிடைப்பது என்பது மிகச் சவாலானது. இருப்பினும், பாஜகவை எதிர்ப்பதில் இந்திய அளவில் திமுக முன்னணியில் இருப்பதால், தனது திமுக மீதான பகைமையையும் , ஒவ்வாமையையும் தாண்டி அவர் திமுகவில் இணைந்திருப்பது என்பது சிறுபான்மையினர் நலனில் தமிழ்நாட்டிலும், இந்திய அளவிலும் திமுகவைத் தவிர வேறு கட்சி இல்லை என்பதை உணர்ந்ததே அவரை இந்த முடிவுக்கு இட்டுச் சென்றிருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் திமுக-அதிமுக செல்வாக்குக்கு மாற்றாக வலுவான மூன்றாவது சக்தி இன்னும் உருவாகாத நிலையில், அரசியல் மாற்றத்தை விரும்புவோர் இந்த இரு கட்சிகளுக்கு இடையேயே தவிர்க்க முடியாமல் ஆட வேண்டிய நிலை உள்ளது. அன்வர் ராஜாவின் இந்த தாவல், தமிழ்நாடு அரசியலில் மாற்று வெற்றிடத்தையும், திமுகவின் தற்போதைய ஆளுமையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

Surya Born To Win

80,771 görüntüleme • 1 yıl önce

ஒரு கிறிஸ்துவர் (ஓய்வு. அலெக்சாண்டர் டி. ஜி. பி.) ஐபிஸ் அதிகாரி. சொல்கிறார். திருவனந்தபுரம் ஶ்ரீ பத்மநாபசுவாமி கோவிலை பற்றி. 1000 த்துக்கு மேற்பட்ட வருடம் முன்னால் கட்ட ப்பட்ட அந்த கோவில் கட்டிய வருக்கும், கட்ட சொன்னவருக்கும், அதை வடிவமைத்தவருக்கும் மட்டும் தெரிந்த ஒரு விஷயம். ஒரு வருடத்திற்கு 365 1/4 நாட்களென்று. அதன் படி 365 முழு தூண், ஒரு 1/4 தூணில் அந்த கோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது. அல்லாமல், இயற்கையின் நுட்பமான, இரு பாதங்கள், "உத்தராயணம்" "தக்ஷிநாயணம்" இந்த இரு தின மாற்றங்களின் தேதிகள் கரெக்டாக சூரியனின் கிரணங்கள் பத்மநாபசாமியின்பாத( கட்டைவிரல்) த்தில் காலை நேரம் விழும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. 7நிலை கோபுரம். ஒவ்வொரு நிலையிலும் 7×7 க்கு துவாரம் ( திறந்த வண்ணம் (கதவுகள்/ மூடிகள் இல்லாதது)அமைப்பு. இந்த 365 1/4 நாட்களில் ஒவ்வொரு நாளிலும் சூரிய ஒளியானது ஒவ்வொரு தூணாக விழும் வண்ணம் வடிவமைப்பு. அந்த 1/4 நாள் லீப் வருடம் மட்டும் அந்த 1/4தூணின் நிழல் முழுதாக தெரியுமாம் அன்று இன்ஜினியரிங் படிப்பு இல்லை; அது 1554 இல் தான் இன்றைய கண்டுபிடிப்பு என்று சொல்லக்கூடிய, 1 வருடத்திற்கு 365 1/4 நாட்கள் என்று ஐரோப்பிய விஞ்ஞானி கண்டுபிடித்து (invention) சொன்னார். அப்போ, நினைத்து பாருங்கள், அதற்கெப்பவோ கட்டிய அனந்தபத்மநாப சுவாமி கோயில் கோபுரம். விஷு நாள்: சூரிய ஒளி சுவாமியின் பாதத்தின் நேர் விழும். டிசம்பர் 22இல் சுவாமியின் இடதுபக்கம்; ஜூன் 21 இல் வலதுபக்கம் பாதத்தில் சூரியஒளி விழும். ஆனால் மழை பெய்தால் தண்ணீர் உள்பக்கம் விழாது. என்னென்ஜினீரிங் மூளை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த விஷயங்கள் எல்லாம் பாருங்கள், அந்நிய மதத்தவருக்கு தெரிந்திருக்கு. இந்துக்கள் எத்தனை பேருக்கு இந்தசெய்தி தெரியும்!!! 😗

Srinivasa Subramanian G 🇮🇳

25,045 görüntüleme • 5 ay önce

இந்த வீடியோவில் பேசுபவர் எல்லாவற்றையும் சிறு மூளையுடன், கருத்து திணிப்பு செய்யும் நோக்கில் அவர் சொந்த கருத்தை உள் கருத்துடன் திரிபு படுத்தி பேசும் புரட்டுக்காரர் திராவிட நாடு கோரிக்கைகு முன்பே எழுதப்பட்டது தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் !! இந்த பாடல் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் அதிகாரப்பூர்வ பாடலாக இருந்தது !! இந்த பாடலை அதிகாரப்பூர்வ பாடலாக வைக்க கரந்த தமிழ்ச்சங்கத்திற்கு என்ன நோக்கம் இருந்தது ?? 1891 இல் மனோன்மணீயம் பெ.சுந்தரனார் இந்த பாயிரத்தை எழுதுகிறார் அப்போது திராவிட நாடு என்ற கோரிக்கையே இல்லை 1938-1939 இல் தான் திராவிட நாடு திராவிடர்க்கே !! என்ற கோரிக்கை வருகிறது மனோன்மணீயனார் சிறந்த தமிழறிஞர் அவர் இயற்றிய மனோன்மணீயம் என்னும் 4,500 வரிகள் கொண்ட கவிதை நாடக நூலில் உள்ள ஒரு பாடலே “நீராரும் கடலுடுத்த” என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இந்த பாடலை கலைஞர் தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவிக்கும் முன்பே இந்த பாடல் கரந்தை தமிழ் சங்கத்தில் மிக பிரபலமாக இருந்துள்ளது கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற இரண்டாம் ஆண்டு முதல், மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய “நீராருங் கடலுடுத்த”என்னும் பாடல் சங்கத்தின் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கத் தொடங்கியது. முதன்முதலில் இந்தப் பாடலை மேடையில் பாடியவர் கூடலூர் வே.இராமசாமி. இந்தப் பாடல் தமிழ்நாட்டின் மேடைகளில் மட்டும் அல்லாது தரணி எங்கும் பாடிப் பரவ வேண்டும் என்பது தமிழ் வேள் உமா மகேஷ்வரனாரின் கனவு. ( இப்ப அவரை இந்த திரிபுவாதி திராவிட லிஸ்ட்ல சேர்த்துவாரா ?? ) 1913-ல் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு அறிக்கையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பாடல் உலகெங்கும் பரவ வேண்டும் என்னும் கனவின் தொடர்ச்சியைப் போல், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆறாம் ஆண்டு அறிக்கை “நீராரும் கடலுடுத்த”பாடலுடனேயே தொடங்குகிறது. இதை எல்லாம் தெரியாமஒ ஏதோ கலைஞர் கொண்டு வந்தார் திராவிடத்தை தினித்தார் என்று ஓலா கேப் விட்டு தற்குறி தம்பிகளை ஏமாற்றுகிறார்.. #தமிழ்த்தாய்வாழ்த்து #திராவிடம்

கபிலன்

19,463 görüntüleme • 1 yıl önce

அர்ஜுன் சம்பத் அறிக்கை! கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆயுதங்கள் தமிழக சட்டசபையில் வேலையை செய்ய துவங்கி விட்டன. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சபாநாயகர் மாண்புமிகு திரு ஜே சி டி பிரபாகர் ஐயா அவர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள மேரி மாதா சர்ச்சுக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றது சிலுவையை தொட்டு வணங்கி கும்பிட்டது தன்னை ஒரு கிறிஸ்தவர் என அடையாளப்படுத்திக் கொண்டு பேசியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் அவர்களுக்கு பைபிள் பரிசு வழங்கியது ஆகியோவற்றை குறித்து பேசியுள்ளார். மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திராவிட மாடல் திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தான் ஒரு கிறிஸ்தவர் என்பதில் பெருமைப்பட்டுக் கொள்கிறேன் என்று பேசியவர். தற்பொழுது உதயநிதியும், ஜோசப் விஜய்யும்,ஜே சி டி பிரபாகர் அவர்களும் ஒரே லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்களுக்குள் ஒருவர் பிடிப்பு உள்ளது என்றும் பேசியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் பேசி இருக்கிறார். இந்த பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. சனாதனத்தை ஒழிப்பதாக பேசியது குறித்து ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மீண்டும் மீண்டும் சனாதனத்தை ஒழிப்பேன் என உதயநிதி பேசுவது திமுகவில் உள்ள ஒரு கோடி ஹிந்துக்களை வருத்தம் அடைய செய்துள்ளது. குறிப்பாக அவரது தாயார் திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள் சனாதனத்தை பின்பற்றுபவர். முதலில் அவர் அவரது வீட்டில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இஸ்லாமிய கிறிஸ்தவ மதவெறி மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதற்காக அவர்களின் ஓட்டுக்களை பெற வேண்டும் என்பதற்காக அப்பாவி இந்து தமிழர்கள் பின்பற்றுகின்ற தமிழர்களின் பாரம்பரியமான சனாதனத்தை ஒழித்துக் கட்டுவேன் என தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசி வருவது திராவிட மாடல் திமுக இன்னும் திருந்தவில்லை. என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் திரைப்பட நடிகராக இருந்த காலத்தில் மெர்சல் திரைப்படத்தில் தமிழர்களின் பாரம்பரியம் வேஷ்டி சட்டை என்பதை குறித்து பெருமை பேசி இருப்பார். ஆனால் தற்பொழுது அதற்கு மாறாக தமிழக சட்டசபையில் கோட் அணிந்து பங்கெடுத்துக் கொள்கிறார் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை புறக்கணித்து வருகிறார். திரு ஜோசப் விஜய் அவர்கள் லயோலா கல்லூரியில் படித்து வருபவர் லயோலா கல்லூரி நிர்வாகிகளான அவரது உறவினர்கள் திரு சேவியர் மற்றும் திரு பிரிட்டோ ஆகியோருக்கு கிறிஸ்தவ மதம் பரப்பும் வேலையை தொடர்ந்து செய்து வருபவர்கள். இந்து சமயம் குறித்தும் சனாதன தர்மம் குறித்தும் அவதூறு கருத்துக்களை பரப்பி வருபவர்கள். தற்பொழுது சட்டசபையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் மிகவும் வருத்தத்திற்கு உரியது. ஹிந்து தமிழர்கள் தமிழக வாக்காளர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். கன்னியாகுமரி,சென்னை போன்ற பகுதிகளில் இந்து தமிழர்கள் சிறுபான்மையாக உள்ளனர் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக மாறிவிட்டார்கள். கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் தமிழர்கள் வெற்றி பெற முடியாது ஆனால் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதியில் மிக எளிதாக கிறிஸ்தவர்கள் வெற்றி பெற்று வந்து இந்து விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசிய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திராவிட மாடல் தீய சக்தி திமுக சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

Arjun Sampath

68,889 görüntüleme • 2 ay önce

கடந்த டிசம்பர் 13 2020 ஆம் வருடம் பிரதமர் மோடி திறந்து வைத்த ( அதுக்கப்புறம் என்ன ஆயிருக்கும்னு உங்களுக்கே தெரியும் 😂😂😂. நம்ம ஜி யோட ராசி அப்படி... இருந்தாலும் சொல்றேன்).. மண்டி மற்றும் பத்தன்கோட் இடையே தேசிய நெடுஞ்சாலை NH154 கட்டுவதற்கு திட்ட பணிகள் டிசம்பர் 13 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதை பாஜகவிற்கு கட்சி நிதி கொடுத்த AFCONS Infrastructure Limited என்ற நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டு சுமார் 3500 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் தான் ஒரே மழையில் சுரங்கப்பாதை கட்டுமானம் நடந்து கொண்டிருந்த இடம் மொத்தமும் சரிந்து உடைந்து சுக்குநூறாக உள்ளேயே விழுந்தது.. இந்த சம்பவத்தில் கட்டுமான ஊழியர்கள் சிலர் படுகாயம் அடைந்தனர் உயிர் சேதங்கள் இதுவரை எதுவும் இல்லை. சுரங்கப்பாதை காண பணம் மட்டும் தனியாக எவ்வளவு ஒதுக்கப்பட்டது என்ற தகவல்களை ஒன்றிய பாஜக அரசு தர மறுத்துவிட்டது. தற்பொழுது பாதையும் மொத்தமாக இடிந்ததால் மீண்டும் குடைவதற்கும் வழி பாதையை சரி செய்வதற்கும் எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்ட உள்ளது எவ்வளவு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது போன்ற எந்த தகவலும் ஒன்றிய பாஜக அரசு தர மறுத்துவிட்டது. சம்பவத்தை அலசி ஆராய்ந்த கட்டுமான வல்லுநர்கள் கூறுகையில். சுத்தமாக முன் அனுபவமே இல்லாத முயற்சி இது என்றும். சுரங்க பாதைக்காண ஓட்டையை மட்டும் போட்டுக் கொண்டே போனதாலும், மேலே உள்ள கணம் கீழே அழுத்தம் தராதவாறு பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் செய்யாமல் இருந்ததாலும், மழை பெய்ததும் தண்ணீர் உரிஞ்சப்பட்டு கனம் கூடி மொத்தமாக உடைந்து விழுந்ததாக கூறுகின்றனர்.

Dr Adina Priscilla ♠️❤️

10,862 görüntüleme • 1 yıl önce