Загрузка видео...

Не удалось загрузить видео

На главную

முழு போதையில் கொடியேற்ற முடியாமல் தவித்த நைனா..🫢

281,250 просмотров • 5 месяцев назад •via X (Twitter)

Комментарии: 0

Нет доступных комментариев

Здесь появятся комментарии из оригинального поста

Похожие видео

சென்னை #வேளச்சேரி சட்டமன்ற தொகுதி, மடிப்பாக்கத்தில் மூத்த குடிமக்கள் வசிக்கும் வீட்டில், உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவர் கீழே விழுந்து எழ முடியாமல் தவித்த நிலையில், பூட்டிய கதவை திறந்து மீட்ட வேளச்சேரி தீயணைப்புத் நிலைய வீரர்களின் செயல் பாராட்டுக்குரியது. பதட்டப்படாமல் முதியவரை மீட்டு, ஒரு மகனைப் போல அவருக்கு முதலுதவி அளித்து, முகம் துடைத்து, தண்ணீர் கொடுத்து தேற்றிய அந்த மனிதாபிமானம் நெகிழ வைக்கிறது. அரசுப் பணியாக மட்டும் பார்க்காமல், அக்கறையோடு செயல்பட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Dr.SG Suryah

40,411 просмотров • 6 месяцев назад

திருவள்ளூர் அருகே அரசு அலுவலகத்தினுள் சென்று குடிபோதையில் #தவெக நிர்வாகி குடிபோதையில் கலாட்டாவில் ஈடு பட்டு அலுவலர்களை பணி செய்ய விடாமல் செய்தார் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள பொதட்டூர்பேட்டை பேரூராட்சி அலுவலகத்திற்கு இளைஞர் ஒருவர் லுங்கி கட்டிக்கொண்டு முழு போதையில் அலுவககத்திற்குள் நுழைந்துள்ளார். அப்போது அந்த இளைஞர் அலுவலகத்தில் என் தலைவர் விஜய் போட்டோவை ஏன் வைக்க வில்லை ,முருகர் போட்டோ இருக்கு என் தலைவன் விஜயின் போட்டோ ஏன் இல்லை என கலட்டா செய்து கூச்சலிட்டு அங்கிருந்தவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

TN NEWS LIVE

23,142 просмотров • 3 месяцев назад

தனது படிப்பை தொடர முடியாமல் வறுமையில் தவித்த மாணவியின் உயர்கல்விக்கு உதவிய திரு. Kamal Haasan இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகேயுள்ள தெற்குவாடி மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி சோபனா. தந்தை மீனவக்கூலியாகக் கடலுக்குச் சென்று வருபவர். அம்மா நண்டு ஏற்றுமதி நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை பார்ப்பவர். வறுமையான குடும்பச் சூழலுக்கு மத்தியில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய சோபனா 562 மதிப்பெண்கள் பெற்று, தான் படித்த அரசுப் பள்ளியிலேயே முதல் மாணவியாகத் தேர்வானார். ஏதேனும் ஒரு கல்லூரியில் பட்டம் பயின்ற பிறகு குடிமைப்பணித் தேர்வு எழுத வேண்டும் என்பது சோபனாவின் கனவு. ஆனால், கடன் சுமையால் குடும்பம் அவதியுற்று வருவதால், உயர்கல்வியைத் தொடரும் சூழ்நிலை இல்லை என்பதை உணர்ந்து ஒரு ஆடையகத்தில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார் சோபனா. இந்நிலையில், இவரைப்பற்றிய செய்திகளை சமூகவலைதளங்களில் கவனித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள். உடனே மாணவி சோபனாவை சென்னைக்கு வரவழைத்து, தனது கமல் பண்பாட்டு மையத்தின் சார்பாக சோபனா உயர்கல்வியைத் தொடரவும், அவரது கனவான குடிமைப்பணித் தேர்வுகளுக்கான ஆயத்தங்களைச் செய்வதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். இச்சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. Arunachalam, ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாநிலச் செயலாளர் திரு. Murali Appas மற்றும் மாணவரணி மாநிலச் செயலாளர் திரு. Rakesh Rajasekaran உடனிருந்தனர். அந்த மாணவியை அழைத்து வந்து திரு. கமல் ஹாசன் அவர்களை சந்திக்க வைக்கும் நிகழ்வை, பாம்பனை சேர்ந்த கடலோசை சமுதாய ஒளிபரப்பு நிலையத்தலைவர் காயத்ரி உஸ்மான் அவர்களும், நிகழ்ச்சித் தலைவர் திரு. லெனின் அவர்களும் ஏற்பாடு செய்தனர். #KamalHaasan #MakkalNeedhiMaiam

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்

21,565 просмотров • 1 год назад

அழகிய காலத்தில் வாழ்ந்த அற்புதமான காதல் கதை ♥️ என்னவளின் பேருந்து பயணம்..❤️ என் இருச்சக்கர வாகனப்பயணம்..❤️ அவளின் ஒற்றைப் பார்வைக்காக ஓடோடி வந்த தருணம்...❤️ என்னவள் செல்லும் பேருந்தை விரட்டுகிறேன் நான்..❤️ பின் தொடர்கிறேன்.. காரணம் அவளின் ஓரப்பார்வை என்மீது படவேண்டியே.. தென்றல் காற்றோடு சீரிப்பாய்கிறது என் வாகனம்.. அவளின் அந்த ஒத்த நொடி பார்வை என் மீது பட வேண்டுமென்பதற்காக மூச்சிரைக்க ஓடோடி வருகிறேன் ♥️ மூச்சிரைக்கும் வேளையிலே.. அவளின் முழு முகத்தை பார்த்துவிட கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு ஓடி வந்து அவள் இறங்கும் பேருந்து நிற்குமிடத்தை அடைகிறேன்... மனதிற்குள் ஏதோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றாக எனக்குள் நினைப்பு...❤️ ஆம் அவள் முகம் பார்ப்பதும் கூட தங்கப்பதக்கம் வெல்லும் சாதனை போலவே...💙 ஏன்னா, தங்கத்தை காண தவியாய் தவித்து ஓடிவந்து ஜெயித்தவன் என்பதால்...💖 என்னவளோ ஒற்றைப் புன்னகையோடு ஓரப்பார்வை வீசிச் செல்ல என் இதயமோ உருகி உருகி காதல் கொள்கிறது...❤️ காலங்கள் செல்கிறது... திருமணத்தை ஒருமனதாய் செய்து முடிக்க அவள் பெற்றோரை நாடினேன்.. அங்கே எங்கள் காதலின் முதல் தோல்வியை சந்திக்கின்றேன்... காதல் கல்யாணத்தில் முடியாமல் போகிறது... காரணம் மதம்..💔 காலங்கள் ஓடுகிறது.. நாளடைவில் என் மனதையும் மீறி எனக்கு வேறோரு திருமணம்.. இது காலத்தின் சோதனை.. என் மனதில் ஆராத வேதனை.. என்னவளின் மனதில் நீங்காத இடம் எனக்கு மட்டும்தான் என்பதை அவள் சொல்லாமல் தன் பெற்றோருக்கு புரிய வைக்கிறாள்.. காதல் பெண்ணுக்குள் ஏற்படும் போது இதயத்தில் கண் கொண்டே வயப்படுகிறாள்... சொல்லியக்காதலும் சொல்லாக்காதலும் பல உயிர்பபுடன் இருப்பதே இப்படிதானோ?? ஆம் என்னவள் என்னை அவள் மனதின் கண் வைத்து பார்த்துக்கொண்டதால் கடைசிவரை என் நினைவோடு நெஞ்சுக்குள் பொத்தி பொத்தி காதலோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றாள் காலம் முழுவதும்... காதலே என் முதற்காதலை காத்து நிற்பது காதலியே .. அன்புக் காதலியே ❤️ நான் கல்யாணம் செய்தவளும் நல்ல மனம் கொண்டவளே ❤️ காதலியும் நல்ல மனம் கொண்டவளே ❤️ இரு மனங்களோடு ஒன்று சேர்த்து வாழ என் மனம் ஏற்கவில்லை.. என் முதல் காதலும் தோற்கவில்லை.. நெஞ்சோரத்தில் என்றும் நிலைக்கும் முழு முதற்காதல் 🥰❤️💙😍💖 கவிஞர் Superstar_srini 🙏🏻

WhistlePodu 😍💖

24,135 просмотров • 2 лет назад

பாரி உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும் உன் எல்லா வீடியோவையும் பார்ப்பேன்! ஆறு மாதத்திற்கும் முன் அதிமுக பாஜகவுடன் சேர்ந்தால் அதிமுகவையும் மண்ணோடு மண்ணாக புதைப்பது தான் தமிழ்தேசியவாதிகள் என பேசிட்டு இப்ப தலைவர் சொன்னதை வச்சி அதிமுக பாஜகவிற்கு முட்டு கொடுக்கிறியே. நியாயமா? தல உன் மேலயும் நல்ல மதிப்பு இருக்கு Varun Talks நீயே சொல்லு! இப்ப அதிமுக பாஜக தவெக கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தால் பெரும்பாண்மை பெருமா இல்லையா அதை வைத்து Delimitation செய்யுமா இல்லையா? போன தேர்தலில் தமிழ் நாட்டில் மண்ணை கவ்வியதால்தான் பெரும்பாண்மை வராமல் பல விஷயங்கள் பாஜகவால் செய்ய முடியாமல் போனது! அது 2029-ல் அதிமுக கூட்டணியில் அதை செய்யுமா செய்யாதா? சரி தவெக அதிமுக காங்கிரஸ் ஆட்சியும் தான் வரக்கூடாது என பேசியிருக்கிறார் இனி Delete பண்ண முடியாது முழு காணொலி பதிவிறக்கம் செய்து வைத்து இருக்கேன்🤣 பாரி Paari Saalan உன் வேலையை நீ பாரு எங்க வேலையை நாங்க பாக்கிறோம்! முதன்மை எப்படி முதன்மை தமிழ்தேசிய கட்சியாக நாங்க திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக எல்லாத்தையும் எதிர்க்கிறோம் எங்கள் கடைசி மூச்சு உள்ளவரை. உன் Narrative-வை பொத்தி வைத்துக்கொள்ளவும். நீ அறிவாளி என்று தான் மரியாதை கொடுத்தேன் இனி எதிர்பார்க்காதே! நான் கூட நிறைய நாதக தம்பிகளை பாரி பற்றி பேசாதீங்க அவர் நம்ம நட்புசக்தி தான் என சொல்லி இருக்கேன். ஆனா தேசியத் தலைவரை இந்த கேடுகெட்ட பாஜக அதிமுக கூட்டணிக்கு வாக்கி கேட்க இழுத்தே போனதே நீ தமிழ்தேசியம் பேச வக்கற்று போயிட்ட Paari Saalan உனக்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசுதான் உனக்கு ஒன்னு சொல்கிறேன் நாமதமிழர் கட்சி என்று திராவிட ஆரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கிற நாளில் நான் இந்த கட்சியில் இருக்கமாட்டேன்! ஆனால் அண்ணன் சீமானின் தம்பியாக தமிழ்தேசியவாதியாக பயணிப்பேன்! #தமிழ்தேசியம்

குவிரன்

22,747 просмотров • 10 месяцев назад

தமிழ் நாட்டுக்கு ஹிந்தி வேண்டுமா வேண்டாமா என்பது தனி விவாதம். ஆனால் இந்தப் பெண் சொல்லும் அற்புதமான வாதம் நாம் கவனிக்க வேண்டியது. தமிழ் நாட்டில் ஹிந்தி வந்திருந்தால் நான் பானிப்பூரி விற்றிருப்பேன் என அவர் ஆரம்பித்தது rhetoric போல என்று நினைத்தால், இங்கு ஹிந்தி வந்திருந்தால் என்னால் கண்டிப்பாக இந்தியாவைத் தாண்டி சென்றிருக்க முடியாமல் இட்லி விற்றுக்கொண்டு இருந்திருப்பேன் என்கிறார் மீண்டும் அழுத்தமாக. Two languages = development என்றால், இரண்டு மொழிகளை மட்டுமே கற்றுக்கொண்ட நாடுகள் / மாநிலங்கள் வளர்ந்து விட்டனவா என்பது கேள்வி. இது எப்படியிருக்கிறது என்றால், ஒற்றை மொழிக் கொள்கை கொண்ட ஜப்பான், சீனா, தென் கொரியா ஜெர்மனி போன்ற நாடுகள் வளர்ந்ததற்கு காரணமே அவர்கள் ஒரே ஒரு மொழியில் கவனம் செலுத்துவது தான் என்று உளறுவது போன்றது. அவர்களின் உழைப்பு, உள்கட்டமைப்பு, ஊழலற்ற அரசியல், கல்வித் தரம் என வேறு எதையுமே கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், ஒற்றை மொழி கற்றுக்கொண்டதால்தான் உயர்ந்துவிட்டார்கள் என பேசுவதை விட அபத்தம் வேறில்லை. ஹிந்தி வந்தால் பாடச்சுமை அதிகமாகும், பாடச்சுமை அதிகமானால் கல்வித் தரம் குறையும், கல்வித் தரம் குறைந்தால் நாங்கள் பானிப்பூரி விற்போம் என்பது கொத்தடிமைகளின் வாதம். on the other side, ஐரோப்பாவில் மிக வளர்ந்த நாடுகளில் சுவிட்சர்லாந்து முதன்மையானது என்றால் யாரும் அதை மறுக்க முடியாது. ஆனால் வெறும் 90 லட்சம் மக்கள் வாழும் ஒரு குட்டி நாட்டில் (The population of Chennai is 1.2 crore), நான்கு அதிகாரப்பூர்வமான மொழிகள் இருக்கின்றன: ஜெர்மன், ஃபிரெஞ்ச், இத்தாலியன், ரோமன்ச். இந்த ஒவ்வொரு மொழியினரும் தங்கள் தாய் மொழியில் பேச முழு உரிமை உண்டு. அதே நேரம், அனைத்து அரசு ஆவணங்கள், பெயர்ப் பலகைகள், அறிக்கைகள், இணையதளங்கள் அனைத்தும் ஜெர்மன், ஃபிரெஞ்ச், இத்தாலியன் என்கிற மும்மொழிகளிலும் தான் இருக்கும். அனைத்து சுவிஸ் மக்களுக்கும் இந்த நான்கு மொழிகளும் தெரியாது; அவரவர் பகுதிகளில் அவரவர் மொழியைப் பேசிக்கொள்வார்கள். ஆனால்... ஆனால்... அனைத்து குழந்தைகளும் பள்ளியில் தங்கள் தாய் மொழியோடு கூட மற்றொரு தேசிய மொழியைக் கட்டாயம் கற்க வேண்டும். இதற்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒற்றை மொழி மட்டுமே கற்றுக்கொண்ட ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகள் மொழியால் மட்டுமே தாழவும் இல்லை, பல மொழிகள் கற்றுக்கொண்ட சுவிட்சர்லாந்து அதிக மொழி கற்றுக்கொண்டதால் மட்டுமே உயரவும் இல்லை. அவர்களின் வளர்ச்சி அதற்குள் அடங்காமல், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம், ஊழலுக்கு எதிரான வலுவான சட்டங்கள், அறிவியல் ஆய்வுகள், வளர்ச்சி சார்ந்த அரசியல் பார்வை என வேறு பல கூறுகளால் மட்டுமே சாத்தியமானது. Simply put, these countries prospered because they built institutions and skills, not because they taught fewer or more languages.

The Kevin Paul Show

32,497 просмотров • 6 месяцев назад

#News18TamilNadu விவாத மேடையில் உண்மையில் நடந்தது என்ன? கலவரத்தைத் தூண்டிவிட்டது யார்? இதோ Unedited Raw Video முழு வீடியோ ஆதாரம். இதைப்பார்த்தால் உண்மை உங்கள் முகத்தில் ஓங்கி அறையும்! விவாதம் தொடங்கியதிலிருந்தே நிதானம் இழந்தது செந்தில்வேல் தான். "பொங்கலுக்குக் கடந்த வருடம் பரிசுத் தொகை கொடுத்தாச்சு" என்று கூச்சமே இல்லாமல் ஒரு பச்சைப் பொய்யைச் சொன்னார். உடனே அங்கிருந்த பார்வையாளர்கள் - அதிமுக, நாதக, தவெக என கட்சிகளைக் கடந்து பொதுமக்களாக "எங்களுக்கு வரவில்லை, பொய் சொல்லாதீங்க" என்று முகத்துக்கு நேராகக் கேள்வி கேட்டனர். இந்த அவமானத்தைத் தாங்க முடியாமல், பேச்சைத் திசைதிருப்ப மகாராஷ்டிரா அரசியல் பக்கம் தாவினார். அங்கும் ஒரு அப்பட்டமான பொய்யைச் சொன்னார். அதற்கும் மக்கள், "தமிழ்நாட்டைப் பற்றிப் பேசுங்க, மகாராஷ்டிரா எதற்கு?" என்று முட்டுக் கொடுத்தனர். மக்களிடம் இப்படித் தொடர்ந்து அம்பலப்பட்டுப் போனது தான் அவருடைய கோபத்திற்குக் காரணம்! கேள்வி கேட்ட மக்களிடம் பதில் சொல்ல வக்கில்லை; உடனே தனது பத்திரிகையாளர் முகமூடியைக் கழற்றி எறிந்துவிட்டு, சபை நாகரிகம் இல்லாமல் மிகக் கேவலமான, ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்திக் கத்த ஆரம்பித்தார். "நான் நினைச்சா 100 பேரை இறக்கிக் காட்டுறேன்" என்று ஒரு பத்திரிகையாளர் மேடையில் மிரட்டுகிறார் என்றால், இவர் நடுநிலையானவரா அல்லது கூலிப்படைத் தலைவரா? அவர் நிதானம் இழந்து ஆபாசமாகப் பேசியபோதும், நானும், நிகழ்ச்சித் தொகுப்பாளரும் அவரை எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றோம். வெளியே வந்து "சூர்யா என்னைத் தடுக்கவில்லை" என்று அப்பட்டமாகப் பொய் சொல்கிறார். விவாதத்திற்கு வருபவர்கள் விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் பக்குவத்தோடு வர வேண்டும். அதை விட்டுவிட்டுத் தெருச்சண்டை போடுவதுதான் உங்கள் அறமா? விவாத மேடையில் அவமானப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாத செந்தில்வேல், அரங்கை விட்டு வெளியேறியதும் அமைச்சர் சேகர் பாபுவைத் தொடர்புகொண்டு பேசி, திமுக ரவுடிகளைத் திரட்டினார். நாங்கள் வெளியே வரும்போது, "ஒரு 10 நிமிஷம் போலீஸ் விலகி இருங்க, நாங்க பார்த்துக்கிறோம்" என்று சொல்லி, மின்விளக்குகளை அணைத்துவிட்டு திட்டமிட்டு எங்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். அங்குப் பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினரையே அந்தக் கும்பல் தாக்கியது என்றால், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! அங்கிருந்த திமுக MP தங்க தமிழ்செல்வன் கூட கண்ணியமாகத் தான் நடந்துகொண்டார். அவர் செய்யாத ரவுடித்தனத்தை, பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொள்ளும் செந்தில்வேல் ஏன் செய்கிறார்? திமுகவிற்கு முட்டுக் கொடுப்பதற்கும், 'சோறு' போடுபவர்களுக்கு விசுவாசம் காட்டுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? திட்டமிட்டு எங்களைத் தாக்கிய ரவுடிகள் சுதந்திரமாகச் சுற்றுகிறார்கள். ஆனால், அடிவாங்கிய எங்கள் இளைஞரணிச் செயற்குழு உறுப்பினர் லால் பிரசாத், சமூக ஊடகப் பிரிவு உறுப்பினர் பாரதி கண்ணன் ஆகியோர் மீது சட்டவிரோத வழக்குப் போட்டுச் சிறையில் அடைத்துள்ளார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக என் மீது போடப்பட்ட FIR - நான் ஒரு பெண்ணை நெஞ்சில் எட்டி உதைத்தேனாம்! ஒரு பெண்ணைப் பெற்ற தாயாக வணங்கும் கூட்டத்தைச் சேர்ந்தவன் நான். இதைவிடக் கேவலமான, அசிங்கமான ஒரு பொய்யைச் சொல்ல முடியுமா? சிசிடிவி காட்சிகள் இருக்கின்றன, சாட்சிகள் இருக்கிறார்கள். உங்கள் அதிகாரத் திமிரில் உண்மையை மறைக்கப் பார்க்கிறீர்கள்! திமுக அரசின் இந்தக் கோழைத்தனமான அடக்குமுறைகளுக்கோ, பொய் வழக்குகளுக்கோ, சிறைச்சாலைக்கோ இந்த சூர்யா ஒருபோதும் அஞ்ச மாட்டான்! உங்கள் அராஜகத்தைக்கண்டு ஓடி ஒளிய நாங்கள் ஒன்றும் உங்களைப் போலக் கோழைகள் அல்ல. இந்த வன்முறைக்கு எதிராகவும், என் தம்பிகளின் சட்டவிரோத கைதுக்கு எதிராகவும் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் என் போராட்டம் இன்னும் ஆக்ரோஷமாகத் தொடரும். இன்னும் வலிமையாக, இன்னும் சத்தமாக உங்கள் முகத்திரையைக் கிழிப்பேன்! தர்மம் வெல்லும்! P.K. Sekar Babu ThangaTamilSelvan-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Senthil #DMKFails

Dr.SG Suryah

52,718 просмотров • 7 месяцев назад