Video wird geladen...

Video konnte nicht geladen werden

Zur Startseite

முழு போதையில் கொடியேற்ற முடியாமல் தவித்த நைனா..🫢

281,320 Aufrufe • vor 5 Monaten •via X (Twitter)

0 Kommentare

Keine Kommentare verfügbar

Kommentare vom Original-Post werden hier angezeigt

Ähnliche Videos

சென்னை #வேளச்சேரி சட்டமன்ற தொகுதி, மடிப்பாக்கத்தில் மூத்த குடிமக்கள் வசிக்கும் வீட்டில், உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவர் கீழே விழுந்து எழ முடியாமல் தவித்த நிலையில், பூட்டிய கதவை திறந்து மீட்ட வேளச்சேரி தீயணைப்புத் நிலைய வீரர்களின் செயல் பாராட்டுக்குரியது. பதட்டப்படாமல் முதியவரை மீட்டு, ஒரு மகனைப் போல அவருக்கு முதலுதவி அளித்து, முகம் துடைத்து, தண்ணீர் கொடுத்து தேற்றிய அந்த மனிதாபிமானம் நெகிழ வைக்கிறது. அரசுப் பணியாக மட்டும் பார்க்காமல், அக்கறையோடு செயல்பட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Dr.SG Suryah

40,411 Aufrufe • vor 6 Monaten

தனது படிப்பை தொடர முடியாமல் வறுமையில் தவித்த மாணவியின் உயர்கல்விக்கு உதவிய திரு. Kamal Haasan இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகேயுள்ள தெற்குவாடி மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி சோபனா. தந்தை மீனவக்கூலியாகக் கடலுக்குச் சென்று வருபவர். அம்மா நண்டு ஏற்றுமதி நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை பார்ப்பவர். வறுமையான குடும்பச் சூழலுக்கு மத்தியில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய சோபனா 562 மதிப்பெண்கள் பெற்று, தான் படித்த அரசுப் பள்ளியிலேயே முதல் மாணவியாகத் தேர்வானார். ஏதேனும் ஒரு கல்லூரியில் பட்டம் பயின்ற பிறகு குடிமைப்பணித் தேர்வு எழுத வேண்டும் என்பது சோபனாவின் கனவு. ஆனால், கடன் சுமையால் குடும்பம் அவதியுற்று வருவதால், உயர்கல்வியைத் தொடரும் சூழ்நிலை இல்லை என்பதை உணர்ந்து ஒரு ஆடையகத்தில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார் சோபனா. இந்நிலையில், இவரைப்பற்றிய செய்திகளை சமூகவலைதளங்களில் கவனித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள். உடனே மாணவி சோபனாவை சென்னைக்கு வரவழைத்து, தனது கமல் பண்பாட்டு மையத்தின் சார்பாக சோபனா உயர்கல்வியைத் தொடரவும், அவரது கனவான குடிமைப்பணித் தேர்வுகளுக்கான ஆயத்தங்களைச் செய்வதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். இச்சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. Arunachalam, ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாநிலச் செயலாளர் திரு. Murali Appas மற்றும் மாணவரணி மாநிலச் செயலாளர் திரு. Rakesh Rajasekaran உடனிருந்தனர். அந்த மாணவியை அழைத்து வந்து திரு. கமல் ஹாசன் அவர்களை சந்திக்க வைக்கும் நிகழ்வை, பாம்பனை சேர்ந்த கடலோசை சமுதாய ஒளிபரப்பு நிலையத்தலைவர் காயத்ரி உஸ்மான் அவர்களும், நிகழ்ச்சித் தலைவர் திரு. லெனின் அவர்களும் ஏற்பாடு செய்தனர். #KamalHaasan #MakkalNeedhiMaiam

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்

21,565 Aufrufe • vor 1 Jahr

மதுரையில் பெருகி வரும் ஆட்டோக்கள்: கண்டு கொள்ளாத அதிகாரிகள். மதுரை. மதுரையில் உச்சகட்ட மதுபோதையில் ஆட்டோவை ஓட்டிவந்த நபர் அரசு பேருந்தில் மோதி விபத்து - நல்வாய்ப்பாக தப்பிய மாணவர்கள். மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து மாட்டுத்தாவணி செல்லும் அரசு பேருந்து அவுட்போஸ்ட் பகுதி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் பின்னால் மதுபோதையில் ஷேர் ஆட்டோவை ஓட்டிவந்த இருவர் அரசு பேருந்து மீது மோதியது. அரசு பேருந்தில் மாணவர்கள் பயணித்து வந்த நிலையில், நல்வாய்ப்பாக மாணவர்கள் காயமின்றி தப்பினர். உச்சகட்ட மது போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோவிற்குள் இருந்து வெளியேற முடியாத அளவிற்கு போதையில் வெளியேற முடியாமல் தவித்ததோடு எவனையும் என்னை எதுவும் செய்ய முடியாது என கூறி சவால்விட்டபடி நின்றார். உச்சகட்ட மதுபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோவை இயக்கிய நிலையில் நல்வாய்ப்பாக பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் தப்பினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தல்லாகுளம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மதுரை மாநகர் பகுதியில் ஷேர்ஆட்டோக்களை ஓட்டும் ஓட்டுநர்கள் தொடர்ந்து மதுபோதையிலும் கஞ்சா போதையிலும் வாகனங்களை இயக்குவதால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஆளாகி வரும் நிலை உள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில், மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள் சாலை விதிகளை மீறி, அரசு நகரப் பஸ்கள் போல தொடர்ந்து செயல்படுகிறது. மேலும் பல ஆட்டோக்கள் உரிய பெர்மிட் இன்றியும், விதிகளை மீறி இயக்கப்படுவதாக, சமூக ஆர்வலர்கள் காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மீது குற்றம் சாட்டுகின்றனர். தலை கவசம் இல்லாமல் சாலையில் இரு சக்கர வாகனத்தில் பயணிப்போரை பாய்ந்து பிடிக்கும் காவல் துறையினர். விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்களை கண்டு காணாத போல விடுவது ஏன் என்பது பொதுமக்களின் புகார் ஆகும். மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்டு, மாட்டுத்தாவணி, அண்ணாநகர், அரசு மருத்துவமனை, சிம்மக்கல்,தெப்பக்குளம், புதூர், சோழவந்தான், வாடிப்பட்டி, சமயநல்லூர், காளவாசல், ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட பல பகுதிகளில் பஸ் ஸ்டாப்பில் நிறுத்தி, பயணிகள் பஸ்களுக்கு சென்று ஏறாதவாறு இடையூறாக நிறுத்துகின்றனர். மதுரை காவல் ஆணையாளர், மதுரை மாவட்ட போலீஸ் எஸ்பி நேரிடையாக ஆய்வு செய்து, விதிகளை மீறி இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களை கட்டுப்படுத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஆகவே, மதுரை மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளும் காவல் துறையினரும் உரிய கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. DELTA news..

ஜெயராமன் திமுக

80,335 Aufrufe • vor 17 Tagen

அழகிய காலத்தில் வாழ்ந்த அற்புதமான காதல் கதை ♥️ என்னவளின் பேருந்து பயணம்..❤️ என் இருச்சக்கர வாகனப்பயணம்..❤️ அவளின் ஒற்றைப் பார்வைக்காக ஓடோடி வந்த தருணம்...❤️ என்னவள் செல்லும் பேருந்தை விரட்டுகிறேன் நான்..❤️ பின் தொடர்கிறேன்.. காரணம் அவளின் ஓரப்பார்வை என்மீது படவேண்டியே.. தென்றல் காற்றோடு சீரிப்பாய்கிறது என் வாகனம்.. அவளின் அந்த ஒத்த நொடி பார்வை என் மீது பட வேண்டுமென்பதற்காக மூச்சிரைக்க ஓடோடி வருகிறேன் ♥️ மூச்சிரைக்கும் வேளையிலே.. அவளின் முழு முகத்தை பார்த்துவிட கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு ஓடி வந்து அவள் இறங்கும் பேருந்து நிற்குமிடத்தை அடைகிறேன்... மனதிற்குள் ஏதோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றாக எனக்குள் நினைப்பு...❤️ ஆம் அவள் முகம் பார்ப்பதும் கூட தங்கப்பதக்கம் வெல்லும் சாதனை போலவே...💙 ஏன்னா, தங்கத்தை காண தவியாய் தவித்து ஓடிவந்து ஜெயித்தவன் என்பதால்...💖 என்னவளோ ஒற்றைப் புன்னகையோடு ஓரப்பார்வை வீசிச் செல்ல என் இதயமோ உருகி உருகி காதல் கொள்கிறது...❤️ காலங்கள் செல்கிறது... திருமணத்தை ஒருமனதாய் செய்து முடிக்க அவள் பெற்றோரை நாடினேன்.. அங்கே எங்கள் காதலின் முதல் தோல்வியை சந்திக்கின்றேன்... காதல் கல்யாணத்தில் முடியாமல் போகிறது... காரணம் மதம்..💔 காலங்கள் ஓடுகிறது.. நாளடைவில் என் மனதையும் மீறி எனக்கு வேறோரு திருமணம்.. இது காலத்தின் சோதனை.. என் மனதில் ஆராத வேதனை.. என்னவளின் மனதில் நீங்காத இடம் எனக்கு மட்டும்தான் என்பதை அவள் சொல்லாமல் தன் பெற்றோருக்கு புரிய வைக்கிறாள்.. காதல் பெண்ணுக்குள் ஏற்படும் போது இதயத்தில் கண் கொண்டே வயப்படுகிறாள்... சொல்லியக்காதலும் சொல்லாக்காதலும் பல உயிர்பபுடன் இருப்பதே இப்படிதானோ?? ஆம் என்னவள் என்னை அவள் மனதின் கண் வைத்து பார்த்துக்கொண்டதால் கடைசிவரை என் நினைவோடு நெஞ்சுக்குள் பொத்தி பொத்தி காதலோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றாள் காலம் முழுவதும்... காதலே என் முதற்காதலை காத்து நிற்பது காதலியே .. அன்புக் காதலியே ❤️ நான் கல்யாணம் செய்தவளும் நல்ல மனம் கொண்டவளே ❤️ காதலியும் நல்ல மனம் கொண்டவளே ❤️ இரு மனங்களோடு ஒன்று சேர்த்து வாழ என் மனம் ஏற்கவில்லை.. என் முதல் காதலும் தோற்கவில்லை.. நெஞ்சோரத்தில் என்றும் நிலைக்கும் முழு முதற்காதல் 🥰❤️💙😍💖 கவிஞர் Superstar_srini 🙏🏻

WhistlePodu 😍💖

24,135 Aufrufe • vor 2 Jahren

பாரி உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும் உன் எல்லா வீடியோவையும் பார்ப்பேன்! ஆறு மாதத்திற்கும் முன் அதிமுக பாஜகவுடன் சேர்ந்தால் அதிமுகவையும் மண்ணோடு மண்ணாக புதைப்பது தான் தமிழ்தேசியவாதிகள் என பேசிட்டு இப்ப தலைவர் சொன்னதை வச்சி அதிமுக பாஜகவிற்கு முட்டு கொடுக்கிறியே. நியாயமா? தல உன் மேலயும் நல்ல மதிப்பு இருக்கு Varun Talks நீயே சொல்லு! இப்ப அதிமுக பாஜக தவெக கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தால் பெரும்பாண்மை பெருமா இல்லையா அதை வைத்து Delimitation செய்யுமா இல்லையா? போன தேர்தலில் தமிழ் நாட்டில் மண்ணை கவ்வியதால்தான் பெரும்பாண்மை வராமல் பல விஷயங்கள் பாஜகவால் செய்ய முடியாமல் போனது! அது 2029-ல் அதிமுக கூட்டணியில் அதை செய்யுமா செய்யாதா? சரி தவெக அதிமுக காங்கிரஸ் ஆட்சியும் தான் வரக்கூடாது என பேசியிருக்கிறார் இனி Delete பண்ண முடியாது முழு காணொலி பதிவிறக்கம் செய்து வைத்து இருக்கேன்🤣 பாரி Paari Saalan உன் வேலையை நீ பாரு எங்க வேலையை நாங்க பாக்கிறோம்! முதன்மை எப்படி முதன்மை தமிழ்தேசிய கட்சியாக நாங்க திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக எல்லாத்தையும் எதிர்க்கிறோம் எங்கள் கடைசி மூச்சு உள்ளவரை. உன் Narrative-வை பொத்தி வைத்துக்கொள்ளவும். நீ அறிவாளி என்று தான் மரியாதை கொடுத்தேன் இனி எதிர்பார்க்காதே! நான் கூட நிறைய நாதக தம்பிகளை பாரி பற்றி பேசாதீங்க அவர் நம்ம நட்புசக்தி தான் என சொல்லி இருக்கேன். ஆனா தேசியத் தலைவரை இந்த கேடுகெட்ட பாஜக அதிமுக கூட்டணிக்கு வாக்கி கேட்க இழுத்தே போனதே நீ தமிழ்தேசியம் பேச வக்கற்று போயிட்ட Paari Saalan உனக்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசுதான் உனக்கு ஒன்னு சொல்கிறேன் நாமதமிழர் கட்சி என்று திராவிட ஆரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கிற நாளில் நான் இந்த கட்சியில் இருக்கமாட்டேன்! ஆனால் அண்ணன் சீமானின் தம்பியாக தமிழ்தேசியவாதியாக பயணிப்பேன்! #தமிழ்தேசியம்

குவிரன்

22,747 Aufrufe • vor 10 Monaten

தமிழ் நாட்டுக்கு ஹிந்தி வேண்டுமா வேண்டாமா என்பது தனி விவாதம். ஆனால் இந்தப் பெண் சொல்லும் அற்புதமான வாதம் நாம் கவனிக்க வேண்டியது. தமிழ் நாட்டில் ஹிந்தி வந்திருந்தால் நான் பானிப்பூரி விற்றிருப்பேன் என அவர் ஆரம்பித்தது rhetoric போல என்று நினைத்தால், இங்கு ஹிந்தி வந்திருந்தால் என்னால் கண்டிப்பாக இந்தியாவைத் தாண்டி சென்றிருக்க முடியாமல் இட்லி விற்றுக்கொண்டு இருந்திருப்பேன் என்கிறார் மீண்டும் அழுத்தமாக. Two languages = development என்றால், இரண்டு மொழிகளை மட்டுமே கற்றுக்கொண்ட நாடுகள் / மாநிலங்கள் வளர்ந்து விட்டனவா என்பது கேள்வி. இது எப்படியிருக்கிறது என்றால், ஒற்றை மொழிக் கொள்கை கொண்ட ஜப்பான், சீனா, தென் கொரியா ஜெர்மனி போன்ற நாடுகள் வளர்ந்ததற்கு காரணமே அவர்கள் ஒரே ஒரு மொழியில் கவனம் செலுத்துவது தான் என்று உளறுவது போன்றது. அவர்களின் உழைப்பு, உள்கட்டமைப்பு, ஊழலற்ற அரசியல், கல்வித் தரம் என வேறு எதையுமே கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், ஒற்றை மொழி கற்றுக்கொண்டதால்தான் உயர்ந்துவிட்டார்கள் என பேசுவதை விட அபத்தம் வேறில்லை. ஹிந்தி வந்தால் பாடச்சுமை அதிகமாகும், பாடச்சுமை அதிகமானால் கல்வித் தரம் குறையும், கல்வித் தரம் குறைந்தால் நாங்கள் பானிப்பூரி விற்போம் என்பது கொத்தடிமைகளின் வாதம். on the other side, ஐரோப்பாவில் மிக வளர்ந்த நாடுகளில் சுவிட்சர்லாந்து முதன்மையானது என்றால் யாரும் அதை மறுக்க முடியாது. ஆனால் வெறும் 90 லட்சம் மக்கள் வாழும் ஒரு குட்டி நாட்டில் (The population of Chennai is 1.2 crore), நான்கு அதிகாரப்பூர்வமான மொழிகள் இருக்கின்றன: ஜெர்மன், ஃபிரெஞ்ச், இத்தாலியன், ரோமன்ச். இந்த ஒவ்வொரு மொழியினரும் தங்கள் தாய் மொழியில் பேச முழு உரிமை உண்டு. அதே நேரம், அனைத்து அரசு ஆவணங்கள், பெயர்ப் பலகைகள், அறிக்கைகள், இணையதளங்கள் அனைத்தும் ஜெர்மன், ஃபிரெஞ்ச், இத்தாலியன் என்கிற மும்மொழிகளிலும் தான் இருக்கும். அனைத்து சுவிஸ் மக்களுக்கும் இந்த நான்கு மொழிகளும் தெரியாது; அவரவர் பகுதிகளில் அவரவர் மொழியைப் பேசிக்கொள்வார்கள். ஆனால்... ஆனால்... அனைத்து குழந்தைகளும் பள்ளியில் தங்கள் தாய் மொழியோடு கூட மற்றொரு தேசிய மொழியைக் கட்டாயம் கற்க வேண்டும். இதற்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒற்றை மொழி மட்டுமே கற்றுக்கொண்ட ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகள் மொழியால் மட்டுமே தாழவும் இல்லை, பல மொழிகள் கற்றுக்கொண்ட சுவிட்சர்லாந்து அதிக மொழி கற்றுக்கொண்டதால் மட்டுமே உயரவும் இல்லை. அவர்களின் வளர்ச்சி அதற்குள் அடங்காமல், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம், ஊழலுக்கு எதிரான வலுவான சட்டங்கள், அறிவியல் ஆய்வுகள், வளர்ச்சி சார்ந்த அரசியல் பார்வை என வேறு பல கூறுகளால் மட்டுமே சாத்தியமானது. Simply put, these countries prospered because they built institutions and skills, not because they taught fewer or more languages.

The Kevin Paul Show

32,497 Aufrufe • vor 7 Monaten