Video wird geladen...

Video konnte nicht geladen werden

Zur Startseite

வந்தே மாதரம் 🤦🏻‍♂️

22,979 Aufrufe • vor 1 Monat •via X (Twitter)

0 Kommentare

Keine Kommentare verfügbar

Kommentare vom Original-Post werden hier angezeigt

Ähnliche Videos

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய அமர்வில், வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டை கொண்டாடும் விதமாக சிறப்பு விவாதத்தை தொடங்கி வைத்து நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. Narendra Modi அவர்கள் உரையாற்றினார். இந்திய சுதந்திர போராட்ட வேள்வியில் உதித்தெழுந்த நமது தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை புகழ்ந்து பேசிய நமது பிரதமர், ஐயா வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் சுதேசி கப்பலில் “வந்தே மாதரம்” என எழுதப்பட்டு இருந்ததை பெருமிதத்தோடு குறிப்பிட்டார். மேலும், தேசியக்கவி பாரதியார் அவர்கள் எழுதிய “தாயின் மணிக்கொடி பாரீர்” பாடல் வரிகளை கூறி தமிழகத்தில் விளைந்திட்ட ஒப்பில்லா தேசப்பற்றை பாராளுமன்றத்தில் நமது பிரதமர் குறிப்பிட்டது, தமிழக சுதந்திர போராட்ட வீரர்களுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் அமைந்தது என்றால் அது மிகையாகாது. வந்தே மாதரம்!

K.Annamalai

24,840 Aufrufe • vor 6 Monaten

அ.தி.மு.கவில் இருந்து, இப்போது விலகி த.வெ.க ஆதரவாளராக மாறியிருக்கும் திரு ஜவகர் அலி அவர்கள் நேற்றைய ‘மாலைமுரசு’ தொலைக்காட்சி விவாதத்தில் ‘ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்ட கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவில் ’வந்தே மாதரம்’ பாடல் பாடப்பட்டது’ என்று தெரிவித்தார். நான் அந்த நிகழ்ச்சியின் காணொலியை அலைபேசியில் எடுத்து அவர் சொன்னது தவறு என்று நிரூபித்தேன். ஆனாலும் அவர் தொடர்ந்து பொய் சொல்வதை நிறுத்தவில்லை. (கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவின் முழு காணொலி பின்னூட்டத்தில். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசியகீதமும் பாடப்பட்டது. ‘வந்தே மாதரம்’ பாடப்படவில்லை)

sugunadiwakar

47,548 Aufrufe • vor 1 Monat

மன்னிப்பு கேளுங்கள் ஜவாஹிருல்லா! தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஹெச்.ஜவாஹிருல்லா இன்று, வந்தே மாதரம் பாடல் குறித்து தரக்குறைவாக பேசியிருப்பதைத் தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. "வந்தே மாதரம்" நம் சுதந்திரப் போராட்டக் காலத்தில் எழுதப்பட்டு அன்றைய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மாபெரும் உத்வேகத்தையும் உணர்ச்சியினையும் அளித்த பாடல். அந்தப் பாடல் இனி அனைத்து அரசு விழாக்களிலும், பள்ளிக்கூடங்களிலும் தேசிய கீதம் பாடப்பட்டவதற்கு முன் அவசியம் பாடப்பட வேண்டும் என சமீபத்தில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசின் உத்தரவால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமல்லாமல், "வந்தே மாதரம்" பாடல் முழுக்க வெறுப்புணர்வு கொண்டது என்றும் மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கில் எழுதப்பட்டது என்றும், தனது சொந்த வெறுப்புணர்வை உமிழ்ந்துள்ளார் ஜவாஹிருல்லா. மொத்த பாரத மக்களையும் ஒருங்கிணைக்கும் "வந்தே மாதரம்" பாடலை "அரசிலமைப்புச் சட்டத்திற்கு முரணான பாடல்" என்றும் இப்பாடலைக் கட்டாயமாக்கக் கூடாது எனவும் தரம் தாழ்த்திக் கூறியிருப்பது ஏற்புடையதல்ல. முற்றிலும் காழ்ப்புணர்ச்சியோடு பேசப்பட்டிருக்கும் இப்பேச்சு நாட்டு ஒற்றுமைக்கு வைக்கும் வேட்டு. அவரது பேச்சு பாரத நாட்டு இறையாண்மைக்கு எதிரான செயல் என உணர்ந்து அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்துகிறது.

BJP Tamilnadu

12,904 Aufrufe • vor 4 Monaten