
கார்த்திகைச்செல்வன்
@Kaarthikaichelv • 15,851 subscribers
மாநிலச் செயலாளர், தமிழ் மீட்சிப் பாசறை, நாம் தமிழர் கட்சி | Belong to the Thamizh Stock | வேங்கை வலையொளி
Shorts
Videos

பிப்ரவரி 20 - மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டுத் திடலில், மாநாடு ஏற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். உலகம் முழுவதுமிருந்து தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் வருகைப் புரிய தொடங்கியிருந்தார்கள். கனடாவிலிருந்து பிரான்சிலிருந்து சுவிசிலிருந்து ஆசுதிரேலியாவிலிருந்து என்று ஈழத்தமிழர்கள் பெருமளவில் வருகைப் புரிந்திருந்தார்கள். என்னிடமும் வந்து பேசினார்கள். அதுபோல, மலேசியாவிலிருந்து மலேசிய தமிழர் ஒருவரும் வந்து பேச்சுக்கொடுத்தார். நாங்கள் அண்ணனுடைய கொள்கைகளைப் பின்பற்றி மலேசியாவில் பெரிய அளவில் வேளாண்மை செய்து வருகிறோம். அதைப் பற்றிய காட்சிகள் இந்தப் செருகு பதிவி(Pen Drive)ல் இருக்கிறது என்று என்னிடம் ஒரு செருகு பதிவியையும் வழங்கினார். பார்த்துவிட்டுத் தொடர்பில் வாருங்கள் என்று சொல்லிவிட்டு என்னுடைய எண்ணை குறித்துக் கொண்டு போனார்கள். பல பைகள் மாறி எங்கோ ஒரு பையில் தங்கியிருந்தது அந்தச் செருகு பதிவி. இந்த வார இறுதியில் சில பைகளை எடுத்துத் தூய்மைச் செய்யும்பொழுது அந்தச் செருகு பதிவியைக் கவனித்தேன். ஐயோ இது மலேசியாவிலிருந்து வந்த நம் உறவு ஒருத்தர் கொடுத்ததாச்சே என்று உடனே மடிக்கணினியில் போட்டுப் பார்த்தேன். அதில் இருந்தது ஒரே காணொலி, இந்தக் காணொலி தான். அங்கு எப்படி வேளாண்மையைப் பெரிய அளவில் செய்து கொண்டிருக்கிறார் என்பதைக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அண்ணன் சீமான் சொல்வது போல வேளாண்மை என்பது தொழில் அல்ல, அது தமிழர்களின் பண்பாடு என்பதைச் சொல்லாக மட்டுமில்லாமல், செயலாகவும் செய்து அதைக் காட்சியாகவும் பதிந்து, அதில் நாம் தமிழர் முழக்கத்தையும் இணைத்து, அதை நேரில் கொண்டு வந்து நம்மிடமும் கொடுத்து விட்டுப் போகும் அளவிற்கு ஒரு உணர்வு எழுச்சியை நாம் தமிழர் கட்சியும் அண்ணன் சீமானும் ஏற்படுத்தி உள்ளார்கள்! நாம் தமிழர் கட்சிக்கு முன்பு பல கட்சிகள் தோன்றிப் பெரிதாக வளர்ந்து, ஆட்சி அதிகாரத்தை அடைந்து பல்லாண்டுகள் ஆட்சியும் செய்துள்ளன. அதேபோல் நாம் தமிழர் கட்சிக்குப் பிறகு பிறந்து, இன்று ஆட்சி அதிகாரத்தை அடைந்த கட்சியும் உண்டு. அடைய துடித்துக் கொண்டிருக்கின்ற கட்சிகளும் உண்டு. ஆனால், அவற்றையெல்லாம் கடந்து, இதில் எந்தக் கட்சியாலும் செய்ய முடியாத ஒன்று, உலகத் தமிழர்களை ஒரே குடைக்குள் கொண்டு வருவது. அத்தகைய தமிழ்த்தேசியம் என்னும் கோடைக்குள் உலகத்தமிழர்களை ஒன்றிணைத்துக் கொண்டு வந்த பெருமை, நாம் தமிழர் கட்சியையே சாரும், அண்ணன் சீமானையே சாரும்! இவற்றையெல்லாம் பார்க்கும் போது தான், இந்த அற்ப தேர்தல் வெற்றி, தோல்வி எல்லாம் தமிழ்த்தேசியம் என்ற உயர்ந்த கொள்கையைப் பின்பற்றி நடக்கும் நம் போன்றவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல! கடுமையாக உழைப்போம்! தமிழ்த்தேசியத்தை வெல்ல வைத்து, அரியணை ஏற்றுவோம்!
கார்த்திகைச்செல்வன்12,013 Aufrufe • vor 1 Monat

"விஜய் நரகாசுரனைப் (திமுகவை) பார்த்து பயந்து எங்கள் மடிக்கு ஏறி வந்திருக்கிறார்" - அதிமுக MP இன்பதுரை - விஜய் திமுகவைப் பார்த்து பயந்தது உண்மையா? - விஜய் தற்போது அதிமுக மடியில் தான் தவழ்ந்து கொண்டிருக்கிறாரா? சூடு சுரணை இருக்கும் தவெககாரன் யாராவது சொல்லுங்களேன். TVK Vijay
கார்த்திகைச்செல்வன்61,611 Aufrufe • vor 10 Monaten

உதயநிதியும் சபரீசனும் 30000 கோடி கொள்ளை அடித்ததாக பிடிஆர் குரலில் வெளியான குரல்பதிவு உண்மைதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த சவுக்கு சங்கர் Savukku Shankar. இதைப்பற்றி இதுவரை வாய் திறக்காத Dr P Thiaga Rajan (PTR) M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் CMOTamilNadu. திமுக எதிர்ப்பு வேடம் போட்டுக் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காத பாஜக Narendra Modi Amit Shah Nainar Nagenthran K.Annamalai. முழுப்பின்னணி அறிய -
கார்த்திகைச்செல்வன்50,619 Aufrufe • vor 10 Monaten

இன்று காலை News7 Tamil ஊடகத்தில்... இடும்பாவனம் கார்த்திக் -"இந்தியாவை இந்துக்களின் நாடு என்கிறார் ராகுல் காந்தி" SUGITHA K S - "எங்க சொன்னார்?" விடை - "ஜெய்ப்பூரில்" CPI Tamilnadu CPI இலெனின் - "இந்தியர்களின் நாடு என்று தான் சொன்னார்" விடை - தவறான தகவல் சான்று 👇🏾
கார்த்திகைச்செல்வன்77,923 Aufrufe • vor 1 Jahr

மயிலாப்பூரில் மண்ணான Maridhas பாஜக தில்லி மேலிடம் முடிவு செய்யும் வரை, திமுக அரசையும் நீதிமன்றங்களையும் அதிகாரங்களையும் விஜய் மீதும் அவருடைய கும்பல் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்த மாரிதாஸ், அதற்குத் திமுகவிடம் எவ்வளவு வாங்கினார்?
கார்த்திகைச்செல்வன்35,067 Aufrufe • vor 10 Monaten

அதே 2019 சூலூர் இடைதேர்தல் களத்தில் வாக்குகளை see more...
கார்த்திகைச்செல்வன்27,509 Aufrufe • vor 10 Monaten

தேசியத் தலைவரைப் பற்றி தாய்ப் போல் காத்த தலைவர் என்ற விஜய், கொலைகாரர் என்று விமர்சனம் செய்யும் அணில் குஞ்சுகள்! இதில் எது தவெகவின் கொள்கை? இது தான் திராவிடம் ஒரு கண்ணு, தமிழ்த்தேசியம் ஒரு கண்ணா? எப்படியும் உங்கள் தந்தை பெரியார் எனும் ஈரவெங்காயம் தொடர்ந்து பொளக்கப்படுவது உறுதி!
கார்த்திகைச்செல்வன்21,966 Aufrufe • vor 7 Monaten

தமிழ்த்தேசியம் vs திராவிடம் கருத்தாடல் சீமானால் கூர்மையடைந்து வருவதால், தங்களின் திராவிட அரசியலைக் காப்பாற்றிக் கொள்ளவே இரும்புக்காலம் பற்றிய செய்தியை இந்த நேரத்தில் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார் என்கின்றனர் தில்லி ஊடகங்களில் ஒன்றான ThePrintIndia. தற்போது வரை தமிழ் தான் திராவிடம் என்று எண்ணியிருந்த தில்லி ஊடகங்களுக்கும் திராவிடம் என்றால் பிறமொழியாளர் ஆதிக்கம் என்று புரிந்திருக்கிறது. நீங்க ஜெயிச்சிட்டீங்க அண்ணே செந்தமிழன் சீமான்!
கார்த்திகைச்செல்வன்37,876 Aufrufe • vor 1 Jahr