Kanimozhi Santhosh's banner
Kanimozhi Santhosh's profile picture

Kanimozhi Santhosh

@Kanimozhi_tvk11,620 subscribers

கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! மக்களுக்காக மக்களுடன் 🤝

Shorts

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2026.. தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை #TNAssembly | #CMVijay

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2026.. தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை #TNAssembly | #CMVijay

70,226 Aufrufe

அன்புடைய கவுண்டம்பாளையம் தொகுதி வாக்காளப் பெருமக்களே! நமது தொகுதியின் வளர்ச்சிக்கும், உங்கள் உரிமைகளை சட்டமன்றத்தில் உரக்கச் சொல்லவும், வரும் தேர்தலில் "விசில்" சின்னத்திற்கு வாக்களியுங்கள்! சின்னம்: விசில் வரிசை எண்: 6 என்றும் மக்கள் பணியில் Dr. கனிமொழி சந்தோஷ் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் (கோவை மாநகர் மாவட்டம்) #TVK #DrKanimozhiSanthosh #tvkvijayofficial🇪🇸 #vijaypolitical #cbehqtvk

அன்புடைய கவுண்டம்பாளையம் தொகுதி வாக்காளப் பெருமக்களே! நமது தொகுதியின் வளர்ச்சிக்கும், உங்கள் உரிமைகளை சட்டமன்றத்தில் உரக்கச் சொல்லவும், வரும் தேர்தலில் "விசில்" சின்னத்திற்கு வாக்களியுங்கள்! சின்னம்: விசில் வரிசை எண்: 6 என்றும் மக்கள் பணியில் Dr. கனிமொழி சந்தோஷ் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் (கோவை மாநகர் மாவட்டம்) #TVK #DrKanimozhiSanthosh #tvkvijayofficial🇪🇸 #vijaypolitical #cbehqtvk

11,401 Aufrufe

Videos

Kanimozhi_tvk's profile picture

எனது அன்பு மக்களுக்கும், நண்பர்களுக்கும் ஒரு தகவல்… பல ஆண்டுகளாக நான் ஜோதிடராக மக்களை சந்தித்து வந்த எனது பழைய ஜோதிட அலுவலகம் இன்று வரை மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் சுமந்து நிற்கிறது. அந்த அலுவலகம் எனது வாழ்க்கைப் பயணத்தின் முக்கியமான நினைவுகளை தாங்கி நிற்கும் ஒரு இடம். தற்போது, எனது புதிய MLA அலுவலகத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அலுவலகத்தின் painting மற்றும் பிற பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மக்கள் பயன்பாட்டிற்கு சிறப்பாகவும், அனைவரும் எளிதாக சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைக்கக்கூடிய வகையிலும் அதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை, வழக்கம்போல நான் எனது பழைய ஜோதிட அலுவலகத்திலேயே பொதுமக்கள், அதிகாரிகள் மற்றும் என்னைச் சந்திக்க விரும்பும் அனைவரையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து வருகிறேன். எனக்கு மக்கள் சேவையே முதன்மை. அலுவலகம் எந்த இடத்தில் இருந்தாலும், மக்களின் நலனுக்காக என் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும். புதிய MLA அலுவலகம் முழுமையாக தயார் ஆனவுடன், மேலும் சிறப்பான சூழலில் அனைத்து பொதுமக்களையும் அங்கு சந்தித்து, உங்கள் தேவைகள் மற்றும் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க உறுதியாக உள்ளேன். உங்கள் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும் எனக்கு என்றும் உறுதுணையாக இருக்கிறது. என்றும் உங்கள் சேவையில்… — கனிமொழி சந்தோஷ் கவுண்டம்பாளையம் தொகுதி MLA

Kanimozhi Santhosh

589,270 Aufrufe • vor 2 Monaten

Kanimozhi_tvk's profile picture

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C.ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலுடன், இன்று துடியலூர் அண்ணா காலனி பகுதியில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் RD. கனிமொழி சந்தோஷ் அவர்கள், துடியலூர் பகுதி செயலாளர் திரு. சபரி மனோ, 1வது வார்டு செயலாளர் திரு. ஆனந்த் மற்றும் கழக நிர்வாகிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பராமரிப்பின்றி இருந்த கழிவுநீர் வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்யவும், புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி பொதுக் கழிப்பிடப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். மேலும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டிருந்தும், நீண்டகாலமாக பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் உள்ள இடங்களை முறையாகப் பராமரித்து, அவற்றை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். என்றும் மக்கள் பணியில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் RD.கனிமொழி சந்தோஷ், MLA

Kanimozhi Santhosh

25,775 Aufrufe • vor 23 Tagen

Kanimozhi_tvk's profile picture

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலுடன், United College of Pharmacy, தமிழ்நாடு அரசுடன் இணைந்து, சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில், "இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க, போதைப்பொருள் ஒழிப்பு என்பது அரசு மட்டுமல்ல; குடும்பம், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பும் ஆகும்" என்பதை வலியுறுத்தும் வகையில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆர்.டி. கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. அவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்கச் செய்து, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், இந்நிகழ்வில் பெரியநாயக்கன்பாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) திரு. பொன்னுசாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இவ்விழிப்புணர்வு பேரணியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, போதைப்பொருள் இல்லா சமூகத்தை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியதுடன், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் பணியில் தங்களது பங்களிப்பை வழங்கினர். இந்த பேரணி பொதுமக்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, இளைஞர்களின் நலனையும் சமூகத்தின் பாதுகாப்பையும் வலியுறுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

Kanimozhi Santhosh

10,921 Aufrufe • vor 25 Tagen

Keine weiteren Inhalte verfügbar