Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப's banner
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப's profile picture

Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப

@manickamtagore82,367 subscribers

President, Tamilnadu Congress Committee.@incTamilnadu MP for Virudhunagar (3rd term)

Shorts

United we stand 🤝 ⁦#Congress #TVK#CPM#IUML#VCK against #NEET

United we stand 🤝 ⁦#Congress #TVK#CPM#IUML#VCK against #NEET

30,890 views

Videos

manickamtagore's profile picture

🔥 SUPER GOAL — 50,000 SOCIAL MEDIA WARRIORS! தம்பி Vijay Vasanth தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் சமூக ஊடகப் படை புதிய வேகத்துடன் களமிறங்குகிறது! பொய்யை பரப்பும் சங்கி Fake News-ஐ உண்மையாலும் ஆதாரங்களாலும் எதிர்ப்போம். பணத்தாலும் ஆணவதாலும் இயக்கப்படும் #அல்றசில்றITWing யின் #ஆபாசநதி அரசியலை மக்கள் குரலால் முறியடிப்போம். 📱 நீங்களும் ஒரு Digital Warrior! 🔥 ஒவ்வொரு வாரியரும் ஒரு Truth Warrior! 🇮🇳 ஒவ்வொரு குரலும் 2029 INDIA வெற்றிக்கான குரல்! 🎯 50,000 Social Media Warriors 🇮🇳 2029 — INDIA வெற்றி ❤️ ராகுல் காந்தி — இந்தியாவின் பிரதமர்! வாருங்கள்… அணியில் இணையுங்கள்! பொய்யை எதிர்ப்போம். உண்மையைப் பரப்புவோம். INDIA-வை மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம். 2029-ல் ராகுல் காந்தியை பிரதமராக்குவோம்! #50KSocialMediaWarriors #VijayVasanth #Congress #INDIA2029 #RahulGandhi #FightFakeNews #TNCongress Tamil Nadu Congress Committee

Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப

41,442 views • 2 days ago

manickamtagore's profile picture

‘மோடி-லிமிட்டேஷன்’ (MODI-LIMITATION) என்பது இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கின்ற ஒரு மிகப்பெரிய அரசியல் சதி! கடந்த ஏப்ரல் 17 அன்று 'இந்தியா' கூட்டணியால் மக்களவையில் தோற்கடிக்கப்பட்ட இந்த ஆபத்தான மசோதாவை, 50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி மீண்டும் கொண்டுவர ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது. ஏன் இந்த மசோதாவை நாம் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்? - மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாட்டிற்குத் தண்டனையும், கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்குப் பரிசும் அளிப்பது அப்பட்டமான அநீதி! - 50% உயர்வு மூலம் உத்தரப் பிரதேசம் 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழ்நாடு 39-ல் இருந்து 59 ஆகவும் உயரும். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையேயான தொகுதி இடைவெளி 41-ல் இருந்து 61 ஆக விரிவடையும்! - எண்களின் பலமே முடிவுகளைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தில், இந்த இடைவெளி அதிகரிப்பு தென்னக மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகப் பறித்துவிடும். - கடந்த காலத்தில் அன்னை இந்திரா காந்தி அவர்களும், 2001-ல் வாஜ்பாய் அவர்களும் கொண்டு வந்த திருத்தங்கள் மூலமாகவே மக்களவை எண்ணிக்கை முடக்கப்பட்டது. அந்தப் பாதுகாப்பைத் தகர்க்கவே பாஜக துடிக்கிறது. - சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்கும் முன்பே இதைச் செய்தால், பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளைச் சரியாகத் தீர்மானிக்க முடியாது. இன்று (ஆகஸ்ட் 9 - வெள்ளையனே வெளியேறு நாள்) நடைபெறவுள்ள 'QUIT UNFAIR DELIMITATION MARCH' பேரணி என்பது செயல்முறைகளை விளக்குவதற்கான நிகழ்வு அல்ல; அது தமிழ்நாட்டின் அரசியல் இறையாண்மை, ஜனநாயக உரிமைகள் மற்றும் எதிர்காலத் தலைமுறையின் அதிகாரப் பாதுகாப்பிற்காக நாம் நடத்தும் உரிமைப் போராட்டம்! நமது மாநிலத்தின் சுயமரியாதையையும் அரசியல் உரிமைகளையும் எவராலும் பறிக்க முடியாது என்பதை உரக்கச் சொல்லவே இந்தப் நடைபயணம். மேலும், இந்த அநீதியான தொகுதி மறுவரையறைக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 'Unfair Delimitation' பாடலை உருவாக்கிய தம்பி Salam Mass அவர்களுக்கும், அவரது தொடர் முயற்சிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்! இது நம் அனைவரின் உரிமைக்கானப் போராட்டம்! தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைக்கும் இந்த மசோதாவை வீழ்த்த வாருங்கள்!✊ #REJECTMODILIMITATION

Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப

14,857 views • 1 month ago

manickamtagore's profile picture

தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி காமராஜ் மீது நேற்று இரவு திமுக ஆதரவாளர்களால் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது ஆட்டோ ரிக்‌ஷா சேதப்படுத்தப்பட்டு, கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, அவரது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை குறித்து திமுக மாவட்ட செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்த அவதூறு கருத்துகளை கண்டித்து நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் கலந்து கொண்டதற்கான அரசியல் பழிவாங்கலாக இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது. அமைதியான போராட்டம் என்பது ஜனநாயக உரிமை. கருத்து வேறுபாட்டுக்கு வன்முறையால் பதிலளிப்பது, மக்கள் தேர்தலில் நிராகரித்த பிறகு பொறுமையை இழந்து வரும் ஒரு கட்சியின் அகந்தையையும் சகிப்புத்தன்மையின்மையையும் வெளிப்படுத்துகிறது. அரசியல் ரீதியாக பதிலளிக்காமல், அமலாக்கத்துறை விசாரணைகளை எதிர்கொண்டு வரும் அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது காங்கிரஸ் தொண்டர்களை மிரட்டவும் தாக்கவும் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அமைதியான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தற்போது மிரட்டல்களுக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் தலைவர் சஹாயராஜ் உடனடியாக இந்த விவகாரத்தை நகர காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். காங்கிரஸ் நிர்வாகி காமராஜை கொலை செய்ய முயன்றவர்களுக்கு எதிராக கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கவும், தூத்துக்குடியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் நாங்கள் வலியுறுத்துகிறோம். திமுகவின் அகந்தையும் ரவுடித்தனமும் ஜனநாயக ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டும். உதயநிதியின் தலைமையில், வன்முறையும் மிரட்டலும் திமுகவின் அரசியல் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன. காங்கிரஸ் அமைதியாக இருக்காது. இந்த கோழைத்தனமான அரசியலை எதிர்த்து ஒன்றுபட்டு போராடுவோம்; இந்த வன்முறை சக்திக்கு எதிராக உறுதியாக நிற்போம். .#தூத்துக்குடிகாமராஜ்

Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப

30,391 views • 3 months ago

manickamtagore's profile picture

இந்தியா பின்பற்றும் தேர்தல் முறை First-Past-The-Post (FPTP). இந்த முறையில், மொத்த வாக்கு சதவீதம் மட்டும் அரசியல் வெற்றியை தீர்மானிக்காது; கூட்டணியின் வலிமை, மக்கள் ஆணை, வாக்குகளை இடங்களாக மாற்றும் திறன் ஆகியவையும் equally முக்கியம். 2021: DMK — 37.7% கூட்டணி — 45.4% 2026: DMK — 24.19% கூட்டணி — 27.21% இந்த எண்ணிக்கைகள் தெளிவாக சொல்லுவது என்னவென்றால், DMK-வின் முந்தைய பலம் பெரும்பாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவும், ஒன்றுபட்ட மதச்சார்பற்ற முன்னணியுமே. 2014-இல் இருந்த வாக்கு சதவீத நிலைக்கே மீண்டும் வந்திருப்பதை DMK வெளிப்படையாக ஏற்க விரும்பாமல் இருக்கலாம். ஆனால் உண்மையை மறைக்க முடியாது. மற்றவர்களை குறை கூறுவதால் அரசியல் யதார்த்தம் மாறாது. மக்கள் ஆதரவில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை. இந்த தேர்தல் இன்னொரு முக்கியமான செய்தியையும் கூறியுள்ளது: தமிழ்நாடு மக்கள் கூட்டணி ஆட்சிக்கே வாக்களித்துள்ளனர். திமுக ஏற்றுக்கொள்ளாத அரசியல் யதார்த்தத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். “ஆட்சியில் பங்கு” இனி ஒரு கோஷம் அல்ல — தமிழ்நாட்டின் புதிய அரசியல் நடைமுறை. #ஆட்சியில்பங்கு

Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப

30,243 views • 4 months ago