
நீலம் பண்பாட்டு மையம்
@Neelam_Culture • 60,598 subscribers
புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் சமூக விடுதலையை நோக்கி பயணிப்போம். ஜெய்பீம்! Let's walk the path of social liberation paved by Babasaheb Ambedkar. Jai Bhim!
Shorts
Videos

Election- ல ஏன் தனித்த நிற்க கூடாது ,தனித்த குரல் ஏன் இருக்க கூடாது,BJP தமிழ்நாட்டில் விட்டாவர்கள் யார்? பொது சமூகத்திலிருந்து தான் மாற்றம் நிகழ்ந்திருக்கு. சேரியிலிருந்து ஒரு ஒட்டு கூட போகவில்லை... -இயக்குனர் பா.இரஞ்சித்💥✨ #Ambedkarist #Buddhism #JaiBhim #PaRanjith Vaanam Art Festival
நீலம் பண்பாட்டு மையம்599,928 次观看 • 2 年前

#திருநெல்வேலிமாவட்டம் #பணங்குடி பகுதியில் திருநங்கைகள் மீது கடுமையான தாக்குதல் நடத்திய காவல்துறையை #நீலம்பண்பாட்டுமையம் மிக வன்மையாக கண்டிக்கிறது! பாலியல் தொழில் செய்வதாக பொய் குற்றச்சாட்டை சுமத்தி இரண்டு திருநங்கைகளை விசாரணைக்கு அழைத்துச் சென்றிருந்த காவல்துறையின் தவறான (1/
நீலம் பண்பாட்டு மையம்329,235 次观看 • 1 年前

#வன்மையாககண்டிக்கிறோம் புவனகிரி-சாத்தப்பாடி கிராமத்தில் நேற்று இரவு சாதி வெறியர்கள் தலித் இளைஞர்களை தாக்கிய சம்பவம் கொடூரமானது, சாதிவெறி கும்பலை உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தீண்டாமை வெறி இன்னும் அடங்கவில்லை!
நீலம் பண்பாட்டு மையம்491,465 次观看 • 3 年前

வன்மையான கண்டனங்கள்! தமிழக அரசே சென்னை தலைநகர் மையத்தில் அரங்கேறும் சாதிய கொடுமையை தடுத்திட வேண்டும்! சைதாப்பேட்டையில் உள்ள சுப்பு பிள்ளை தோட்டம் பகுதியில் சாதி அடிப்படையில் குடியிருப்பு ஒதுக்கீட்டை தடுத்திடு சட்டப்படி மீண்டும் பொதுக்குலுக்கள் நடத்தி குடியிருப்புகளை ஒதுக்கீடு (1/
நீலம் பண்பாட்டு மையம்10,980 次观看 • 14 天前

வன்மையான கண்டனங்கள்! #கிருஷ்ணகிரியில் தொடரும் சாதிய தீண்டாமை வன்முறை. கிருஷ்ணகிரி மாவட்டம் #சோக்காடி கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவில் புதுப்பிக்கும் வேலை செய்தனர்,அங்கு தூசு பறந்ததை கேட்டுதன் விளைவாக 4 மணியளவில் அதிமுக ஒன்றிய செயலாளர் இராஜன் சாதிரீதியாக கடுமையாக பேசி உள்ளனர், பிறகு சம்மதானம் ஏற்பாட்டு வந்துள்ளது, காவல்துறைக்கு இப்பிரச்சினை தெரிந்து 6 மணியிலிருந்து இரவு முழுவதும் இருந்துள்ளனர், ஆனால் இரவு 10 மணிக்கு அவரின் தம்பி மற்றும் 200 முதல் 300 நபர்கள் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பட்டியலின வீட்டின் மீது கல் எறிந்தும், நெருப்பு வைத்தும், பெண்களை அடித்து வன்முறை செய்து மக்கள் மீது கொடூர தாக்குதல் நடந்தேறி உள்ளது. இதை வேடிக்கை பார்த்துள்ளது காவல்துறை,பிறகு காவல்துறை பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பொய் சொல்லி மக்கள் போராட்டத்தை தடுத்தும் நிறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் இந்த அராஜக போக்கு எந்த விதத்தில் நியாயம்? கேட்டால் இரு பக்கமும் வழக்கு பதிவு செய்வோம் என்று கூறுகின்றனர்... தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளிகளை இதுவரை கைது செய்ய வில்லை, இப்பகுதியின் காவல்துறை சட்டத்தை அவமதித்து வருகிறார்கள், மாவட்ட ஆட்சியர் District Collector, Krishnagiri இதை தீவிரமாக விசாரிக்க வேண்டும். தமிழக அரசே CMOTamilNadu இப்பகுதி மீண்டும் தருமபுரி வன்முறையாக காட்சி அளிக்கிறது இந்த கோர சாதிய தீண்டாமை வன்முறை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இப்பகுதி காவல்துறையின் மெத்தன போக்கு நிச்சயம் இனி பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவே உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரைப் பணி நீக்கம் செய்ய வேண்டும். தொடர்ந்து மூன்று பிரச்சினையில் SP தலித் மக்கள் மீது வழக்கு பதிவு செய்து கொடுமை செய்து வருகின்றனர் இதனால் படித்த இளைஞர்கள் பாதிப்பு அடைக்கின்றனர் இதை அரசின் கவனத்திற்கு எடுத்து வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக நிற்பது நம் அனைவரின் தலையாயக் கடமையாகும். அரசே பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு நீதி வழங்கிட வேண்டும்! National SC-ST Hub
நீலம் பண்பாட்டு மையம்102,092 次观看 • 2 年前

Wishing the new Chief Justice of India the strength to uphold the Constitution in its true spirit — one that Dr. Babasaheb Ambedkar envisioned: rooted in justice, liberty, equality, and fraternity. May justice finally reach those long denied. #JaiBhim pa.ranjith
நீலம் பண்பாட்டு மையம்49,538 次观看 • 1 年前

#பொங்கல் விளையாட்டில் பிரச்சினை என்ற ஒரே காரணத்திற்காக மணிகண்டன் என்கிற தலித் இளைஞர் காவல்துறை முன்பே சமூக விரோதிகளான சாதி வெறியர்களால் கழுத்தறுத்து படுகொலை செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. #பெரம்பலூர்மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், கைகளத்தூர் பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் மணிகண்டனை அப்பகுதியில் உள்ள தேவேந்திரன் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்துள்ளார். இன்று காலை சுமார் 10.30 மணியளவில் சமாதானம் பேச காவல்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில், காவல் நிலையத்தை அல்லாத வேறொரு இடத்தில் வைத்து கட்டப்பஞ்சாயத்து பேசியபோது, காவல்துறை கண் முன்னேயே கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை நிகழ்ந்துள்ளது, இது தமிழ்நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு CMOTamilNadu படுகொலை செய்த கயவர்கள் அனைவரையும் #SCSTவன்கொடுமைதடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவுச் செய்து உடனடியாக சிறைப்படுத்த வேண்டும்.மேலும்,இந்த சம்பவத்திற்கு பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் அலட்சியமே படுகொலைக்கு காரணம் உடனடியாக காவல்துறையினர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டும். District Collector, Perambalur
நீலம் பண்பாட்டு மையம்56,116 次观看 • 1 年前

மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு! இருமுறை முதல் பரிசு வென்ற வீரர் தமிழரசன் என்று அனைவரும் அறிந்தும் திட்டமிட்டு டோக்கன் அளிக்காமல் நேரத்தை வீணடித்துள்ள நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். அமைச்சர் பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் தனது சாதி சேர்ந்த வீரருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதும், போராடி டோக்கன் வாங்கியும் தன்னை ஜல்லிக்கட்டில் அனுமதிக்கவில்லை ,களமிறங்க முயற்சித்தும் காவல்துறை ஒருபக்கம் தாக்கினார்கள் இதற்கு முழு காரணம் சாதிதான் என்று குற்றம்சாட்டியுள்ளார். தமிழரசன் கண்ணீர் பேட்டி சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன, வீரர் தமிழரசன் புறக்கணிக்கத்திருப்பது ஏன் ??? District Collector Madurai #Madurai #PalameduJallikattu2025
நீலம் பண்பாட்டு மையம்45,142 次观看 • 1 年前

எதிர்வரும் 20-ஆம் தேதி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டி நினைவேந்தல் பேரணி! எழுச்சிமிகு பேரணியில் குடும்பங்களோடு பங்கு பெறுவோம்! #JusticeForAmstrong #marchforjustice #Rallyforjustice #dalitlivesmatter #jaibhim pa.ranjith
நீலம் பண்பாட்டு மையம்38,574 次观看 • 1 年前

What kind of education&moral principles that this JAIN (Deemed-to-be University)_Officials is teaching? This institution is "Manu deemed to be Worsity of inhumane, not university. UGC INDIA shall take an action against such casteist institutions in nature-pa.ranjith #BanJainUniversity #ShameJainUniversity
நீலம் பண்பாட்டு மையம்43,789 次观看 • 3 年前

தொடரும் சாதிவெறி வன்மையான கண்டனங்கள்! புதுமண தம்பதிகள் தீபாவளி அன்று சொந்த பகுதியான #திருவாரூர் வீட்டிற்கு சென்ற மறுநாள் நடந்தேறிய சாதிய தீண்டாமை, #அம்பேத்கர் #JaiBhim ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் கார் ஓட்டக்கூடாதா? குறிப்பிட்ட சாதியினர் தான் காருல போகணுமா? Collector Tiruvarur pa.ranjith
நீலம் பண்பாட்டு மையம்23,784 次观看 • 1 年前

#சென்னையில் பள்ளி மாணவருக்கு நிகழ்ந்த சாதிய தீண்டாமையை #நீலம்பண்பாட்டுமையம் வன்மையாகக் கண்டிக்கிறது! #கோடம்பாக்கம், புலியூர் கிராமம் 134வது வார்டு,பதிப்பக செம்மல் கா.கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் தமிழ்வாணனை சாதிரீதியாக ஆசிரியர்களே (S.மீனாட்சி கணித ஆசிரியர், R.சீனிவாசன் விளையாட்டு ஆசிரியர்) இழிவுபடுத்திய சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது. தொடர்ந்து ஆறு மாதங்களாக வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் மைதானத்தில் அமர வைத்திருப்பதற்கான காரணத்தை மாணவரின் வாயிலாக அறியும்போது அதிர்ச்சி அளிக்கிறது. அதாவது, மாணவர் வெட்டியான் மகன் என்கிறது ஒரு காரணத்திற்காகவே ஆசிரியர்கள் வகுப்பறைகுள் அனுமதிக்காமல் வெளியில் அமர வைத்திருக்கிறார்கள். அதோடு அம் மாணவரை சக மாணவர்கள் முன்பு அவமானப்படுத்தும் விதமாகக் கொச்சையான வார்த்தைகளால் பேசியும் அரைநிர்வாண நிலையில் நிற்க வைத்தும், வகுப்பறைக்குள் அனுமதித்தாலும் தனி இருக்கையில் அமர வைத்து அவரின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார். அவர் பள்ளியின் கலைத்திருவிழாவில், பறையிசை அடித்தற்காக "நீ பறை அடிக்கத்தான் லாயக்கு. உன் அப்பா மயானத்துலதானே வேலை பாக்குறாரு. அங்கேயே வேலைக்குப்போ' என்றெல்லாம் சொல்லி சாதி ரீதியாக தொடர்ந்து துன்புறுத்தியும் வந்திருக்கிறார்கள் என்று மாணவரே உண்மை வாக்குமூலம் அளிக்கிறார். எனவே, இவ்விசயத்தில் பள்ளி கல்வித்துறை விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவருக்கும் அவருடைய குடும்பத்திருக்கும் தகுந்த பாதுகாப்பையும் வழங்க வேண்டும். CMOTamilNadu Dr. Anbil Mahesh
நீலம் பண்பாட்டு மையம்19,867 次观看 • 1 年前