Thirugnanam's banner
Thirugnanam's profile picture

Thirugnanam

@Rebellionaire18,791 subscribers

Editor, Punnagai24x7 Formerly Channel Head, Sun news #Tamil #TamilNadu #Periyar #Anna #Kalaignar #MKStalin #Udhay #DMKITWing #Congress #VCK #CPI #CPIM

Shorts

அண்ணோவ்..! கூட்டணியை அறிவிக்கிற நேரமா இது? எட்டி உதைக்கும் Gen Zee..! Social Media எங்கும் இதுவே trending..!

அண்ணோவ்..! கூட்டணியை அறிவிக்கிற நேரமா இது? எட்டி உதைக்கும் Gen Zee..! Social Media எங்கும் இதுவே trending..!

44,133 görüntüleme

Videos

Rebellionaire1's profile picture

BREAKING NEWS- STING OPERATION 👇👇👇👇👇 ஹுமாயூன் கபீருக்கு 1000 கோடி..! விஜய் க்கு எத்தனை கோடி? 👇👇👇👇👇 மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரித்து ஆளும் கட்சியை பலவீனப்படுத்துவதற்காக BJP யால் களம் இறக்கப்பட்ட ஹுமாயூன் கபீர் ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ மூலமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளார். சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிக்க BJP 1000 கோடி ரூபாய் கொடுத்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். 👇👇👇👇👇 அயோத்தியில் 1992-ல் இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் மாதிரிக் கட்டிடத்தை மேற்கு வங்காள மாநிலத்தில் நிறுவப்போவதாகக் கூறி பெரும் பரப்பரப்பைக் கிளப்பியவர் ஹுமாயூன் கபீர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே டிசம்பர் 6 தேதியில் பாபர் மசூதியின் மாதிரிக் கட்டிடத்துக்கு கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார். "பாபர் மசூதி இடிப்புக்கு முஸ்லிம்களின் உணர்வுபூர்வமான பதிலடி” என்று அவர் சவால்விட்டுப் பேசினார். சிறுபான்மை மக்கள் அவர் மீது பெரும் நம்பிக்கை வைத்தனர். ஹுமாயூன் கபீர் பெரும் பணம் திரட்டினார். முர்ஷிதாபாத், மால்டா, பீர்பும் போன்ற முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளில் “முஸ்லிம்களுக்கான தலைவன்” என்ற பிம்பத்தை உருவாக்கினார். மேற்கு வங்காளத்தில் பாரத்பூர் தொகுதியின் TMC (திரிணமூல் காங்கிரஸ்) எம்எல்ஏ வாக இருந்த அவரை சந்தேகத்தின் பேரில் TMC சஸ்பெண்ட் செய்தது. TMC-யை விட்டு வெளியேறினார் ஹுமாயூன் கபீர். டிசம்பர் 22, 2025 அன்று ஆம் ஜனதா உன்னயன் பார்ட்டி (AJUP) என்ற பெயரில் தனது சொந்த கட்சியைத் தொடங்கினார். ---------------------- இதே காலகட்டத்தில் 2025 டிசம்பர் மாதத்தில், தவெக (TVK) தலைவர் விஜய் மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமான "சமத்துவ கிறிஸ்துமஸ்" விழாவை நடத்தி சிறுபான்மையினர் காவலராக தன்னைக் காட்டிக்கொண்டதை நினைவில் கொள்ளுங்கள். ----------------------- 2026 சட்டமன்றத் தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடத் திட்டமிட்டார் ஹுமாயூன் கபீர். BJP யின் B டீம் என்று அழைக்கப்படும் ஓவைசியின் AIMIM உடன் கூட்டணி வைத்தார். “நான் வங்கத்தின் ஓவைசி” என்று தன்னைப் பெருமையாக அழைத்துக்கொள்கிறார் ஹுமாயூன் கபீர். ஓவைசியுடன் பொதுக் கூட்டங்கள், சந்திப்புகள் நடத்தினார். TMC-யை எதிர்த்து முஸ்லிம் வாக்குகளை பிளவுபடுத்தி 2026 தேர்தலில் “கிங் மேக்கர்” ஆகிவிடுவேன் என்று கூறினார். இப்போது ஸ்டிங் ஆபரேஷன் வீடியோவில் சிக்கிக் கொண்டார். அந்த வீடியோ என்ன சொல்கிறது? ஹிடன் கேமரா ஸ்டிங் வீடியோவில் ஹுமாயூன் கபீர் இப்படிச் சொல்கிறார் : 👇👇👇👇👇 “பாப்ரி மசூதி மாடல் திட்டம் முஸ்லிம்களை ஏமாற்றும் ஒரு பாலிடிகல் அரித்மெடிக் தான். அது ஒரு அரசியல் கணக்கு. இந்த திட்டத்துக்காக BJP எனக்கு ₹1000 கோடி நிதி உதவி செய்தது. அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் மேற்குவங்க திர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி PMO (பிரதமர் அலுவலகம்) இவர்களுடன் தொடர்புகொண்டுதான் இந்தப் பணம் எனக்கு கிடைத்தது. இதன் நோக்கம்: முஸ்லிம் வாக்குகளை TMC-யில் இருந்து பிளவுபடுத்தி, மேற்குவங்க மாநிலத்தில் BJP-யை ஆட்சிக்கு கொண்டு வருவது. இந்தப்பணத்தில்தான் சொகுசு கார்கள் 5-ஸ்டார் ஹோட்டலில் தங்குவது ஹெலிகாப்டர் பிரச்சாரம், ஊடக விளம்பரங்கள் அனைத்தும் சாத்தியமானது. ஓவைசியும் இந்த திட்டத்தில் என்னுடன் ஈடுபட்டுள்ளார். மேற்கு வங்க முஸ்லிம்கள் என்னை முழுமையாக நம்புகிறார்கள். அவர்களை ஏமாற்றும் வகையில் தான் இந்த அரசியல் விளையாட்டை நடத்துகிறோம்." என்று வீடியோவில் கூறியுள்ளார். 👆👆👆👆👆 😡😡😡😡😡 சிறுபான்மை மக்களை ஏமாற்றும் அதே பாலிடிகல் அரித்மெடிக் கணக்குடன் தமிழ்நாட்டில் களம் இறக்கப்பட்டிருப்பவர்தான் விஜய். கரூர் கொலைக்குற்ற வழக்கு விசாரணைக்காக CBI அலுவலகம் சென்றுவிட்டு, அந்த அலுவலக வளாகத்தின் காம்பவுண்ட் உள்ளிருந்தே கார் Top கண்ணாடியைத் திறந்து விஜய் கைகாட்டி வந்ததது என்பது உள்துறை அமைச்சகத்துடன் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது என்பதன் உற்சாக வெளிப்பாடுதான். 😡😡😡😡😡 ஹுமாயூன் கபீருக்கு 1000 கோடி..! விஜய் க்கு எத்தனை கோடி? 😡😡😡😡😡

Thirugnanam

23,789 görüntüleme • 2 ay önce

Rebellionaire1's profile picture

அமெரிக்காவுக்குத் தப்பி ஓடிய ஜக்கி..! -------- தோலுரிக்கும் நக்கீரன்..! ----------- ஜக்கி வாசுதேவ் தனது மனைவியை 1997 இல் கொலை செய்துவிட்டு 'அவள் ஜீவா சமாதி அடைந்துவிட்டாள்' என்று புளுகியதை அம்பலப்படுத்தியது முதல், இன்றுவரையிலான ஜக்கியின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திவரும் நக்கீரன் கோபால் அண்ணன், நேற்று வெளியிட்ட முக்கியமான வீடியோவை எல்லோரும் பாருங்கள், பரப்புங்கள்..! தமிழ்நாட்டின் பொது சமூகம் விழிப்புணர்வு பெற்று, ஒன்றுதிரண்டு தட்டிக்கேட்க முன்வராவிட்டால், ஜக்கிகள், நித்திகள், மகாவிஷ்ணுக்கள் முளைத்துக்கொண்டே இருப்பார்கள். அயோக்கியன் ஜக்கி அமெரிக்காவுக்குத் தப்பி ஓடிவிட்டான் என்ற தகவலையும் அந்த வீடியோவில் அண்ணன் சொல்லி இருக்கிறார். உலகின் எந்த மூலையில் அவன் ஒளிந்துகொண்டாலும் தூக்கிவந்து தண்டனை கொடுக்க வேண்டும். #Arrest_jaggi #Arrest_Jaggi_Vasudev #Ban_Isha Pl watch full video by clicking this link :

Thirugnanam

115,387 görüntüleme • 1 yıl önce

Rebellionaire1's profile picture

Google Data Centre போனதன் பின்னணி இதுதான்.. சென்னைக்கு வருகிறது புது Data Centre..! 👏👏👏👏👏 அமைச்சர் Dr. T R B Rajaa சிக்ஸர் பதில்கள்..! ------------ NDTV நெறியாளர் கேள்வி : மற்ற மாநிலங்களின் போட்டிகளை எப்படி பார்க்கிறீர்கள்? Google Data Centre போன்ற ப்ராஜெக்டுகள் பிற மாநிலங்களுக்குச் சென்றன. இதை உங்கள் தோல்வியாக எதிர்க்கட்சிகள் சித்தரிக்கிறார்கள். உங்கள் பதில் என்ன? 👇👇👇👇👇 தமிழ்நாடு எந்த வகையிலும் தோற்பது இல்லை. எந்த புராஜெக்ட் விஷயத்திலும் பின்தங்குவதும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்கள் எதுவும் எங்களுக்குப் போட்டி கிடையாது. பல நாடுகளுக்கு இணையான பொருளாதார இலக்குகளை உருவாக்கிக்கொண்டு உலக அளவில் நாங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறோம். தலைநகரில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு தரமான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே முதல்வரின் வழிகாட்டுதல். அந்த இலக்குடன் நாங்கள் திட்டமிட்டு உழைக்கிறோம். பன்னாட்டு நிறுவனங்களை தமிழ்நாடு முழுவதும் ஈர்க்கும் வகையிலான கொள்கை முடிவுகள் எடுத்து செயல்படுகிறோம். முதலீடுகள் சென்னையில் மட்டுமே குவியவேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. கோவைக்கு முதலீடுகளை கொண்டு சென்று இருக்கிறோம். டெல்டா பகுதி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என முதலீடுகளும் வளர்ச்சியும் பரவலாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இப்படி முதலீடுகளும் வளர்ச்சியும் பரவலாக்கப்பட முடிவதில்லை. சில மாநிலங்கள் தரைவரை குனிந்து அளவுக்கதிகமான சலுகைகள் கொடுத்து முதலீடுகளை ஈர்க்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் AI மூலமாக அல்ல - எமது உண்மையான உள் கட்டமைப்பைக்காட்டி முதலீடுகளை ஈர்க்கிறோம். தமிழ்நாடு கவனமாக நிர்வகிக்கப்படும் ஒரு அறிவார்ந்த மாநிலம். ஒரு தனியார் கம்பெனிக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் இலவசமாக தருகிறோம் என்று மண்டியிட்டு, எங்கள் பொருளாதாரத்தை இழக்க மாட்டோம். எங்கள் மக்களுக்கு என்ன தேவையோ அதைமட்டும் தேர்வுசெய்யும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம். Google Data Centre பற்றி கேட்டீர்கள். அங்கு அதிக நிலத்தை அடிமாட்டு விலைக்கு கொடுப்பதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது ஒரு கேள்வி. Data Centre அமைந்தால் அங்கே போதிய Data வர வாய்ப்பு உள்ளதா என்பது அடுத்த கேள்வி. அதைத்தாண்டி அந்த மாநிலங்கள் வளர்ந்தால் நல்லதுதான். அவர்கள் நன்றாக வளரட்டும். 👇👇👇👇👇 சென்னைக்கு விரைவில் ஒரு Data Centre வர இருக்கிறது. அந்த செய்தியை விரைவில் பார்ப்பீர்கள். 👏👏👏👏👏 அதிக வேலைவாய்ப்பு உள்ளிட்ட எங்கள் நிபந்தனைகளை ஏற்பவர்களைத்தான் நாங்கள் ஊக்குவிக்கிறோம். நெருக்கடி மிக்க பெங்களூரு போல் அல்லது மாசுநிறைந்த டெல்லி போல் எங்கள் நகரங்கள் மாறக்கூடாது. பரவலாக்கப்பட்ட வளர்ச்சி என்பதே தமிழ்நாட்டின் முத்திரை இலக்கு.

Thirugnanam

36,777 görüntüleme • 4 ay önce

ப்ரோ, எனக்கு மூளை இருக்கு ப்ரோ.. ----------------------- சங்கி மீடியாவை வெளுத்த பீகார் சிறுவன்..! ----------------------- 👋👋👋👋👋 சங்கி மீடியா : பாகிஸ்தான் வாழ்க என்று சொல் பார்க்கலாம். சிறுவன் : பாகிஸ்தான் வாழ்க! சங்கி மீடியா : அப்படிச் சொல்ல வெட்கமாக இல்லையா? சிறுவன் : நான் ஏன் வெட்கப்பட வேண்டும்? சங்கி மீடியா : பாகிஸ்தான் அழிக்கப்பட வேண்டிய நாடு அல்லவா? சிறுவன் : இல்லை. ஒரு நாட்டையே அழிக்க உன்னைப் போன்றவர்கள் நினைப்பதுதான் தவறு. சங்கி மீடியா : பாரதம் வாழ்க என்று சொல்வதை ஏற்கிறாயா? சிறுவன் : ஆம். பாரதம் வாழ்க என்று சொல்வதை நான் ஏற்கிறேன்? சங்கி மீடியா : பாகிஸ்தான் வாழ்க என்பதை ஏற்கிறாயா? சிறுவன் : ஆம். அதையும் ஏற்கிறேன்? அவரவர் நாட்டில் அவரவர் நிம்மதியாக வாழவேண்டும். சங்கி மீடியா : உனது முழுப் பெயர் என்ன? சிறுவன் : கெய்ப்.. முகமது கெய்ப்.. சங்கி மீடியா : எங்கிருந்து வருகிறாய்? சிறுவன் : பீகார் சங்கி மீடியா : இந்தியாவில் வாழ்ந்துகொண்டு, அழிக்கப்பட வேண்டிய பாகிஸ்தானை ஆதரிக்க உனக்கு வெட்கமாக இல்லையா? சிறுவன் : இப்படி ஒரு அழிவு புத்தியை வைத்துக்கொண்டு, இந்து முஸ்லீம் பிரிவினையை தூண்டுவதற்காக ஒரு செய்தியை ஜோடிக்க இங்கே வந்திருக்கிறாய் - உனக்கு வெட்கமாக இல்லையா? இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் இந்தியாவுக்கு ஆதரவாக பேசமாட்டார்கள் என்ற கெட்டஎண்ணம் உனக்கு எப்படி வந்தது? எல்லா இடங்களிலும் மனிதர்கள்தான் வாழ்கின்றனர். ஒரு நாட்டில் வாழும் எல்லா மனிதர்களையும் அழிக்க ஏன் நினைக்கிறாய்? பதில் சொல் (சுற்றி இருப்பவர்கள் சிறுவனுக்கு ஆதரவு குரல் கொடுக்கிறார்கள்) சங்கி மீடியா : பாகிஸ்தானை ஆதரிக்கிறாயே, நீ ஒரு இந்தியன் இல்லையா? சிறுவன் : நான் இந்தியன்தான்.. ஒரு நாட்டையே அழிப்பதை நான் ஆதரிக்க மாட்டேன். எல்லா நாட்டிலும் வாழ்வது மனிதர்கள். சங்கி மீடியா : கடைசியாக ஒரு கேள்வி. இவ்வளவு விபரமாக பேசுவதற்கு உனக்கு யார் சொல்லித்தந்தார்கள்? சிறுவன் : ப்ரோ, எனக்கு மூளை இருக்கு ப்ரோ.. அந்த அறிவை பயன்படுத்த எனக்குத் தெரியும் ப்ரோ.. (சுற்றியுள்ள அனைவரும் சிரிக்கிறார்கள்.. கரகோஷம்)
1:21

Sensitive content

This media may contain sensitive content.

Rebellionaire1's profile picture

ப்ரோ, எனக்கு மூளை இருக்கு ப்ரோ.. ----------------------- சங்கி மீடியாவை வெளுத்த பீகார் சிறுவன்..! ----------------------- 👋👋👋👋👋 சங்கி மீடியா : பாகிஸ்தான் வாழ்க என்று சொல் பார்க்கலாம். சிறுவன் : பாகிஸ்தான் வாழ்க! சங்கி மீடியா : அப்படிச் சொல்ல வெட்கமாக இல்லையா? சிறுவன் : நான் ஏன் வெட்கப்பட வேண்டும்? சங்கி மீடியா : பாகிஸ்தான் அழிக்கப்பட வேண்டிய நாடு அல்லவா? சிறுவன் : இல்லை. ஒரு நாட்டையே அழிக்க உன்னைப் போன்றவர்கள் நினைப்பதுதான் தவறு. சங்கி மீடியா : பாரதம் வாழ்க என்று சொல்வதை ஏற்கிறாயா? சிறுவன் : ஆம். பாரதம் வாழ்க என்று சொல்வதை நான் ஏற்கிறேன்? சங்கி மீடியா : பாகிஸ்தான் வாழ்க என்பதை ஏற்கிறாயா? சிறுவன் : ஆம். அதையும் ஏற்கிறேன்? அவரவர் நாட்டில் அவரவர் நிம்மதியாக வாழவேண்டும். சங்கி மீடியா : உனது முழுப் பெயர் என்ன? சிறுவன் : கெய்ப்.. முகமது கெய்ப்.. சங்கி மீடியா : எங்கிருந்து வருகிறாய்? சிறுவன் : பீகார் சங்கி மீடியா : இந்தியாவில் வாழ்ந்துகொண்டு, அழிக்கப்பட வேண்டிய பாகிஸ்தானை ஆதரிக்க உனக்கு வெட்கமாக இல்லையா? சிறுவன் : இப்படி ஒரு அழிவு புத்தியை வைத்துக்கொண்டு, இந்து முஸ்லீம் பிரிவினையை தூண்டுவதற்காக ஒரு செய்தியை ஜோடிக்க இங்கே வந்திருக்கிறாய் - உனக்கு வெட்கமாக இல்லையா? இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் இந்தியாவுக்கு ஆதரவாக பேசமாட்டார்கள் என்ற கெட்டஎண்ணம் உனக்கு எப்படி வந்தது? எல்லா இடங்களிலும் மனிதர்கள்தான் வாழ்கின்றனர். ஒரு நாட்டில் வாழும் எல்லா மனிதர்களையும் அழிக்க ஏன் நினைக்கிறாய்? பதில் சொல் (சுற்றி இருப்பவர்கள் சிறுவனுக்கு ஆதரவு குரல் கொடுக்கிறார்கள்) சங்கி மீடியா : பாகிஸ்தானை ஆதரிக்கிறாயே, நீ ஒரு இந்தியன் இல்லையா? சிறுவன் : நான் இந்தியன்தான்.. ஒரு நாட்டையே அழிப்பதை நான் ஆதரிக்க மாட்டேன். எல்லா நாட்டிலும் வாழ்வது மனிதர்கள். சங்கி மீடியா : கடைசியாக ஒரு கேள்வி. இவ்வளவு விபரமாக பேசுவதற்கு உனக்கு யார் சொல்லித்தந்தார்கள்? சிறுவன் : ப்ரோ, எனக்கு மூளை இருக்கு ப்ரோ.. அந்த அறிவை பயன்படுத்த எனக்குத் தெரியும் ப்ரோ.. (சுற்றியுள்ள அனைவரும் சிரிக்கிறார்கள்.. கரகோஷம்)

Thirugnanam

63,289 görüntüleme • 1 yıl önce

ஒரேநாளில் மாறிய மேற்குவங்கம்..! 😡😡😡😡😡 ஜன-கன-மன (நீயே அனைத்து மனங்களுக்கும் அதிபதி) என்று இந்திய நாட்டின் பன்மைத்துவத்தைப் போற்றிப் பாடிய தாகூரின் மண்ணில் பாஜக வெற்றிபெற வைக்கப்பட்ட ஒரேநாளில் மேற்குவங்கம் மாறிவிட்டது. 👇👇👇👇👇 வங்கத்தின் சிங்கப்பெண் மம்தா போன்று வெள்ளைச்சேலை போர்த்திய ஒரு மனிதரை ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்டு அடித்து இழுத்துச் செல்கின்றனர். 👇👇👇👇👇 மேற்குவங்க வீதிகளில் BJP க்கு ஓட்டுப்போடாத வீடுகளில் குண்டர்களின் கண்மூடித்தனமான தாக்குதல் நடக்கிறது. 😡😡😡😡😡 தமிழ்நாடு இவர்களிடம் இருந்து தப்பிக்குமா?
0:29

Sensitive content

This media may contain sensitive content.

Rebellionaire1's profile picture

பிஞ்ச செருப்பால் சீமானை அடித்த காளியம்மாள்..! ----- சிலர் (சீமான் உள்ளிட்டவர்கள்) புத்திகெட்டு அவதூறாகப் பேசும்போது எதிர்வினை ஆற்றுவதை நான் தவிர்த்து விடுவேன். ஏன் என்றால் எனக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். உழைத்து வாழ்வதையே, அதுவும் எளிமையாக வாழ்வதையே நான் விரும்புகிறேன். திரள்நிதியில் சொகுசு வாழ்க்கை எனக்குத் தேவை இல்லை ஒன்று நீ வளர வேண்டும், அல்லது உன்னை நம்பி இருப்பவர்களை வளர விட வேண்டும். அவன் வளர்ந்துவிடுவானோ இவன் வளர்ந்துவிடுவானோ என்று அச்சப்படுவது தலைமைப் பண்பு அல்ல. ----- எத்தனை அடி..! சீமானுக்கு விழுந்த செருப்படி..! Kaliammal criticises Seeman - NTK Ishana Talks - Punnagai24x7 For full video, please click this link :

Thirugnanam

36,217 görüntüleme • 1 yıl önce

Rebellionaire1's profile picture

முருகரைப் போல் ஓடி ஓடி உழைக்கும் ராகுல்..! -------- விநாயகர் போல் சதி வேலைகளில் பா.ஜ.க..! -------- பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் நம்பியிருந்த மிகப்பெரிய மாநிலம் உ.பி கடந்தமுறை 80 தொகுதிகளில், 64 தொகுதிகளை பா.ஜ.க அணிக்கு வாரிக் கொடுத்த வள்ளல் மாநிலம் உ.பி. ஆனால் இந்த முறை ராகுல் - அகிலேஷ் பக்கம் அப்படியே உல்டாவாகத் திரும்பி விட்டனர் உ.பி மக்கள். ராகுல் செல்லும் இடமெல்லாம் சுனாமிபோல் மக்கள் வெள்ளம்..! ------- இப்படி இந்திய மக்கள் ராகுல் பக்கம் திரும்பி விட்டதை பா.ஜ.க தெரிந்தே வைத்துள்ளது. பா.ஜ.க தற்போது நம்பி இருப்பது தேர்தல் ஆணையத்தையும் EVM மோசடிகளையும் மட்டுமே. உத்திர பிரதேசத்தின் பரூக்காபாத் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தொண்டன் ஒருவன் 8 முறை பாஜகவுக்கு வாக்களித்துவிட்டு அதை அவனே ரெக்கார்ட் செய்து வெளியிட்டிருக்கிறான். இதனை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது. பல வாக்குச் சாவடிகளில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு விழும்படி புரோகிராம் செட் செய்யப்பட்டிருப்பதாக புகார்கள் வந்தன. அந்தப் புகார்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. பல தொகுதிகளில் உண்மையான வாக்குப் பதிவை விட அதிக எண்ணிக்கை வாக்குகள் தேர்தல் ஆணையத்தால் பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு கேரளா போன்ற விழிப்புணர்வு மிக்க மாநிலங்களில் EVM மோசடி அவ்வளவு எளிதல்ல. ஆனால் படிப்பறிவு குறைந்த வட மாநிலங்களில் EVM மோசடிகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. --------- முருகரைப் போல் ஓடி ஓடி உழைக்கிறார்கள் ராகுல் காந்தியும் இந்தியா கூட்டணியும். விநாயகர் போல் சதி வேலை செய்து ஜெயிக்கத் திட்டமிட்டுள்ளது பா.ஜ.க..! தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்விச் செல்லவும் வாய்ப்புள்ளது.

Thirugnanam

39,129 görüntüleme • 2 yıl önce

Rebellionaire1's profile picture

32 லட்சம் ரூபாய்க்கு NEET கேள்வித்தாளை விற்றோம்..! ---------- பாட்னாவில் கைதான மாபியா கும்பல் பரபரப்பு வாக்கு மூலம்..! -------------- மூடி மறைக்கும் மோடி அரசு...! ------------------- NEET தேர்வுக்கு 24 மணி நேரம் முன்பாக கேள்வித்தாளை விற்பனை செய்த கல்வி மாபியா கும்பல்களில் ஒன்று பீகார் மாநிலம் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளது. ஒரு NEET கேள்வித்தாளை 32 லட்ச ரூபாய்க்கு விற்றதை இவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். பீகார் மாநில பொருளாதார குற்றப்பரிவு (EOU) நடத்திய அதிரடி நடவடிக்கைகளால் NEET கல்வி மாபியா கும்பல்களில் ஒன்று கையும் களவுமாக பிடிபட்டுள்ளது. அரசுப்பணியில் உள்ள ஒரு ஜூனியர் எஞ்சினியர், கோச்சிங் சென்டர் ஆட்கள் என 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 56 வயதான ஜூனியர் எஞ்சினியர் சிக்கந்தர் குமார் இது தொடர்பாக கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம். -------------- "எனது அரசாங்க அலுவலகத்துக்கு நித்திஷ், அமித் ஆனந்த் இருவரும் வந்தனர். இன்னும்சிலருடன் சேர்ந்து NEET கேள்வித்தாளை கைப்பற்றி, விற்பனை செய்வது பற்றி திட்டமிட்டோம். தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கொண்டுவருபவர்களுக்கு காசு கொடுத்து, ஒரு நாள் முன்னதாக வினாத்தாள் கிடைக்க ஏற்பாடு செய்தோம். 32 லட்சம் ரூபாய் காசு கொடுத்த மாணவர்களை பாட்னாவில் உள்ள ஒரு பள்ளிக்கு அழைத்துச் சென்றோம். அங்கே வினாத்தாளுடன் சரியான விடைத்தாளையும் அந்த மாணவர்களுக்கு கொடுத்து மனப்பாடம் செய்யவைத்தோம். இப்படி மனப்பாடம் செய்துகொண்ட அனைத்து மாணவர்களும் அடுத்த நாள் நடந்த NEET தேர்வில் எளிதாக மார்க் வாங்கிவிட்டனர்." ---------- சிக்கந்தர் குமார் கொடுத்த வாக்கு மூலம் தற்போது மீடியாக்களின் கைகளுக்கு வந்துவிட்டது. ஆனாலும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் NEET தேர்வில் எந்தவித தவறும் நடக்கவே இல்லை என்று பச்சையாகப் பொய்பேசி வருகிறார். NEET ஊழலுக்குப் பொறுப்பேற்க வேண்டிய பிரதமர் மோடி, இந்தியா உறுப்பினராகவே இல்லாத G 7 நாடுகளின் கூட்டத்தில் அழையா விருந்தாளியாகப்போய் கலந்துகொண்டு ஊர்சுற்றித் திரிகிறார். K.Annamalai Vanathi Srinivasan KhushbuSundar போன்ற தமிழ்நாட்டு பா.ஜ.க வினர் வாயில் பிளாஸ்திரி போட்டுக்கொண்டு வாயே திறக்காமல் மக்களை ஏமாற்றித் திரிகின்றனர். NEET அநீதி தேர்வுக்கு எதிராக பல ஆண்டுகளாக தி.மு.க வினரும் அதன் கூட்டணிக் கட்சியினரும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இப்போது இந்த கோரிக்கை ஒட்டு மொத்த இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. சிரமப்பட்டு படித்து NEET தேர்வு எழுதிய 24 லட்சம் மாணவச் செல்வங்களின் எதிர்காலம் சிதைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி என்ற உன்னதமான கல்வி, மாபியாக்களின் கைகளிலும் மாபியாக்களுடன் ஒத்துழைக்கும் ஒன்றிய அரசின் கைகளிலும் சிக்கிக் கொண்டிருப்பது வேதனையான உண்மை...! Video courtesy : ABP #NEET_परीक्षा_परिणाम #SupremeCourt #NeetScams #NEET_पेपर_रद्द_करो #NEETPAPER_LEAK #neetresultboycott #NEET_UG #reneetpaper #Re_NEET #Neet_Scam_2024 #NEET_परीक्षा_परिणाम #NEET #NeetUG24Controversy #NEETResult #NEETExam #Neet2024 #NeetInjustice #NEETASPIRANTS

Thirugnanam

37,178 görüntüleme • 2 yıl önce

Rebellionaire1's profile picture

கொளுத்திப்போட்ட அரவிந்த் கெஜ்ரிவால்..! பதைபதைப்பில் பா.ஜ.க..! ----------- திகார் ஜெயிலில் ED க்கு எதிராக ஜாமீன் பெற்றுவந்த அரவிந்த் கெஜ்ரிவால் 2 குண்டுகளை கொளுத்திப்போட்டார் 1. பா.ஜ.க வெற்றிபெற்றால் மோடிக்குப் பதிலாக அமித் ஷா பிரதமர் ஆக்கப்படுவார். 2. தேர்தலுக்குப் பிறகு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி நீக்கம் செய்யப்படுவார். பா.ஜ.க வில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் முக்கிய அரசு பதவி வகிக்கக் கூடாது என்ற நடைமுறையை சுட்டிக்காட்டி மோடிக்குப் பதிலாக அமித் ஷா வருவார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். பா.ஜ.க வின் மூத்த தலைவர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜேபி நட்டா ஆகியோர் இதற்கு பதில் அளித்தனர். பா.ஜ.க வில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் முக்கிய அரசு பதவி வகிக்கக் கூடாது என்ற விதி கிடையாது என்று அவர்கள் கோரஸாக சொன்னார்கள். ஆனால், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பழைய பெரும் தலைகள் 75 வயது விதியைக் காட்டித்தான் ஓரம் கட்டப்பட்டனர் என்ற வரலாற்றை இவர்கள் மறைத்துப் பேசினார்கள். அதே வேளையில், இவர்கள் யாருமே யோகி ஆதித்யநாத் தூக்கி வீசப்படுவார் என்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்தை மறுத்துப் பேசவில்லை. அதன் மூலமாக மோடியா? யோகியா? என்ற பெரும் உள்கட்சி சண்டையை பா.ஜ.க.வுக்குள் தூண்டி விட்டுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். உ.பி.யில் பா.ஜ.க வெற்றிபெறும் தொகுதிகளை குறைப்பதற்கு மறைமுகமாகக் களம் இறங்கியுள்ளது யோகியின் கூடாரம்.

Thirugnanam

35,175 görüntüleme • 2 yıl önce

Daha fazla içerik yok.