
செந்தமிழன் சீமான்
@Seeman4TN • 102,834 subscribers
செந்தமிழன் #சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி | Senthamizhan Seeman | Chief Coordinator of @NaamTamilarOrg
Videos

‘இயக்குநர் இமயம்’ எங்கள் அப்பா பாசத்திற்குரிய பாரதிராஜா அவர்களுக்கு வீரவணக்கம்!
செந்தமிழன் சீமான்74,450 views • 4 days ago

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! மே 18, இனப்படுகொலை நாள்! தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் நாள் 18-05-2026 திங்கள்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை. மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! நாம் தமிழர்!
செந்தமிழன் சீமான்301,140 views • 1 month ago

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! தமிழீழ தாயக விடுதலைப் போராட்டத்தில் தொடக்க நாள் முதல் தன் வாழ்நாளின் இறுதி நொடிவரை அந்த விடுதலைக் களத்தை விட்டு சற்றும் விலகாத தமிழ்த்தேசிய விடுதலைப் போராளி! தன்னுடைய எழுச்சி மிகுந்த குரலால் இன உணர்வும், மான உணர்வும் ஊட்டி தமிழினப் பிள்ளைகளை எழுப்பிய பாசறைப்பாணர்! நம்முடைய அப்பா தேனிசை செல்லப்பா அவர்களினுடைய நினைவைப் போற்றுகிற நிகழ்வு! வைகாசி 23 | 06-06-2026 சனிக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு இடம்: சர் பி.டி.தியாகராயர் அரங்கம், தியாகராயர் நகர் சென்னை. மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்! மதிப்புமிக்க நம்முடைய பாசறைப்பாணருக்கு நம் புகழ் வணக்கத்தைச் சூடுவோம்! நன்றி! வணக்கம்!
செந்தமிழன் சீமான்86,034 views • 13 days ago

#TN2026 திரைப்படக் குழுவினருக்கு அன்பும் வாழ்த்துகளும்!
செந்தமிழன் சீமான்151,907 views • 2 months ago

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல என் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த ஒரு மகத்தான பேரியக்கம் மக்களை மட்டுமே நம்பி களத்திலே தனித்து நிற்கிறது. இங்கே பல ஆண்டுகள் அதிகாரத்தைச் செலுத்தி நிறைய பணத்தைச் சேமித்து பதுக்கி ஒதுக்கி வைத்திருக்கிற மற்ற அரசியல் கட்சிகள் மறுபடி அந்தப் பணத்தை முதலீடு செய்து அதிகாரத்தைத் தக்கவைக்க போராடும். ஒவ்வொரு தொகுதிக்கும் 30 கோடிகள் 40 கோடிகள் என்று முதலீடு செய்து அந்தத் தொகுதிகளை விலைக்கு வாங்க பார்க்கும். இந்தச் சூழலில் இந்தக் கேடுகெட்ட பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிக்க ஜனநாயகத்தை மலரச் செய்ய வேண்டும் என்ற மகத்தான கனவோடு களத்திலே நிற்கிறோம் உங்கள் பிள்ளைகள். வாக்குக்குக் காசு கொடுக்கிற இந்த காலத்தில் ஒரு தொகுதியை வெல்ல 30 கோடிகள் முதலீடு செய்கிற ஒரு முதலாளி தன் லாப தேவைக்கு முதலீடு செய்வாரா? அல்லது மக்கள் சேவைக்கு முதலீடு செய்வாரா என்கிற கேள்வி அங்கே எழுகிறது. வாக்குக்குக் காசு கொடுக்கிற அந்த இடத்தில் தான் ஊழல் லஞ்சத்திற்கான விதை ஊன்றப்படுகிறது என்பது உங்கள் பிள்ளைகள் எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை; உண்மையும் கூட. அந்த இடத்திலே சேவை செத்து போகிறது. இப்போது இதை மாற்ற வேண்டும் என்று ஒரு பெருங்கனவோடு உங்கள் பிள்ளைகள் தொடர்ந்து களத்திலே நின்று போராடி வருகிறோம். 30 கோடிகள் முதலீடு செய்கிற வேட்பாளர்களுக்கு இடையில் போட்டியிடுகிற நாங்கள் அந்த வட்டி காசைக் கூட செலவு பண்ண முடியாத நிலையில் நின்று கொண்டிருக்கிறோம். ஆனால் மக்களுக்கு சேவை செய்ய பணம் தேவையில்லை தன்னலமற்று உண்மையும் நேர்மையுமாகப் பணியாற்ற வேண்டும் என்கிற மனம் இருந்தாலே போதும் என்பதை நிரூபிக்கத்தான் தொடர்ந்து உங்கள் பிள்ளைகள் இந்த களத்திலே நின்று வருகிறோம். இம்முறையும் அதே கனவோடு நிற்கிறோம். எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே! பசி-பஞ்சம், ஊழல்-இலஞ்சம், கொலை-கொள்ளை, சாதிய இழிவு, தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, அடக்குமுறை, ஒடுக்குமுறை வளக்கொல்லை, மது-மதப் போதை இவை ஏதுமற்ற ஒரு புதியதொரு தேசம் செய்வோம்! மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்! என்ற முழக்கத்தோடு களத்திலே நிற்கிறோம். எப்போதும் போல எமது மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தங்களால் இயன்ற நிதியைக் கொடுத்து எங்களை வலிமைப்படுத்தி இருக்கிறீர்கள். இம்முறையும் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த பிள்ளைகளுக்கு எங்கள் பெற்றோர், எங்கள் உடன் பிறந்தோர் இனமாகவும் பணமாகவும் வலிமையாகவும் வளமையாகவும் நீங்களே நின்றிருக்கிறீர்கள் இம்முறையும் நிற்பீர்கள் என்று உங்கள் பிள்ளைகள் அன்போடு கேட்கிறோம். திரள்நிதி திரட்சியின் வாயிலாக உங்களால் இயன்ற உதவியைச் செய்து உங்கள் பிள்ளைகளின் கைகளை வலிமைப்படுத்திவிடுங்கள். களத்திலே நின்று நம் இன முன்னோர்கள் கண்ட கனவை வென்று முடிப்போம் என்கிற உறுதியைத் தருகிறோம். தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க! புரட்சி எப்போதும் வெல்லும்! நம் வெற்றி அதைச் சொல்லும்! நம் இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்! நாம் தமிழர்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான்73,895 views • 2 months ago

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! அடிமைப்பட்டு தாழ்ந்து கிடக்கின்ற அன்னை தமிழினத்தினுடைய உரிமை மீட்சிக்கு, எதிர்கால இனத்தின் பாதுகாப்பான நல்வாழ்விற்கு இருக்கிற இறுதி வாய்ப்பு, அரசியல் விடுதலை மட்டும்தான். அடிமைப்படுத்தப்பட்ட தமிழ்ப் பேரின மக்கள் தமிழர்களாக ஒன்றிணைந்து ஒரு அரசியல் வலிமையைப் பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஒன்றுதான் நம் இனத்திற்கு இருக்கிற இறுதி வாய்ப்பு. இந்தச் சூழலில் உங்கள் பிள்ளைகள் எளிய மக்கள் நாங்கள் தொடர்ச்சியாகத் தேர்தல் களத்திலே போட்டியிட்டு தமிழின மக்களுக்காக ஒரு வலிமைமிக்க அரசியலைப் கட்டி எழுப்பி வருகிறோம். தற்போது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. போட்டியிடுகிற கட்சிகள் பொருளாதார வலிமையும், கட்டமைப்பு வலிமையும், ஊடக வலிமையும் கொண்டவர்கள் அவர்களை எதிர்த்து கடுமையாகப் போர்புரிவதற்கு இருக்கிற ஒரே வாய்ப்பு உங்கள் பிள்ளைகளின் கடுமையான உழைப்பு மட்டும்தான். இத்தேர்தல் பரப்புரைக்குப் போதிய அளவிற்கு நிதி வளமை இல்லாததால் பரப்புரை மேற்கொள்ள நாங்கள் பெரிதும் சிரமப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்ற சூழல்களில் முன்பு எப்போதும் எனது அன்புச் சொந்தங்கள் திரள் நிதி திரட்டலில் உங்களால் இயன்ற உதவியைச் செய்து இந்த பொருளாதாரச் சிக்கலைத் தீர்த்து வைத்திருக்கிறீர்கள். மாற்றத்திற்கான அரசியலை முன்வைத்து மண்ணையும் மக்களையும் மட்டுமே முழுமையாக நம்பி உண்மையும் நேர்மையுமாக உறுதியுடன் தனித்து களமிறங்கும் நாம் தமிழர் கட்சிக்கு இம்முறையும் உங்களால் இயன்றதைக் கொடுத்து உதவி, உங்கள் பிள்ளைகளை வலிமைமிக்க ஆற்றலாக மாற்றுங்கள். துளித்துளியாய் இணைவோம் பெரும் கடலாகும் கனவோடு! இந்த வருமானம்; காக்கும் நம் இனமானம்! உங்கள் அனைவருக்கும் என் அன்பு நிறைந்த தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் நல் வாழ்த்துகள்! புரட்சி எப்போதும் வெல்லும்! நமது வெற்றி அதைச்சொல்லும்! இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்! நாம் தமிழர்! திரள்நிதி திரட்டல்: - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான்346,912 views • 1 year ago

இலண்டன் மாநகரில் உள்ள அப்பல்லோ அரங்கில் வருகின்ற 08.03.2025 அன்று புதிய சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்யவுள்ள இசை இறைவன் ஐயா இளையராஜா அவர்களை இன்று (05-03-2025) சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தேன். தமிழர்தம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் தன் இசையால் நீக்கமற நிறைந்திருக்கும் இசை இறைவன் ஐயா இளையராஜா அவர்கள், மேற்கத்திய இசை வடிவமான சிம்பொனியை வெறும் 34 நாட்களில் உருவாக்கி அரங்கேற்றுவதன் மூலம் தமிழர்களின் பெருமையை உலகெங்கும் பரவிடச் செய்யவிருப்பது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமிதம் அளிக்கும் இனிய திருநாளாகும். இவ்வரலாற்றுப் பெருநிகழ்வு சிறப்புற நடந்தேற என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டேன்! உலக அரங்கில் தமிழ்ப்பேரினத்திற்குப் பெருமை சேர்க்கவிருக்கும் இசை இறைவனின் இசைத் திருவிழாவில் உலகத்தமிழர்கள் அனைவரும் பங்கேற்று இசையருள் பெறுக என வாழ்த்துகிறேன். Ilaiyaraaja
செந்தமிழன் சீமான்229,988 views • 1 year ago

நாடாளுமன்றத் தேர்தல் - 2024 மாற்றம் என்பது சொல் அல்ல செயல்! அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றத்திற்காக மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த உங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வளமாகவும், வலிமையாகவும் துணை நில்லுங்கள்..! நாங்கள் கையேந்துவது நாளைய தலைமுறை பிள்ளைகளின் நல்வாழ்விற்கு! இந்த வருமானம் காக்கும் இனமானம்.! வங்கி கணக்கு விவரம்: கணக்கின் பெயர்: நாம் தமிழர் கட்சி (Naam Tamilar Katchi) வங்கியின் பெயர்: ஆக்சிஸ் வங்கி கணக்கு எண்: 916020049623804 IFSC: UTIB0002909 MICR Code: 600211076 SWIFT Code: CHASUS33 கிளை: எண் 442, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல், சென்னை-600095 #நமதுசின்னம்_ஒலிவாங்கி #Mike_VoiceOfPeople
செந்தமிழன் சீமான்335,624 views • 2 years ago

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! தண்ணீர் மாநாடு - 2025 ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி! பல்லுயிர்க்கும் பகிர்ந்தளி! நீரின்றி அமையாது உலகு! நினைவில் நிறுத்திப் பழகு! என்ற முழக்கத்தை முன்வைத்து இந்த மாநாடு நடக்கவிருக்கிறது. தண்ணீரின் தேவை என்ன? இன்றைக்கு தண்ணீர் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது? ஒரு மிக உயர்ந்த விற்பனை பண்டமாக, நிறைய பொருளீட்டுகின்ற, இலாபம் குவிக்கின்ற ஒரு சந்தை பண்டமாக மாற்றி இருப்பது எவ்வளவு பெரிய பேராபத்தான போக்கு என்பதையெல்லாம் எடுத்து விளக்குகிற மிக மிக அவசியமான ஒரு மாநாடு இந்த தண்ணீர் மாநாடு - 2025. நாள்: 15-11-2025 சனிக்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு இடம்: வீரப்பெரும்பாட்டன் கரிகால் பெருவளத்தான் திடல் பூதலூர் திருவையாறு தஞ்சை மாவட்டம் என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்! தண்ணீர் மாநாடு சிறக்க வேண்டும்! நன்றி! வணக்கம்!
செந்தமிழன் சீமான்101,822 views • 7 months ago

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! 'நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!' மாபெரும் பொதுக்கூட்டம் நாள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு இடம்: நகர அரங்கம், இராஜவீதி தேர்நிலை திடல், கோயம்புத்தூர் மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்! நாம் தமிழர்! திரள்நிதிப் பங்களிக்க:
செந்தமிழன் சீமான்124,090 views • 9 months ago

எம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான நெருப்பெரிந்து, தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பொங்கட்டும் புரட்சிப்பொங்கல்! தமிழ்மொழி மீட்க, தமிழர் நலன் காக்க, தமிழ்நாட்டின் வளங்கள் காத்திட, தமிழ் முன்னோர்களின் ஈகம் போற்றிட, தமிழர்தம் கலை, இலக்கியப் பண்பாடு, வரலாறு காத்திட தை மகளே வருக! தமிழர் நலம் பெறுக! உலகெங்கும் பரவி வாழும் எம்முயிர்ச்சொந்தங்கள் அனைவருக்கும், நெஞ்சம் நிறைந்த தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்! அன்பின் வாழ்த்துகளுடன்... உங்கள் சீமான்
செந்தமிழன் சீமான்65,907 views • 5 months ago

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை நடத்துகிற 'சொந்த நிலத்தில் அகதியாகும் தமிழர்கள்!' மாபெரும் பொதுக்கூட்டம். நாள்: 23-08-2025 சனிக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு இடம்: மாநகரப் பேருந்து நிலையம் அருகில், காஞ்சிபுரம். மண்ணைக் காக்க மானத்தமிழ்ப்பிள்ளைகள் அனைவரும் மறக்காமல் கூடுவோம்! நாம் தமிழர்!
செந்தமிழன் சீமான்114,228 views • 9 months ago

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! ஆகஸ்ட் 2 ஆம் நாள் (02.08.2025) தேனி மாவட்டம், பங்களாமேட்டில், 'பட்டியல் வெளியேற்றமே பைந்தமிழர் விடுதலை!' என்கின்ற முழக்கத்தை முன்வைத்து, 'தேவேந்திர குல வேளாளர் எங்களை, பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்ற வேண்டும்!' என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதற்கு அடுத்த நாள், 03.08.2025 அன்று அதே தேனியில் நம்முடைய வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற நிகழ்வும் நடைபெறவிருக்கிறது., அதனைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்துகின்ற மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்! மதுரையில் நடந்த ஆடு-மாடுகளின் மாநாட்டில் நாம் அறிவித்ததுபடியே, தடையைத் தகர்த்து மாடுகளை நாமே மலைமேல் ஏற்றி, மேய்க்கிற போராட்டம் (03.08.2025) ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு நடக்கவிருக்கின்றது! இடம்: அடவுப்பாறை, முந்தல், தேனி மாவட்டம்! மானத்தமிழ் மக்கள் அனைவரும் மறக்காமல் பங்கேற்க வேண்டுமென்று அன்போடு அழைக்கின்றேன்! நன்றி வணக்கம்! நாம் தமிழர்!
செந்தமிழன் சீமான்105,586 views • 10 months ago

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! மாவீரர் நாள்! விதையாய் விழுந்த தமிழ் மறவரின் வாழ்க்கையே நமது வரலாறு. அந்த மாவீரத் தெய்வங்களைப் போற்றுகிற ஒரு புனித நாள்! 27.11.2025 வியாழக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு ஆவுடைப்பொய்கை காரைக்குடி. மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்! மாவீரர்களின் ஈகத்தைப் போற்றுவோம்! எனது அன்புச் சொந்தங்களே, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பெருநிகழ்விலும் எங்களுக்கு ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடியில் இருந்து நீங்கள் தான் உதவி செய்து எங்களை கரையேற்றி இருக்கிறீர்கள். இம்முறையும் திரள்நிதித் திரட்சியின் வாயிலாக உங்களால் இயன்ற நிதிப் பங்களிப்பைச் செய்து உங்கள் பிள்ளைகள் எங்களை வலிமைப்படுத்த வேண்டும் என்ற அன்போடு வேண்டுகிறேன். நன்றி! வணக்கம்! நாம் தமிழர்!
செந்தமிழன் சீமான்68,780 views • 6 months ago

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூகநீதியும்! பஞ்சமர் நில மீட்பும்! எனும் மாபெரும் பேரணி - பொதுக்கூட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னின்று நடத்துகிறது. தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தமிழ்த்தேசிய அரசியலின் பேராசன் நம்முடைய ஐயா பெ.மணியரசன் அவர்களின் தலைமையில், தமிழ்நாட்டின் பல்வேறு தளங்களில், களங்களில் மக்களின் பிரச்சினைகளுக்காக இயங்கி வருகிற, போராடி வருகிற மிக முதன்மையான அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் எல்லோரும் பங்கேற்று இந்தப் பேரணி - பொதுக்கூட்டத்தைச் சிறப்பிக்கவிருக்கிறார்கள். மானத்தமிழ் மக்கள் நாம் எல்லோரும் மறக்காமல் கூட வேண்டும். பஞ்சமர் நில மீட்பே! பைந்தமிழர் உரிமை மீட்பு! ஆதித்தமிழர் விடுதலை இல்லாது; மீதித்தமிழர் விடுதலை வெல்லாது! என்ற முழக்கங்களை முன்வைத்து இந்தப் போராட்டத்தை நாம் முன்னெடுக்கிறோம். வருகிற 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு இடம்: புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில், திருப்போரூர், செங்கல்பட்டு மாவட்டம் எல்லோரும் கூடுவோம்! இனத்தின் உரிமையை மீட்போம்! எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க சாதிவாரிக் கணக்கெடுப்பே சரியான சமூகநீதி! வீறுகொண்டு எழுவோம்! வெற்றி கண்டு மகிழ்வோம்! நாம் தமிழர்! 👉🏼நிதிப் பங்களிக்க:
செந்தமிழன் சீமான்120,723 views • 1 year ago

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! #பட்டியல்வெளியேற்றமே_பைந்தமிழர்விடுதலை என்கிற முழக்கத்தை முன்வைத்து, தேவேந்திர குல வேளாளர் எங்களைப் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக்கோரி, மாபெரும் பொதுக்கூட்டம்! இன்று ஆடி 17 | 02.08.2025 சரியாக 4 மணிக்கு இடம்: பங்களாமேடு, தேனி மாவட்டம். மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! கோரிக்கைகள் நிறைவேறும்வரை, கோடி கைகள் கூடிப் போராடி வெல்வோம்! நாம் தமிழர்! #RemoveDVKfromSClist
செந்தமிழன் சீமான்88,011 views • 10 months ago

உயிருக்கினிய உறவுகள் அனைவருக்கும் அன்பும், வணக்கமும்! வருகிற வைகாசி 4 ஆம் தேதி மே 18 இனப்படுகொலை நாள்! இம்முறை கோவையில் மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் கொடிசியா திடலில் ஞாயிற்றுக்கிழமை சரியாக மாலை 04 மணிக்கு நடைபெறவிருக்கிறது. எப்போதும்போல எம்மினச்சொந்தங்கள் உங்களுடைய நிதி உதவியில்தான் நாம் தமிழர் கட்சி இவ்வளவு தூரம் இளைப்பின்றி இயங்கி வந்திருக்கிறது! வலிமையாகவும், வளமையாகவும் எங்களோடு எம் மக்களே துணை நின்றிருக்கிறார்கள்! இம்முறையும் திரள்நிதி திரட்சியின் மூலமாக உங்களால் இயன்ற நிதி பங்களிப்பைத் தந்து எங்களை வலிமைப்படுத்த வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன். நீங்கள் கொடுக்கும் இந்த வருமானம் காக்கும் இனமானம்! துளித்துளியாய் இணைவோம் பெரும் கடலாகும் கனவோடு! நாம் தமிழர்! #Donate4Solidarity_May18
செந்தமிழன் சீமான்100,540 views • 1 year ago