SundarRajaCholan☀𑌸𑍁𑌨𑍍𑌦𑌰𑍍 𑌰𑌾𑌜 𑌚𑍋𑌳𑌼𑌨☀'s banner
SundarRajaCholan☀𑌸𑍁𑌨𑍍𑌦𑌰𑍍 𑌰𑌾𑌜 𑌚𑍋𑌳𑌼𑌨☀'s profile picture

SundarRajaCholan☀𑌸𑍁𑌨𑍍𑌦𑌰𑍍 𑌰𑌾𑌜 𑌚𑍋𑌳𑌼𑌨☀

@sundarrajachola22,620 subscribers

வல்லமை தாராயோ-மாநிலம் பயனுற வாழ்வதற்கே. . #Bharathiyan #nationalist🇮🇳 #ThamizhHindu🌟 Chozha Nadu (TamizHagam)

Shorts

சபரீசன்: இந்த கோமாளிஹாசன் வேற..😂

சபரீசன்: இந்த கோமாளிஹாசன் வேற..😂

30,721 görüntüleme

இந்துக்களின் ஆன்மீக புற அடையாளங்களை குறி வைத்து நக்கல் செய்வது ஒரு உளவியல் தாக்குதல்..அப்படியொரு தாக்குதலை மிகச்சரியாக யோகி பாபு கையாண்டுள்ளார்..

இந்துக்களின் ஆன்மீக புற அடையாளங்களை குறி வைத்து நக்கல் செய்வது ஒரு உளவியல் தாக்குதல்..அப்படியொரு தாக்குதலை மிகச்சரியாக யோகி பாபு கையாண்டுள்ளார்..

117,005 görüntüleme

பல கோடி மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த நாட்டின் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் இப்படி பேச முடிகிறது..நிச்சயமாக இது எதார்த்த நிலை இல்லை..

பல கோடி மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த நாட்டின் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் இப்படி பேச முடிகிறது..நிச்சயமாக இது எதார்த்த நிலை இல்லை..

14,635 görüntüleme

தமிழே முட்டா பய பாஷை, காட்டுமிராண்டி பாஷை என்னடா இருக்கு உன் தமிழில் என தெளிவாக ஈவேரா பேசியுள்ளார்.. சிலப்பதிகாரம், தொல்காப்பியம், திருக்குறள் பற்றி எல்லாம் பேசியது பக்கம் பக்கமாக உள்ளது.. எதாச்சும் மடத்தனமா திரிக்காம இருந்தா இதை விட்ருவாங்க..இல்லேன்னா இணையம் முழுக்க அடுத்த ஒரு வாரம் இதான்..😀

தமிழே முட்டா பய பாஷை, காட்டுமிராண்டி பாஷை என்னடா இருக்கு உன் தமிழில் என தெளிவாக ஈவேரா பேசியுள்ளார்.. சிலப்பதிகாரம், தொல்காப்பியம், திருக்குறள் பற்றி எல்லாம் பேசியது பக்கம் பக்கமாக உள்ளது.. எதாச்சும் மடத்தனமா திரிக்காம இருந்தா இதை விட்ருவாங்க..இல்லேன்னா இணையம் முழுக்க அடுத்த ஒரு வாரம் இதான்..😀

15,088 görüntüleme

Videos

sundarrajachola's profile picture

"திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்" - நக்கீரர் ராசி மண்டலத்தில் ஆட்டை(மேஷத்தை) முதலாக கொண்டு உலகம் இயங்குகிறது என்று சங்கப்பாடல் தெளிவாக சொல்கிறது.. வியாழக்கிழமை வாரத்தின் முதல்நாள் என்று சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் மகர மாதமான தையினை முதல் மாதம் என்று சொல்வதும்.. சூரியன் மேஷத்திற்குள் நுழையும் நாளே தமிழர்களின் சூரியநாட்காட்டியின் புத்தாண்டு.. தமிழ் பண்பாட்டின் மீது கைவைத்து, அதை அதிகார ஆணவத்தால் மாற்றியமைக்க முடியும் என்று நினைத்த திமுக ஆட்சியை மக்கள் எப்படி தூக்கி எறிந்தார்கள் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.. சென்னை சங்கமம் விழாவை பெரிதுபடுத்த திமுக செய்த சதிதான் இந்த புத்தாண்டு திருகல் வேலை..அது மரபு மீறிய தமிழர் விரோதம் என்று சொல்லி சட்டமன்றத்திலேயே பதிவு செய்து பண்பாட்டை காத்தவர் அன்றைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள்..விஜய் தற்போது நானே சிறந்த திமுக என்று பேசுவது நகைப்புக்குரியது..

SundarRajaCholan☀𑌸𑍁𑌨𑍍𑌦𑌰𑍍 𑌰𑌾𑌜 𑌚𑍋𑌳𑌼𑌨☀

32,824 görüntüleme • 5 ay önce

sundarrajachola's profile picture

தென்னிந்தியா முழுக்க சாட்டையினால் அடித்துக் கொள்வது ஒரு ஆழமான பழங்குடி வழிபாட்டு சடங்கு.. மக்களின் நன்மைக்காக செய்வது..தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் புனித ஆத்மாவால் நன்மை நடக்கும் என்பதே அதன் பொருள்.. அப்படி ஒரு நிகழ்வில் ராகுல்காந்தி கூட பாரத்ஜோடா யாத்திரையில் கலந்து கொண்டு சாட்டையால் அடித்துக் கொண்டார்.. ஆனால், திரு.அண்ணாமலை அவர்கள் உண்மையிலேயே அடையாளப் போராட்டம் என்பதைத் தாண்டி, இதை ஒரு சபதமாக கொண்டு தமிழக மக்களின் மீட்புக்கென தன்னை வருத்திக் கொள்கிறார்.. எளிய மக்களின் நம்பிக்கையின் மொழியில் அண்ணாமலை பேசுகிறார்..இந்த உண்மை புரிகிற போதுதான் நீங்கள் தரையிலிறங்கி நின்று பேசுகிறீர்கள் என்று பொருள்..

SundarRajaCholan☀𑌸𑍁𑌨𑍍𑌦𑌰𑍍 𑌰𑌾𑌜 𑌚𑍋𑌳𑌼𑌨☀

60,217 görüntüleme • 1 yıl önce

sundarrajachola's profile picture

அண்ணாமலையின் அரசியல் எழுச்சி தமிழகத்தில் மிகப்பெரிய கள மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தனது கடந்த 60 ஆண்டுகால அனுபவத்தில் அண்ணாமலை அவர்களின் தமிழக அரசியல் பங்களிப்பின் பலம் என்னவென்று தெரிவதாகவும், கட்சி அவருக்கென்று மிகப்பெரிய திட்டவடிமைப்பை வைத்துள்ளது அதை இப்போதே இதற்கும் மேல் விளக்க முடியாது என்றும் கூறுகிறார் திரு.குருமூர்த்தி அவர்கள்.. எந்த அதிகாரமிக்க பதவியிலும் இல்லாமலே தேசிய அளவில் மிகப்பெரிய ஆதரவாளர்களையும், தொண்டர்களையும் கொண்டுள்ள சக்தி வாய்ந்த தலைவராக அண்ணாமலை உயர்ந்திருப்பது, தமிழகத்திற்கு நிகராக தேசம் முழுக்க அவரை பயன்படுத்த வேண்டிய தேவையிருப்பதை எல்லாம் தெளிவாக விளக்கியுள்ளார்..

SundarRajaCholan☀𑌸𑍁𑌨𑍍𑌦𑌰𑍍 𑌰𑌾𑌜 𑌚𑍋𑌳𑌼𑌨☀

25,420 görüntüleme • 1 yıl önce

sundarrajachola's profile picture

நீரெல்லாம் கங்கை நிலமெல்லாம் காசி என்று பாரதம் முழுக்க நம்பப்படுகிறது..சக்திபீடங்களும், ஜோதிர்லிங்கமும் நமது கலாச்சார எல்லைக் கோடுகளை மொழி, இனத்திற்கு அப்பால் வைக்கிறது.. "வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும் குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்.." என புறநானூற்று பாடலே, வடக்கே இமயம், தெற்கே குமரி, கிழக்கும் மேற்கும் கடலே நமது எல்லை என்று இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னே தெளிவாக சுட்டுகிறது.. இந்தியாவின் எந்த மொழியிலும், எந்த ஊரிலும் ராமாயண - மகாபாரத தொன்மம் இல்லாமல் இருக்கவே முடியாது.ஆகவே, நமது முன்னுதாரணங்கள், வாழ்வியல் தர்மங்கள் எல்லாம் அதிலிருந்தே நமக்கு கிடைக்கிறது..அதை ஆப்ரேஷன் சிந்தூர் பற்றிய இந்த சாணக்யா கலந்துரையாடலில் மிகச்சரியாக விளக்கியுள்ளார் திரு.அண்ணாமலை அவர்கள்.. இந்த ராணுவ நடவடிக்கையை சோனியா குடும்பத்தை தவிர, மற்ற அனைத்து கட்சிகளும், காங்கிரஸிலே கூட பல தலைவர்களும் ஒருங்கிணைந்து ஆதரவு தந்தார்கள் என்றே பார்க்க வேண்டும்.அப்படிப்பட்ட நிலையில் ஒரு அரசியல்வாதி அதை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு உதாரணமாக அண்ணாமலை அவர்களின் கலந்துரையாடலும், உரையும் அமைந்திருந்தது. சாணக்யா டிவி ஏற்பாடு செய்திருந்த ஆப்ரேஷன் சிந்தூர் பற்றிய உரையாடலில் மேஜர் மதன் அவர்களின் உரையும், விளக்கமும் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. தமிழகத்தை போல சினிமா மோகத்தில் மூழ்கியிருக்கும் மாநிலத்தில், திட்டமிட்ட போதைக் கலாச்சாரத்தால் இளைஞர்களின் வாழ்வை குறி வைக்கும் சூழ்நிலையில், இந்திய ராணுவத்தின் நுணுக்கங்களையும் ராணுவ நடவடிக்கைகளின் காரண காரியங்களையும் இளைய சமுதாயத்துக்கு அற்புதமாக விளக்கி வருகிறார் மேஜர் மதன் அவர்கள்..ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரத்தில், எல்லையில் போராடும் அதே அளவான பணியை அவர் நாட்டிற்கு உள்ளே செய்துள்ளார் என்று சொல்வது மிகையில்லை.நாம் 0.5 Front யுத்தத்தில் வெல்வோம் என்ற நம்பிக்கையை அது உறுதியாக வழங்குகிறது.. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு திரு.பாண்டே அவர்களுக்கும் மிக்க நன்றி..🙏

SundarRajaCholan☀𑌸𑍁𑌨𑍍𑌦𑌰𑍍 𑌰𑌾𑌜 𑌚𑍋𑌳𑌼𑌨☀

14,740 görüntüleme • 1 yıl önce

sundarrajachola's profile picture

பல மேடை போட்டு பேசினாலும், ஆய்வு நூல் எழுதினாலும் விளக்க முடியாத ஒன்றை ஒரு பேட்டியின் சிறு பகுதியில் எடுத்தியம்பியுள்ளார் KCP அவர்கள்..😀 அதாவது, தனிமனித ஆராதனை கொண்ட, செல்வாக்கு பெற்ற ஒரு தலைமை இங்கே மாற்று சக்தியாக எழுந்துவிடும் வாய்ப்புள்ளது.அது அந்த கட்சியை இங்கே நிலைபெற வைக்கும்.. ஆகவே, செல்வாக்கில்லாத தலைமையின் கீழ், சித்தாந்த பூச்சு கொண்ட ஒரு தேசியகட்சியானது, டெல்லி அதிகாரத்தை திராவிட கட்சிகளுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள மட்டுமே கூட்டணி வேண்டும்..😀 தமிழகத்தில் தேசிய கட்சியின் வீழ்ச்சியையும், திராவிட கட்சிகளின் எழுச்சியையும் பொட்டிலடித்தது போல விளக்கியுள்ளார்..

SundarRajaCholan☀𑌸𑍁𑌨𑍍𑌦𑌰𑍍 𑌰𑌾𑌜 𑌚𑍋𑌳𑌼𑌨☀

15,774 görüntüleme • 1 yıl önce

Daha fazla içerik yok.