thirumurugan gandhi's banner
thirumurugan gandhi's profile picture

thirumurugan gandhi

@thiruja200915,138 subscribers

மே17 இயக்கம் | MAY17 movement

Videos

thiruja2009's profile picture

பெரியாரிய சிந்தனையாளர், திராவிடர் இயக்கச் செயற்பாட்டாளர், கம்பீர கருப்புச்சட்டைக்கு சொந்தக்காரர் ஐயா தகடூர் சம்பத் அவர்கள் நேற்று மறைந்தார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் வாயிலாக நெருக்கமாக அறிமுகமான செயல்வீரர் ஐயா தகடூர் சம்பத் அவர்கள். இனிமையான பேச்சும், கனிவான தோழமையும் எவரையும் அவர்பால் வசீகரிக்கும். தெளிந்த சிந்தனையுடன் பெரியாரியலை முன்னெடுத்தவர். அன்றாடம் பெரியார் குறித்த கருத்துகளை பகிர்பவர். திருக்குறள் மீது அளவுகடந்த பற்றுக்கொண்டவர். திருக்குறள் மீதான தனியா பற்றுக்காரணமாக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் முன்களப்பணியையும், ஆவணப்படுத்தல், ஒருஙகிணைத்தல், நிதி நிர்வாகப் பணிகளை மேற்கொண்டவர். 2019 ஆண்டு முழுவதும் நடந்த மோடி-பாஜக-சனதான எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். தர்மபுரி என வடமொழியாக்கம் செய்யப்பட்ட தனது ஊரின் சங்ககாலப்பெயரான 'தகடூர்' என்பதைத் தனது பெயரோடு இணைத்துக்கொண்டு தமிழ்ப்பற்றினை முன்னெடுத்த சான்றோராக திகழ்ந்தவர். இளைஞர்களை அரவணைத்து வளர்த்தெடுப்பவர், பெரியாரியலை குழந்தைகள் வரை கொண்டு செல்ல வேண்டுமென முனைப்புக் கொண்டவர். அவரது மறைவு அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அவரது இடத்தை நிரப்புவது எளிதல்ல. தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோதிலும், திருக்குறள் தொடர்பாக பல விடயங்களை தொகுத்துக் கொண்டிருந்தார். அப்பணி முடியுமுன்னர் நம்மை விட்டுப் பிரிந்திருப்பது நமக்குப் பேரிழப்பு. திடீரென மிக மோசமான உடல்நிலை குறைவு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்ட பொழுதில் தனது நினைவிழந்த நேரத்தில் கூட ' தந்தை பெரியார் வாழ்க, திராவிடம் வாழ்க, தமிழ் வாழ்க' என கையை உயர்த்தி முழக்கமிட்டிருக்கிறார். இப்படியான பற்றுக்கொண்டவரை இழப்பது பெரும் துயரம் தருகிறது. மே பதினேழு இயக்கத்தோழர்கள் மீது பேரன்பு கொண்டவர். எமது தகடூர் நகரத்தோழர், சமரசமற்றப் போராளி மகாலிங்கம் மறைவுற்ற போது உறுதுணையாய் நின்றவர். அவருக்கான நினைவு நிகழ்ச்சியை எழுச்சியுடன் நடத்த உதவி செய்த பெருமகனார். ஐயா தகடூர் சம்பத் போன்றோரின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு செயல்பாடுகளால் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது. தமிழருக்கும், தமிழ் மொழிக்கும், திருக்குறளுக்கும், திராவிடத்திற்கும், தந்தை பெரியாருக்கும் பெரும்பங்காற்றிய ஐயா தகடூர் சம்பத் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம். அவர் புகழ் ஓங்கட்டும், அவர் பணி வெல்லட்டும்.

thirumurugan gandhi

34,218 views • 3 months ago

thiruja2009's profile picture

கவின் ஆணவப்படுகொ**லையில் முதன்மைக் குற்றவாளிகளான சுஜித்தின் பெற்றோர்களில் தாயாரை நீண்ட நாட்களுக்குப்பின்னர் கைது செய்துள்ளது காவல்துறை. இதற்கான போராட்டங்களை நடத்திய அனைத்து அமைப்புகளுக்கும் எமது வாழ்த்துகள். சுர்ஜித்தின் பெற்றோர்களை கைது செய்யக் கோரி முதல் போராட்டத்தை நடத்தியது மே17 இயக்கம். சாலை மறியலை நடத்தி கைதானோம். இப்போராட்டத்தில் மொழிப்போர் ஈகி சிவா திலீபன் அவர்களின் இணையரும் , மகளும் சாலை மறியலில் காவல்துறையால் இழுத்துச் செல்லப்பட்டு கைதாகினர். சாதியொழிப்புக் களத்தில் தனது நேசத்திற்குரியவர்கள் களப்போராட்டதில் முன்னனியில் இயங்கியதை சிவா திலீபன் கண்டு பெருமை கொண்டதாகச் சொல்வார். சாதிமறுப்பு திருமணம் செய்த ஓரிரு வாரத்தில் நடந்த இப்போராட்டத்தில் அவரது மகள் பங்கெடுத்தது அவருக்கு பெருமையைக் கொடுத்தது. சாதி ஒழிந்த தமிழ்த்தேசியத்தை நேசித்த சிவாவின் எதிர்பார்ப்பில் ஒருபகுதி இன்று நிறைவேறியது எனும் வகையில் மனம் நிறைவு கொள்கிறது. இந்தக் குற்றவாளிகள் மீதான வழக்குகள் திறம்பட நடத்தப்பட்டு, கடும் தண்டனை விதிக்கபப்டும்வரை போராட்டம் தொடரட்டும். இதுபோன்ற சாதி ஆணவப்படுகொ**லைகளுக்கு முடிவுகட்டும் வரை நம் போராட்டம் ஓயாது. சாதி ஒழிப்பே தமிழ்த்தேசியம் என்போம்.

thirumurugan gandhi

27,959 views • 3 months ago

thiruja2009's profile picture

ஆளுனர் தவெக கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு முன்பாக விகடன் இதழுக்கு கொடுத்த பேட்டியின் ஒரு பகுதி.... தமிழ்நாடு அரசியல் என்பது எதிரும்-புதிருமாக ஏட்டிக்கு போட்டியாக செய்யப்பட வேண்டிய அரசியலாக இருக்க வேண்டியதில்லை. கடந்தகால வரலாறில் இருந்து இதை நீக்கம் செய்ய வேண்டும். திருமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரத்தில் இருந்த சமயத்தில் இதை முயற்சித்து நடைமுறை செய்த நிகழ்வுகள் உண்டு. இந்திய அளவில் முன்னாள் ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை பெறும் வழக்கம் உண்டு. எதிர்கட்சிகளை எதிரி-கட்சியாக நடத்தும் மனப்பாங்கு பாஜகவிற்கு மட்டுமே உண்டு. எதிர்கட்சி தொண்டர்களை எதிரிகளாக பாவிப்பதும் சங்கிகளின் அரசியல் வழக்கம். அப்படியான அரசியல்-பண்பாடு இல்லாமல் தமிழ்-தமிழர்-தமிழ்நாடு நலன்சார்ந்து தேவைப்படும் காலங்களில் கூடி பேசி முடிவெடுப்பதே சனநாயக மரபுக்கு அழகு சேர்க்கும். இந்த பண்பினை வளர்க்கும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டுமென்பதே எமது விருப்பம்... நல்லவிடயங்கள் மட்டும் தொடரட்டும்..

thirumurugan gandhi

24,794 views • 3 months ago

thiruja2009's profile picture

கோவையில் பரப்புரையை தடுக்க பாஜகவினர் குவிகின்றனர். பரப்புரை வாகனத்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டு மிரட்டும் கூட்டத்தை நேருக்கு நேராக எதிர்கொண்டு பரப்புரையை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறோம். எமது ஊரில், எமது நாட்டில் எம்மை மிரட்ட எவனும் பிறக்கவில்லை. வீதியில் எதிர்கொள்வோம் பாசிச கும்பலை. பாஜக கும்பலுக்கு ஆதரவாக வந்த காவல்துறையை வாதிட்டு ஒதுக்கி நிறுத்திவிட்டு பரப்புரை வாகனத்தை நிறுத்தி உரையாற்ற ஆரம்பித்துள்ளோம். நேரில் வந்த பாஜக மாவட்ட பொறுப்பாளரையும், பாரத் மாதாகீ ஜே என முழக்கமிட்ட கும்பலை ' ஜெய் பீம்!', 'பெரியார் வாழ்க!', ' தமிழ்நாடு தமிழருக்கே!, வெளியேறு வெளியேறு, வட நாட்டானே வெளியேறு!!' என்கிற முழக்கத்தோடு தோழர்கள் விரட்டியடித்தனர். பரப்புரை நடக்கிறது, காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. பாஜக கும்பல் குவிந்து கொண்டிருக்கிறது. எதற்கும் அஞ்சாமல் பரப்புரை நடக்கிறது. தோழர் குடந்தை அரசன், தமிழக மக்கள் சனநாயக கட்சியின் அபு, தமிழ் சிறுத்தைகளின் அகத்தியன் ஆகியோர் உடனிருக்கிறார். எதற்கும் அஞ்சப்போவதில்லை. இது பெரியார்,பிரபாகரன், அண்ணலின் வழி வந்த படை. எதிர்த்து நிற்போம். துணிந்து வெல்வோம்

thirumurugan gandhi

118,765 views • 2 years ago

thiruja2009's profile picture

திராவிடம், தமிழ்த்தேசியம் தமிழின அரசியலில் இரு கண்கள். இரண்டில் ஒன்றை தவிர்த்து ஒற்றைக் கண்ணோடு பயணிக்க விரும்புகிறவர்களால் தமிழினத்தை முன்னகர்த்த இயலாது. இதுகுறித்து எந்த மேடையிலும், எவரோடும் விவாதித்து நிறுவும் நேர்மை மே17 இயக்கத்திற்குண்டு. இந்த அரசியலை இன்றல்ல, கடந்த 15 ஆண்டுகளாக வலியுறுத்தி செயல்படுகிறது. இந்த அரசியல் புரிதலே மே17 இயக்கத்தை வலிமையானதாக, உறுதியானதாக, நேர்மையானதாக, சமரசமற்றதாக உருவாக்கியுள்ளது. ஆரிய-இந்திய பார்ப்பனிய-பனியா ஆதிக்கத்தை எதிர்த்து போராடுவது மட்டுமல்லாமல், போலித்தமிழ்த்தேசியத்தை, முதலாளித்துவ திராவிடத்தை தொடர்ந்து அம்பலப்படுத்துகிறார்கள் மே17 இயக்கத் தோழர்கள்.

thirumurugan gandhi

72,874 views • 1 year ago