#பொங்கல்

வானுக்கும் மண்ணுக்குமான உறவைச் சூரியனை வணங்கிப் போற்றும் தமிழர் திருநாளாம் #பொங்கல் வாழ்த்துகள்! சாதி மத வேறுபாடுகளின்றித் தமிழர் ஒன்றிணைந்து கொண்டாடும் சமத்துவத் திருநாளில் தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள்! #தமிழ்நாடு_வாழ்க தமிழர் தரணியாள!
M.K.Stalin420,582 Aufrufe • vor 3 Jahren

உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்கு என் இனிய #பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ‘தை பிறந்தால், வழி பிறக்கும்’ என்பார்கள். இந்த தை மாதம் சேலத்தில் நடக்கவிருக்கும் நம் DMK Youth Wing-ன் மாநில மாநாட்டில் ஒன்று கூடி, இந்திய ஒன்றியத்துக்கே வழிபிறக்கின்ற வகையில் அயராது உழைத்திட உறுதியேற்போம். மாநில உரிமையை மீட்டெடுத்து இந்திய ஒன்றியத்தை காத்திட தமிழர் திருநாளாம் #தைப்பொங்கல் நாளில் சூளுரைப்போம்.
Udhay219,808 Aufrufe • vor 2 Jahren

#பொங்கல் விளையாட்டில் பிரச்சினை என்ற ஒரே காரணத்திற்காக மணிகண்டன் என்கிற தலித் இளைஞர் காவல்துறை முன்பே சமூக விரோதிகளான சாதி வெறியர்களால் கழுத்தறுத்து படுகொலை செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. #பெரம்பலூர்மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், கைகளத்தூர் பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் மணிகண்டனை அப்பகுதியில் உள்ள தேவேந்திரன் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்துள்ளார். இன்று காலை சுமார் 10.30 மணியளவில் சமாதானம் பேச காவல்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில், காவல் நிலையத்தை அல்லாத வேறொரு இடத்தில் வைத்து கட்டப்பஞ்சாயத்து பேசியபோது, காவல்துறை கண் முன்னேயே கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை நிகழ்ந்துள்ளது, இது தமிழ்நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு CMOTamilNadu படுகொலை செய்த கயவர்கள் அனைவரையும் #SCSTவன்கொடுமைதடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவுச் செய்து உடனடியாக சிறைப்படுத்த வேண்டும்.மேலும்,இந்த சம்பவத்திற்கு பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் அலட்சியமே படுகொலைக்கு காரணம் உடனடியாக காவல்துறையினர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டும். District Collector Perambalur
நீலம் பண்பாட்டு மையம்56,117 Aufrufe • vor 1 Jahr
Keine weiteren Inhalte verfügbar


