Video yükleniyor...

Video Yüklenemedi

Ana Sayfaya Dön

இறந்தவரின் சொத்தில் யாருக்கெல்லாம் உரிமை உண்டு...?👇🏻

48,448 görüntüleme • 1 yıl önce •via X (Twitter)

2 Yorum

பொதுஜனம் profil fotoğrafı
பொதுஜனம்1 yıl önce

இந்த பேப்பரின் pdf file இருந்தால் எனக்கு அனுப்புங்கள்

KOTO 💛 💊 profil fotoğrafı
KOTO 💛 💊1 yıl önce

YEAR OF THE KOTO 💊🀄🐉 ★彡⋆°✩°░▒▓█▀▀▄█▓▒░░▒▓█ VISIT *** *** NOW!!!

Benzer Videolar

சில தவெக ஆதரவு பெண்கள் விமர்சிக்கும்போது எனக்கு ரொம்பவே கோபம் வரும். ஆனால், இதையெல்லாம் தளபதி மு.க.ஸ்டாலின் பார்க்கும்போது அவரது மனநிலை எப்படி இருக்கும்...? 'மகளிர் உரிமை தொகை நாங்க கேட்டோமா...'? 'விடியல் பயணம் நாங்கள் கேட்டோமா..'? என சொன்னது உண்டு. இதுபோன்ற பெண்களிடம் ஒரே ஒரு கேள்வியை கேட்க வேண்டும் என நானும் எதிர்ப்பார்க்கிறேன். ஆனால், இப்ப வரை யாரும் கேட்கவில்லை...!! 'ஏம்மா, மகளிர் உரிமை தொகை வேணாம்.. விடியல் பயணம் வேணாம்னு சொல்ற நீங்க.. உங்க அப்பாவின் சொத்துக்களையும் அல்லது உங்க பரம்பரை சொத்துக்களையும் வேணாம்னு சொல்கிற தைரியம் இருக்கிறதா? என்கிற கேள்வியை யாரும் இதுவரை கேட்கவில்லை. அப்படி கேட்டிருந்தால், 'எதே நான் எதுக்கு என் பரம்பரை சொத்தை வேணாம்னு சொல்வேன் அது எங்க சொத்து தானே..'? என அலறுவார்கள். 1989-க்கு முன்னால் தமிழ் நாட்டில் என்ன நிலைமை இருந்தது...? ஒரு பெற்றோருக்கு அண்ணன், தங்கை பிறந்தால், அண்ணனுக்கு பிறக்கும்போதே பரம்பரை சொத்தில் உரிமை தானாக வந்துவிடும். ஆனால், தங்கைக்கு அந்த உரிமை கிடைக்காது. தங்கைக்கு திருமணம் ஆனால் சில நகைகள், பாத்திர பண்டங்கள் உள்ளிட்ட சீர்வரிசை கொடுத்து மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்புவார்கள். இதன் பிறகு, அப்பெண் வந்து சொத்தில் பங்கு கேட்கும் சட்டமே கிடையாது. மீறி கேட்டால், அந்த அண்ணன் கழுத்திலேயே மிதித்து துரத்தி விடுவான். யாரும் எதிர்த்து கேட்க முடியாது. ஒருவேளை, ஒரு குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லை என்றால்...? பெற்றோருக்கு பிறக்கும் ஒன்று/இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தைகளாகவே இருந்தால், ஆண்களை போல் பிறக்கும்போதே அவர்களுக்கு சொத்தில் உரிமை வராது. ஆண் வாரிசே பிறக்கவில்லை என்றால், அந்த சொத்து முழுவதும் தந்தையின் பெயரிலேயே இருக்கும். தந்தை வயதாகி இறந்த பின்னர் மட்டுமே அந்த சொத்துக்கள் பெண் வாரிசுகளுக்கு வரும். இப்படி ஒரு அவலமான சமூகம் இருந்தது. இந்த சமூக அவலத்தை நீக்க 1989-ல் கலைஞர் கொண்டு வந்த சட்டம் தான் '#பெண்களுக்கு_சொத்துரிமை சட்டம்'. இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதும், 1989-க்கு பிறகு. ஒரு பெற்றோருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தால், அவர்கள் இருவருக்கும் பிறக்கும்போதே சொத்தில் 'சம பங்கு' இருக்கிறது என்று அர்த்தம். பெண்ணுக்கு திருமணம் ஆகி, மாப்பிள்ளை வீட்டில் வசித்தாலும், அவள் எப்போது வேண்டுமானாலும் தந்தை வீட்டுக்கு வந்து தன்னுடைய சம பங்கு சொத்தை தாராளமாக எழுதி வாங்கிக்கொள்ளலாம். பெண்களுக்கான இப்படி ஒரு சமூக புரட்சியை கலைஞருக்கு முன்பு ஆட்சி செய்த காமராஜர் உள்பட எந்த முதல்வரும் கொண்டு வரவில்லை. இவ்வளவு ஏன்....? 1977 முதல் 1987 வரை தமிழ் நாட்டை ஆட்சி செய்த எம்.ஜி.ஆர் கூட இந்த சட்டத்தை கொண்டு வர சிந்தித்தது கூட இல்லை. ஆனால், கலைஞருக்கு மட்டும் தான் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சுக்கு நூறாக உடைக்க தோன்றியது. 1989-ல் இத்திட்டம் செயல்பட தொடங்கியது. தமிழ் நாட்டில் மட்டுமா...? கலைஞரின் இத்திட்டம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது. மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம் திட்டத்தை எப்படி பல்வேறு மாநிலங்கள் காப்பி அடித்து செயல்படுத்துகிறார்களோ. இதே போல் கலைஞரின் இந்த 'பெண்களுக்கு சம்ளவில் சொத்துரிமை' என்கிற சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் சட்டமாக்க மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய காங்கிரஸ் அரசு முன் வந்தது. இதன் விளைவாக, 2005-ம் ஆண்டு அனைத்து மாநிலங்களிலும் இச்சட்டத்தை அமல் படுத்தி காங்கிரஸ் உத்தரவிட்டது. இன்றைய நாளில் குஜராத்தில், உத்திரப்பிரதேசத்தில் ஒரு பெண் தன்னுடைய பூர்வீக சொத்தில் சம அளவு சட்டப்பூர்வமாக பெறுகிறார் எனில், அதற்கு காரணம் #கலைஞர் தான். #திமுக தான். நன்றி: Adv. Alim Albuhari 🙏

நந்தினி ❣️

12,366 görüntüleme • 1 ay önce