
Nimal Raghavan
@being_nimal • 29,633 subscribers
A common man!
Shorts
Videos

மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் CTR.Nirmalkumar அண்ணன் அவர்களின் பார்வைக்கு! “ஏரிக்கு நடுவே பல ஆண்டு காலமாக இருக்கும் உயர் அழுத்த மின் கம்பங்கள்” தற்போது நாம் சீரமைத்து கொண்டிருக்கும் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் சாலையில் உள்ள “செல்லிக்குறிச்சி ஏரி”. கிட்டத்தட்ட 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி. மிக முக்கிய நீராதரமாகிய இந்த ஏரியின் நடுவே உயர் அழுத்த மின் கம்பங்கள் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. இவற்றை அகற்றித்தருமாறு பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மின் கம்பங்களை அகற்றினால் மட்டுமே இந்த சீரமைக்கும் பணிகள் முழுமை பெரும், மக்களும் பாதுகாப்பாக உணர்வார்கள். ஆகவே மின்சார வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம். TANGEDCO Official
Nimal Raghavan293,845 просмотров • 21 дней назад

இது தான் தற்போது தஞ்சாவூரில் சீரமைத்துக் கொண்டிருக்கும் 642 ஏக்கர் கள்ளப்பெரம்பூர் ஏரி. இந்த 642 ஏக்கரில் 400 ஏக்கருக்கும் அதிகமாக நாட்டுக்கருவேல மரங்களும், சீமைக்கருவேல மரங்களும் ஆக்கிரமித்து இருப்பதால் தண்ணீரை சேமிக்க முடியவில்லை. இந்த மரங்களை அகற்றினால் மட்டுமே அந்த இடங்களை தூர்வார முடியும், தூர்வாரினால் மட்டுமே தண்ணீரை சேமிக்க முடியும். ஆகவே இந்த ஏரியில் ஆக்கிரமத்துள்ள கருவேல மரங்களை அகற்றி தருமாறு தமிழ்நாடு வனத்துறையை கள்ளப்பெரம்பூர் / செங்கழுநீர் ஏரி சீரமைப்பு குழுவின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்🙏🏾
Nimal Raghavan58,926 просмотров • 1 месяц назад

கல்லணை கால்வாயில் போடப்பட்ட concrete தளம் என்ன செய்கிறது என்று பாருங்கள்!
Nimal Raghavan19,438 просмотров • 14 дней назад

“உகாண்டாவில் பனை மரத்தின் முக்கியத்துவத்தை இங்குள்ளவர்களுக்கு புரியவைக்கும் முயற்சியில் முதல் படி” உகாண்டா நாட்டின் பேரிடர் மேலாண்மை, நிவாரணம் மற்றும் அகதிகள் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. சாம் எங்கோலா அவர்களிடம் உகாண்டா பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து “பனை” பற்றியும், அதனை எவ்வாறு மதிப்புக்கூட்டி மக்களுக்கு பலனுள்ளதாக மாற்ற வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சரிடம் எடுத்துறைத்தோம். இந்த செய்தி உகாண்டா நாட்டின் பிரதமரிடமும் கொண்டு சேர்க்கப்பட்டது. மிக விரைவில் நல்ல செய்தி வரும் அதிகாரப்பூர்வமாக💫 Sam Engola
Nimal Raghavan37,072 просмотров • 1 месяц назад

இரண்டு வருடங்களுக்கு முன் நாம் வைத்த குறுங்காடு. தற்சமயம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்💚💫
Nimal Raghavan53,639 просмотров • 2 месяцев назад

முருகனை குறிக்கும் ஆறு நதிகளும் ஒன்றினைந்து முருகனின் பெயர்களில் ஒன்றான சண்முகர் என்ற பெயருடன் இணைத்தது சண்முகா நதி ஆகும். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் ஓடிக்கொண்டிருந்த புனித நதியில் இன்று சாக்கடை நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சண்முகா நதியை மீண்டும் நன்னீராக்கும் முயற்சிகளை நாளை முதல் தொடங்க உள்ளோம். முதல்கட்ட பணிகள் நாளை தொடங்கவுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு : 8903229322.
Nimal Raghavan15,069 просмотров • 17 дней назад

Next Project - ரொம்ப பெருமையா இருக்கு - கீரனூர் பெரிய குளம்💫
Nimal Raghavan19,995 просмотров • 25 дней назад

உகாண்டாவில் ஒருவரை முதன்முதலில் “நுங்கு” சாப்பிட வைத்த போது💫
Nimal Raghavan44,043 просмотров • 2 месяцев назад

உலகின் மிக நீளமான நதியான நைல் நதியின் பிறப்பிடம் இது தான். ஒரு சிறிய ஊற்றாக தொடங்கி விக்டோரியா ஏரியின் நீருடன் இந்தப் பயணம், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து பல நாடுகளின் வாழ்வாதாரமாக மாறுகிறது💫 #NileRiver #SourceOfTheNile #Jinja #Uganda #LakeVictoria #Nature #Africa
Nimal Raghavan35,189 просмотров • 2 месяцев назад

திருச்சி விமான நிலையம் அருகே நாம் சீரமைச்ச குண்டூர் ஏரி. பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க! ❤️
Nimal Raghavan101,169 просмотров • 8 месяцев назад

உகாண்டாவில் இருக்கும் பனை மரங்கள்💫 உகாண்டாவில் நான் பயணம் செய்த போது என்னை வியக்க வைத்தது நான் அங்கை கண்ட பனை மரங்கள். ஆனால் அந்த பனை மரங்களை தேவையற்ற மரங்களாக அந்த மக்கள் நினைக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டபோது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. பனை மரத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்ளும் நாள் நிச்சியமாக வரும். அதை உருவாக்கியே தீருவேன் என்று உறுதியளித்து வந்திருக்கிறேன்.
Nimal Raghavan28,190 просмотров • 2 месяцев назад

“பட்டுக்கோட்டை மங்கம்மா குட்டையில் அராஜகம்” பல ஆண்டுகளாக குப்பை மேடாக இருந்த இடத்தை பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு உரிய அனுமதி பெற்று வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் தொடங்கப்பட்டது. குப்பை மேடாக இருந்த இடத்தை குப்பைகள் முழுவதையும் அகற்றிய பிறகு முழு குளமாக்குவதற்கு முயற்சி செய்தோம். இந்த குட்டை இருக்கும் இடத்தை அளந்து கொடுப்பதில் இருந்த சிக்கல் காரணமாக தற்காலிகமாக வேலையை நிறுத்தி வைத்திருந்தோம். இந்த இடைப்பட்ட நேரத்தில் மீண்டும் இங்கு நகராட்சியால் குப்பை கொட்டப்பட்டு மீண்டும் குப்பை கிடங்காக மாற்றப்பட்டுள்ளது. நீர் நிலைகளை மீட்டெடுப்பதற்கு ஒவ்வொரு நாளும் பலதரப்பட்ட சிரமங்களையும் தாண்டி கிட்டத்தட்ட பிச்சை எடுக்காத குறையாக எல்லாவற்றையும் செய்து பணிகளை தொடங்கினால் அந்தப் பணிகளை மீண்டும் மீண்டும் தடுப்பதற்கான அனைத்து வித அடக்குமுறைகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த மங்கம்மா குட்டை பட்டுக்கோட்டையில் ஒரு முக்கிய சாலையின் இருக்கக்கூடிய ஒரு இடம். தூய்மை செய்யப்பட்ட ஒரு குளத்தில் நீங்கள் இப்படி குப்பையை கொட்டுகின்றீர்கள் என்றால் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவோ பராமரிப்பற்று இருக்கும் நீர்நிலைகளையோ நீங்கள் என்னென்ன செய்வீர்கள்?? இதற்கு நிச்சயம் ஒரு தீர்வு வேண்டும், இங்கு கொட்டப்பட்ட குப்பைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் இதற்கான தீர்வை போராடித்தான் பெற வேண்டுமென்றால் அதற்கும் நாங்கள் தயார்!
Nimal Raghavan145,912 просмотров • 1 год назад

“வேங்கைவயலை விட பெரும் அவலம்” 3 கோடி மக்களின் குடிநீரில் கலக்கும் மலக்கழிவு! புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டு ஒட்டுமொத்த தமிழகமே கொதித்தெழுந்தது. ஆனால், தமிழகத்தின் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 கோடி மக்களின் தாகத்தைத் தீர்க்கும் “காவிரி கூட்டுக்குடிநீர் ஆதாரத்தில்” தினமும் லட்சக்கணக்கான லிட்டர் மனித மலக்கழிவுகள் கலக்கப்படும் அதிர்ச்சி உண்மை உங்களுக்குத் தெரியுமா? நடப்பது என்ன? கோவை மாநகராட்சியின் உக்கடம் அருகே உள்ள #புட்டுவிக்கி பகுதியில், மனித கழிவுகள் கலந்த பாதாள சாக்கடை நீர் எந்தவித சுத்திகரிப்பும் இன்றி நேரடியாக “நொய்யல் ஆற்றில்” திறந்துவிடப்படுகிறது. இந்த நச்சு நீர், கரூர் அருகே நேரடியாக “காவிரி ஆற்றில்”கலக்கிறது. காவிரி ஆற்றுப் படுக்கைகளில் உள்ள உறை கிணறுகள் (Infiltration Wells) மூலமாக உறிஞ்சப்பட்டு, கூட்டுக்குடிநீர் திட்டங்கள் வழியாக நம் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் இந்த மலக்கழிவுகளும் மறைமுகமாகக் கலந்து வருகின்றன! இது ஏதோ ஓராண்டு பிரச்சனை அல்ல; கடந்த 10, 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடக்கும் அநீதி! கர்நாடகா கழிவுநீரைக் கலப்பது வேற்று மாநில அநீதி என்றால், நம் சொந்த மாநிலத்தில் நம்மவர்களே செய்யும் இந்தத் துரோகத்தை என்னவென்று சொல்வது? இதை இப்போதே தடுத்து நிறுத்த வேண்டும்! கோவை மாநகராட்சியும், தமிழக அரசும் உடனடியாகத் தலையிட்டு, புட்டுவிக்கி பகுதியில் சுத்திகரிக்கப்படாத பாதாள சாக்கடை நீர் ஆற்றில் கலப்பதைத் தடுத்து நிறுத்தப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்! நன்றி! #SaveCauvery #SaveNoyyal #Coimbatore #Ukkadam #Puttuvikki #SaveWater #TamilNadu #WaterPollution #CCMC #PublicHealth #smartcity #swachhbharat
Nimal Raghavan34,182 просмотров • 2 месяцев назад

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வாட்டம் குளவாய்ப்பட்டியில் கடந்த 4 வருடங்களாக குவாரி என்ற பெயரில் நடக்கும் அட்டூழியங்கள்!
Nimal Raghavan68,628 просмотров • 6 месяцев назад