
Nimal Raghavan
@being_nimal • 28,781 subscribers
A common man!
Shorts
Videos

உகாண்டாவில் ஒருவரை முதன்முதலில் “நுங்கு” சாப்பிட வைத்த போது💫
Nimal Raghavan43,790 просмотров • 16 дней назад

இரண்டு வருடங்களுக்கு முன் நாம் வைத்த குறுங்காடு. தற்சமயம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்💚💫
Nimal Raghavan53,319 просмотров • 21 дней назад

உலகின் மிக நீளமான நதியான நைல் நதியின் பிறப்பிடம் இது தான். ஒரு சிறிய ஊற்றாக தொடங்கி விக்டோரியா ஏரியின் நீருடன் இந்தப் பயணம், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து பல நாடுகளின் வாழ்வாதாரமாக மாறுகிறது💫 #NileRiver #SourceOfTheNile #Jinja #Uganda #LakeVictoria #Nature #Africa
Nimal Raghavan34,991 просмотров • 24 дней назад

“வேங்கைவயலை விட பெரும் அவலம்” 3 கோடி மக்களின் குடிநீரில் கலக்கும் மலக்கழிவு! புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டு ஒட்டுமொத்த தமிழகமே கொதித்தெழுந்தது. ஆனால், தமிழகத்தின் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 கோடி மக்களின் தாகத்தைத் தீர்க்கும் “காவிரி கூட்டுக்குடிநீர் ஆதாரத்தில்” தினமும் லட்சக்கணக்கான லிட்டர் மனித மலக்கழிவுகள் கலக்கப்படும் அதிர்ச்சி உண்மை உங்களுக்குத் தெரியுமா? நடப்பது என்ன? கோவை மாநகராட்சியின் உக்கடம் அருகே உள்ள #புட்டுவிக்கி பகுதியில், மனித கழிவுகள் கலந்த பாதாள சாக்கடை நீர் எந்தவித சுத்திகரிப்பும் இன்றி நேரடியாக “நொய்யல் ஆற்றில்” திறந்துவிடப்படுகிறது. இந்த நச்சு நீர், கரூர் அருகே நேரடியாக “காவிரி ஆற்றில்”கலக்கிறது. காவிரி ஆற்றுப் படுக்கைகளில் உள்ள உறை கிணறுகள் (Infiltration Wells) மூலமாக உறிஞ்சப்பட்டு, கூட்டுக்குடிநீர் திட்டங்கள் வழியாக நம் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் இந்த மலக்கழிவுகளும் மறைமுகமாகக் கலந்து வருகின்றன! இது ஏதோ ஓராண்டு பிரச்சனை அல்ல; கடந்த 10, 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடக்கும் அநீதி! கர்நாடகா கழிவுநீரைக் கலப்பது வேற்று மாநில அநீதி என்றால், நம் சொந்த மாநிலத்தில் நம்மவர்களே செய்யும் இந்தத் துரோகத்தை என்னவென்று சொல்வது? இதை இப்போதே தடுத்து நிறுத்த வேண்டும்! கோவை மாநகராட்சியும், தமிழக அரசும் உடனடியாகத் தலையிட்டு, புட்டுவிக்கி பகுதியில் சுத்திகரிக்கப்படாத பாதாள சாக்கடை நீர் ஆற்றில் கலப்பதைத் தடுத்து நிறுத்தப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்! நன்றி! #SaveCauvery #SaveNoyyal #Coimbatore #Ukkadam #Puttuvikki #SaveWater #TamilNadu #WaterPollution #CCMC #PublicHealth #smartcity #swachhbharat
Nimal Raghavan33,966 просмотров • 1 месяц назад

உகாண்டாவில், லீராவிற்கு அருகிலுள்ள அலெப்டாங் பகுதியில் ஒரு நீர்நிலையை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள முடிவு செய்து, அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்யச் சென்றோம். அப்போது அங்குள்ள மக்கள் எங்களுக்கு அளித்த வரவேற்பு எங்களை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது. அவர்களின் அன்பும், உற்சாகமும், நம்பிக்கையும் இந்தப் பணிக்கான எங்களின் பொறுப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. மக்களின் ஒத்துழைப்புடன், Alebtong Village-ல் நீர்நிலையை சீரமைக்கும் பணிகளை மிக விரைவில் தொடங்க உள்ளோம். நீரின்றி அமையாது உலகு, நீர்நிலைகளின்றி அமையாது நீர்! நீர் இருக்கும் இடத்தில் வாழ்வு வளரும்💚🌍 #Uganda #MegaFoundations #WaterCrisis #WaterConservation #SaveWater
Nimal Raghavan20,546 просмотров • 23 дней назад

உகாண்டாவில் நீர்நிலைகள் சீரமைப்பு பணிக்காக ஒரு பகுதியைத் தேர்வு செய்து ஆய்வு மேற்கொள்ள வந்தோம். அந்தப் பகுதியை எங்களுக்கு நேரில் காட்டுவதற்காக மட்டும் எவ்வளவு மக்கள் ஒன்று கூடியிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்! இது வெறும் வரவேற்பு மட்டுமல்ல… அவர்களின் தண்ணீர் தேவையையும், எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தும் குரல் என்று புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு இடத்தைப் பார்க்க நம்மை அழைத்துச் செல்லவே இத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்றால், அந்தப் பகுதியில் தண்ணீரின் தேவை எவ்வளவு அதிகமாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். இத்தனை மக்களின் நம்பிக்கையும், நமது முயற்சியும் இவர்களுக்கான நீரைக் கொடுக்கும். நீர் இருந்தால் வாழ்வு இருக்கும். நீர்நிலைகள் உயிர்ப்பெற்றால் மக்கள் வாழ்வு வளம்பெறும்💫💧🌍 #Uganda #MegaFoundations #WaterCrisis #WaterConservation #SaveWater
Nimal Raghavan17,609 просмотров • 23 дней назад

திருச்சி விமான நிலையம் அருகே நாம் சீரமைச்ச குண்டூர் ஏரி. பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க! ❤️
Nimal Raghavan101,169 просмотров • 7 месяцев назад

நீர்நிலைகள் சிரமைக்கும் என் பயணத்தில் இன்று மிக முக்கியமான நாளாக கருதுகிறேன். உலக நாகரிகங்களின் வரலாற்றை தாங்கி ஓடும் உலகின் மிக நீளமான நதியான நைல் நதியின் பிறப்பிடமான உகாண்டாவின் ஜின்ஜாவில் நிற்பது பெருமையும், நெகிழ்ச்சியும் அளிக்கிறது. ஒவ்வொரு நதிக்கும் ஒரு பிறப்பிடம் உண்டு; அதை நேரில் காணும் இந்த தருணம், இயற்கையின் மகத்துவத்தை மீண்டும் உணர்த்துகிறது. 💙🌍 #SourceOfTheNile #Jinja #Uganda #SaveWater #WaterConservation
Nimal Raghavan15,264 просмотров • 25 дней назад

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வாட்டம் குளவாய்ப்பட்டியில் கடந்த 4 வருடங்களாக குவாரி என்ற பெயரில் நடக்கும் அட்டூழியங்கள்!
Nimal Raghavan68,570 просмотров • 5 месяцев назад

“பட்டுக்கோட்டை மங்கம்மா குட்டையில் அராஜகம்” பல ஆண்டுகளாக குப்பை மேடாக இருந்த இடத்தை பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு உரிய அனுமதி பெற்று வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் தொடங்கப்பட்டது. குப்பை மேடாக இருந்த இடத்தை குப்பைகள் முழுவதையும் அகற்றிய பிறகு முழு குளமாக்குவதற்கு முயற்சி செய்தோம். இந்த குட்டை இருக்கும் இடத்தை அளந்து கொடுப்பதில் இருந்த சிக்கல் காரணமாக தற்காலிகமாக வேலையை நிறுத்தி வைத்திருந்தோம். இந்த இடைப்பட்ட நேரத்தில் மீண்டும் இங்கு நகராட்சியால் குப்பை கொட்டப்பட்டு மீண்டும் குப்பை கிடங்காக மாற்றப்பட்டுள்ளது. நீர் நிலைகளை மீட்டெடுப்பதற்கு ஒவ்வொரு நாளும் பலதரப்பட்ட சிரமங்களையும் தாண்டி கிட்டத்தட்ட பிச்சை எடுக்காத குறையாக எல்லாவற்றையும் செய்து பணிகளை தொடங்கினால் அந்தப் பணிகளை மீண்டும் மீண்டும் தடுப்பதற்கான அனைத்து வித அடக்குமுறைகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த மங்கம்மா குட்டை பட்டுக்கோட்டையில் ஒரு முக்கிய சாலையின் இருக்கக்கூடிய ஒரு இடம். தூய்மை செய்யப்பட்ட ஒரு குளத்தில் நீங்கள் இப்படி குப்பையை கொட்டுகின்றீர்கள் என்றால் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவோ பராமரிப்பற்று இருக்கும் நீர்நிலைகளையோ நீங்கள் என்னென்ன செய்வீர்கள்?? இதற்கு நிச்சயம் ஒரு தீர்வு வேண்டும், இங்கு கொட்டப்பட்ட குப்பைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் இதற்கான தீர்வை போராடித்தான் பெற வேண்டுமென்றால் அதற்கும் நாங்கள் தயார்!
Nimal Raghavan145,912 просмотров • 1 год назад

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், ஆவணம் பெரிய ஏரியின் சீரமைப்புப் பணிகள் இனிதே தொடங்கப்பட்டன💫
Nimal Raghavan22,054 просмотров • 1 месяц назад

நாம் சீரமைத்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வட்டம் பொய்யாதநல்லூர் ஏரி💫
Nimal Raghavan26,442 просмотров • 2 месяцев назад
