
sugunadiwakar
@sugunadiwakar • 9,676 subscribers
பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர்
Videos

அ.தி.மு.கவில் இருந்து, இப்போது விலகி த.வெ.க ஆதரவாளராக மாறியிருக்கும் திரு ஜவகர் அலி அவர்கள் நேற்றைய ‘மாலைமுரசு’ தொலைக்காட்சி விவாதத்தில் ‘ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்ட கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவில் ’வந்தே மாதரம்’ பாடல் பாடப்பட்டது’ என்று தெரிவித்தார். நான் அந்த நிகழ்ச்சியின் காணொலியை அலைபேசியில் எடுத்து அவர் சொன்னது தவறு என்று நிரூபித்தேன். ஆனாலும் அவர் தொடர்ந்து பொய் சொல்வதை நிறுத்தவில்லை. (கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவின் முழு காணொலி பின்னூட்டத்தில். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசியகீதமும் பாடப்பட்டது. ‘வந்தே மாதரம்’ பாடப்படவில்லை)
sugunadiwakar47,649 Aufrufe • vor 1 Monat

ஆளுநர் ‘ஆய்வு’ என்ற பெயரில் அத்துமீறுவது குறித்து நேற்று ஜெயா டி.வியில் விவாதம் நடைபெற்றது. ‘ஆளுநர் ஆசைப்பட்டபடி சட்டசபையில் இரண்டுமுறை தேசியகீதம் பாடப்பட்டது’ என்று நான் பேசும்போது ‘ஆளுநர் ஆசைப்படுகிறார் என்றெல்லாம் பேசக்கூடாது’ என்று வலதுசாரி ஆதரவாளர் ரவிச்சந்திரன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் எதிர்ப்பு தெரிவிக்க தெரிவிக்க, மூன்றுமுறை அதே வார்த்தைகளைத் திரும்பச் சொன்னேன். அதேபோல் ’ஆளுநர் பதவியே அம்பேத்கர்தான் உருவாக்கினார்’ என்று நீண்டநாட்களாக வலதுசாரிகள் காட்டிவரும் பூச்சாண்டியையும் தகுந்த தரவுகளுடன் மறுத்தேன். ‘ஆளுநர் ஆய்வு செய்வதை எதிர்ப்பது கேலிக்கூத்தானது, மற்ற மாநிலங்களில் நம்மை கோமாளிகளாகப் பார்க்கிறார்கள்’ என்றெல்லாம் ‘இந்து’ பத்திரிகையாளர் இராமகிருஷ்ணன் பேசினார். நான் எனக்கான நேரத்தின்போது ‘ஆளுநர் ஒன்றும் தெரியாத பச்சைப்பிள்ளை கிடையாது. அவருக்கு அரசியல் நோக்கமில்லை என்று சொல்வதுதான் கோமாளித்தனமானது, கேலிக்கூத்தானது’ என்றேன்.
sugunadiwakar12,257 Aufrufe • vor 13 Tagen

சமீபத்தில் ஒரு விவாத நிகழ்ச்சியில் தோழர் ஆளூர் ஷா நவாஸ், ஒருகாலத்தில் எப்படி கல்வியில் பார்ப்பன ஆதிக்கம் இருந்தது, அதை திராவிட இயக்கம் எப்படி மாற்றியது என்பதை விளக்கியிருக்கிறார். அப்போது கூட்டத்தில் இருந்த ஓர் இளைஞர், ‘’அப்போ இரட்டைமலை சீனிவாசன் எப்படி படித்தார்?” என்று கேள்வி கேட்கிறார். (அனேகமா ‘நாம் தமிழர் கட்சி’யைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன்) இரட்டைமலை சீனிவாசன் படிக்கும்போதும் பார்ப்பன ஆதிக்கம்தான் இருந்தது, ’400 மாணவர்களில் 10 பேர் தவிர அனைவரும் பார்ப்பனர்கள்தான்’ என்று இரட்டைமலை சீனிவாசனே ‘ஜீவிய சரித்திர சுருக்கம்’ என்னும் தன் வாழ்க்கை வரலாற்று நூலில் பதிவுசெய்திருக்கிறார்.
sugunadiwakar29,619 Aufrufe • vor 4 Monaten

2025 ஜனவரி 26 – சென்ற ஆண்டு இதே நாளில்தான் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் நேர்காணல் ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ஈழத்துக்குச் சென்ற சீமான், பிரபாகரனைச் சந்தித்தது சில நிமிடங்களே, மற்றபடி அவர் சொல்வது அனைத்தும் பொய் என்று விரிவாகவும் தர்க்கபூர்வமாகவும் விவரித்திருந்தார். இதற்கு முன்பே இதே கூற்றை, புலிகள் இயக்கத்துடன் நேரடி தொடர்பிலிருந்த, ஈழப்போராட்டத்துக்காகப் பல தியாகங்களைச் செய்த தோழர் கொளத்தூர் மணி, வைகோ போன்றவர்கள் கூறியிருந்தபோதும், ‘சீமான் – பிரபாகரன் புகைப்படம் நான்தான் தயார் செய்துகொடுத்தேன்’ என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்தபோதும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் நேர்காணல் அந்த நிகழ்வின் முழுப்பின்னணியை விவரித்திருந்திருந்தது. மேலும் ‘தான் சொல்வதை மறுப்பதற்கு சீமான் விரும்பினால் விவாதத்துக்குத் தயார்’ என்றும் ‘தான் சொல்லக்கூடிய எல்லா விஷயங்களையும் தொழில்நுட்பரீதியில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறேன்’ என்றும் சந்தோஷ் தெரிவித்திருந்தார். இந்த நேர்காணல் வெளியான சில நாட்களில் ‘நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி வெளிப்படையான, நாகரிகமான விவாதத்தை ஏற்பாடு செய்தால் அதில் சீமான் பங்கேற்பார்’ என்று ‘நாம் தமிழர் கட்சி’யின் கொள்கை பரப்பு செயலாளர் ‘சாட்டை’ துரைமுருகன் தெரிவித்திருந்தார். ‘அப்படி ஒரு விவாதத்தை ஒழுங்கு செய்யத் தயார்’ என்று நியூஸ் 18 தொலைக்காட்சியும் அறிவித்திருந்தது. ஆனால் அதற்குப்பிறகு ‘நாம் தமிழர்’ தரப்பிலிருந்து எந்த சலனமும் இல்லை. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. ‘தர்க்கத்தில் என்னை வெல்ல யாருமில்லை’ என்று மேடைகளில் அடிக்கடி சொல்லும் சீமான், ஒளிப்பதிவாளர் சந்தோஷுடன் நேரடி விவாதத்தில் கலந்துகொண்டு தன் தரப்பு உண்மைகளை ஆதாரபூர்வமாக முன்வைக்கலாம்.
sugunadiwakar31,641 Aufrufe • vor 5 Monaten

’’சீமான் அண்ணாமலையுடன் இணைந்து ‘பரமசிவன் பாத்திமா’ என்ற இந்துத்துவ திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டபோது, கடந்த விவாத அரங்கில் கேள்வி கேட்டேன். ‘படம் வந்தபிறகு பார்க்கலாம்’ என்றீர்கள். படம் வந்தபிறகும் ஏன் பேசவில்லை?’’ என்று கேட்டேன். நேரடியான பதில் இல்லை. இதற்கு மட்டுமில்லை, நாம் தமிழர் அரசியல் குறித்தும் சீமானின் பொய்கள் குறித்தும் கேட்கப்பட்ட எந்தக் கேள்விகளுக்கும் பதில் இல்லை. நழுவல்வாதம், தி.மு.கவை நோக்கி குற்றச்சாட்டுகள் என்னும் திசைதிருப்பல் வாதம் மட்டும்தான் இருக்கிறதே தவிர நாம் தமிழர் கட்சி குறித்து கேட்கப்பட்ட எந்த கேள்விகளுக்கும் எந்த நேரடியான பதில்களும் இல்லை.
sugunadiwakar48,197 Aufrufe • vor 1 Jahr

தற்குறி தலைவர் சீமானும் தமிழர் தலைவர் பெரியாரும்… ‘தற்குறி’ என்ற வார்த்தையை ஏற்றுக்கொள்வதா என்பது விவாதத்துக்கு உட்பட்டதே. ஆனால் அப்படி ஏற்றுக்கொண்டால் தமிழ்நாட்டிலேயே ஆகச்சிறந்த தற்குறி என்று சீமானைத்தான் சொல்லவேண்டும். ஏனென்றால் அவருக்குப் பாரதியாரையும் தெரியாது, பெரியாரையும் தெரியாது, தமிழ்த்தேசியமும் தெரியாது, ஈழப்போராட்டமும் தெரியாது. வாசிப்போ வரலாற்று அறிவோ இல்லாமல் வாய்க்கு வந்ததைப் பேசுபவர்தான் சீமான். மேலோட்டமான தகவல்களுடன் கட்டுக்கதைகளைக் கலந்து வெறுப்பின் விஷம் விதைப்பதுதான் சீமானின் அரசியல். ’கதறு கதறு’ என்று கமெண்ட் போடுவது தற்குறித்தனம் என்றால் எந்த அறிவார்ந்த விவாதங்களுக்கும் முகம் கொடுக்காமல், யார் கேள்வி கேட்கிறார்களோ அவர்களின் பின்னணியே தெரியாமல், ‘தெலுங்கன்’ என்று முத்திரை குத்துவதும் தற்குறித்தனம்தான். தற்குறி தலைவர் எவ்வழியோ தற்குறி தம்பிகளும் அவ்வழியே! ‘பெரியாரைப் போற்றுவோம்’ என்ற தலைப்பில் சீமான் பேசியதில் எவ்வளவு உளறல்கள், பொய்யான தகவல்கள் இருந்தன என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். அதற்குமுன், சீமான் குறித்து ஏற்கனவே ஆதாரபூர்வமாக அம்பலமான விஷயங்களைப் பார்ப்போம். இந்துத்துவவாதிகளிடம் ஆதாயம் பெறுவதற்காக இன்று பெரியாரை இழிவு செய்யும் சீமான், நாளை வேறு எந்த ஆதாயம் பெறுவதற்காகவும் பிரபாகரனையும் இழிவு செய்ய தயங்கமாட்டார். ஏனெனில் சீமானுக்கு அரசியல் அறிவும் கிடையாது, அரசியல் நேர்மையும் கிடையாது. ‘சீமான் பெரியாருக்கு மட்டுமல்ல, பிரபாகரனுக்கும் எதிரிதான்’ என்று ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்திய வீடியோ. வழக்கம்போல் நாம் தமிழர் கட்சியினரிடம் இருந்து இதுவரை ஒரே ஒரு மறுப்போ பதிலோ வந்ததில்லை.
sugunadiwakar18,733 Aufrufe • vor 6 Monaten