#vanakkammodi

annamalai_k's profile picture

#VanakkamModi பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இன்று கலந்துக் கொண்டு சிறப்பித்த பின், தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை பல மடங்கு மேம்படுத்தும் மகத்தான பல வளர்ச்சித் திட்டங்களை மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு Narendra Modi அவர்கள் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். திருச்சிராப்பள்ளியில், சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை இன்று மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்துள்ளார். திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில், சுமார் 1,200 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட புதிய முனையக் கட்டிடத்தை, மாண்புமிகு பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார். அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த புதிய முனையத்தை, ஆண்டுதோறும் சுமார் 44 லட்சத்திற்கும் அதிகமான விமானப் பயணிகள் பயன்படுத்துவார்கள். மேலும், பாரதப் பிரதமர் அவர்கள், 41.4 கிமீ தொலைவுள்ள, சேலம்-மேக்னசைட் சந்திப்பு - ஓமலூர் - மேட்டூர் அணைப் பகுதிக்கான ரயில் வழித் தடங்களை இருவழிப் பாதையாக்குதல், மதுரை - தூத்துக்குடி 160 கிமீ தொலைவுள்ள ரயில் வழித் தடத்தை இருவழிப் பாதையாக்குதல், மற்றும் திருச்சிராப்பள்ளி - மானாமதுரை- விருதுநகர்; விருதுநகர் - தென்காசி சந்திப்பு; செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - திருநெல்வேலி – திருச்செந்தூர் ஆகிய மூன்று ரயில் வழித் தடங்களையும் மின்மயமாக்குதல். உட்பட பல ரயில்வே திட்டங்களை தமிழகத்துக்கு அர்ப்பணித்துள்ளார். மேலும் NH-81 திருச்சி - கல்லகம் பகுதிக்கான 39 கிமீ தொலைவு நான்கு வழிச் சாலை; NH-81 கல்லகம் - மீன்சுருட்டி பிரிவின் 60 கிமீ நீளமுள்ள 4/2-வழிப்பாதை; NH-785 செட்டிகுளம் - நத்தம் பிரிவு 29 கிமீ தொலைவு நான்குவழிச் சாலை; NH-536 காரைக்குடி - ராமநாதபுரம் பகுதியில் நடைபாதையுடன் கூடிய 80 கிமீ நீளமுள்ள இருவழிப்பாதை; மற்றும் 44 கிமீ நீளமுள்ள NH-179A சேலம் - திருப்பத்தூர் - வாணியம்பாடி நான்கு வழிச்சாலை என 5 நெடுஞ்சாலைத் திட்டங்களையும் தமிழகத்துக்கு அர்ப்பணித்துள்ளார். மேலும், தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள துறைமுகங்களை இணைக்கும் வண்ணம், முகையூரில் இருந்து மரக்காணம் வரையிலான NH 332A, 31 கிமீ நீளமுள்ள நான்கு வழிச் சாலைக்கு நமது அன்புக்குரிய பாரதப் பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும், சென்னை காமராஜர் துறைமுகத்தின் வாகனங்கள் ஏற்றுமதி/இறக்குமதி இரண்டாம் முனையத்தையும், கப்பல் நிறுத்தத் தளத்தையும் மாண்புமிகு பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் எண்ணூர் - திருவள்ளூர் - பெங்களூரு - புதுச்சேரி - நாகப்பட்டினம் - மதுரை - தூத்துக்குடி - செங்கல்பட்டு பகுதியிலிருந்து சாயல்குடி வரையிலான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எண்ணெய் நிறுவனம் அமைத்துள்ள 488 கிமீ நீளமுள்ள இயற்கை எரிவாயுக் குழாய்ப் பணிகளையும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 697 கிமீ நீளமுள்ள விஜயவாடா-தர்மபுரி மல்டிபுராடக்ட் பெட்ரோலியம் குழாய் மற்றும் ஆசனூரில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அமைத்துள்ள புதிய எரிவாயு குழாய் முனையத்தையும் மாண்புமிகு பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். கொச்சி-குட்டநாடு-பெங்களூரு-மங்களூர் கெயில் II திட்டத்தின் கீழ் எரிவாயு குழாய் அமைக்கும் பணிகளில், கிருஷ்ணகிரியில் இருந்து கோயம்புத்தூர் வரையிலான 323 கிமீ நீளத்திற்கு இயற்கை எரிவாயு குழாய் அமைக்க மாண்புமிகு பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும், கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விரைவு அணுஉலை எரிபொருள் மறுசுழற்சி ஆலையை, நமது மாண்புமிகு பிரதமர், நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில், 500 படுக்கைகள் கொண்ட ‘அமெதிஸ்ட்’ மாணவர் விடுதியையும் பிரதமர் திறந்து வைத்தார். இந்த உள்கட்டமைப்பு திட்டங்கள், தொடர்பை மேம்படுத்தி, தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நமது மாண்புமிகு பிரதமரின் விக்சித் பாரத் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக தமிழகத்தை முன்னிறுத்தவும் உதவும்.

K.Annamalai

70,827 次观看 • 2 年前